ETV Bharat / state

திருவள்ளூர் அருகே சாலையோர கடைகளை அகற்ற முயன்றதால் பரபரப்பு...! - merchants argument with officer

திருவள்ளூர்: மேட்டுப்பாளையம் கிராமத்தில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக, சாலையோர கடைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் முற்பட்டபோது, அவர்களுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

roadside shops
author img

By

Published : Nov 13, 2019, 5:07 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி - திருவொற்றியூர் நெடுஞ்சாலை அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தில், சாலை விரிவாக்கப் பணிகளுக்காக கடந்த 2011ஆம் ஆண்டு சாலையோரம் இருந்த 50க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் கடைகளை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.

இந்நிலையில், தற்போது சுமார் 50க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் காய்கறி, பழக்கடைகளை அப்பகுதியில் நடத்தி வருகின்றனர். இதனிடையே, சாலையோரத்தில் கடைகள் நடத்தக்கூடாது எனக் கூறிய பொன்னேரி நெடுஞ்சாலைத்துறையினர், அவற்றை அகற்ற முயன்றனர்.

clear roadside shops

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறையினர் தொடர்ந்து தொந்தரவு கொடுப்பதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் சிறு வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர். மேலும், தங்களின் நலன்கருதி அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி - திருவொற்றியூர் நெடுஞ்சாலை அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தில், சாலை விரிவாக்கப் பணிகளுக்காக கடந்த 2011ஆம் ஆண்டு சாலையோரம் இருந்த 50க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் கடைகளை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.

இந்நிலையில், தற்போது சுமார் 50க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் காய்கறி, பழக்கடைகளை அப்பகுதியில் நடத்தி வருகின்றனர். இதனிடையே, சாலையோரத்தில் கடைகள் நடத்தக்கூடாது எனக் கூறிய பொன்னேரி நெடுஞ்சாலைத்துறையினர், அவற்றை அகற்ற முயன்றனர்.

clear roadside shops

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறையினர் தொடர்ந்து தொந்தரவு கொடுப்பதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் சிறு வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர். மேலும், தங்களின் நலன்கருதி அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Intro:திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மேட்டுப் பாளையம் கிராமத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு பொன்னேரி நெடுஞ்சாலைத் துறையினர் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக சுமார் 50க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் கடைகளை அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனர் Body:திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மேட்டுப் பாளையம் கிராமத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு பொன்னேரி நெடுஞ்சாலைத் துறையினர் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக சுமார் 50க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் கடைகளை அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனர் இந்தநிலையில் தற்போது மீண்டும் அப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட
சிறு வியாபாரிகள் காய்கறி கடை பழக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளை நடத்தி வருகின்றனர் இந்த நிலையில் திடீரென பொன்னேரி நெடுஞ்சாலைத்துறையினர் சாலையோர கடைகளை நடத்தக்கூடாது எனக் கூறி
ஆக்கிரமிப்பு
என அதனை நெடுஞ்சாலைதுறை ஊழியர்கள் அகற்ற வந்தனர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் சாலையோர வியாபாரிகளுக்கு தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் தொந்தரவு அளிப்பதாகவும் இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது உள்ளதாகும் சிறு வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர் தங்களின் நலன் கருதி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.