திருவண்ணாமலை மாவட்டம் அருணை பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நாளை(பிப்.10) முதல் வரும் 26ஆம் தேதி வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதையொட்டி முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று(பிப்.9) நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "நாளை முதல் நடைபெற உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்த 25 ஆயிரம் இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இம்முகாமில் பங்கேற்க வரும் இளைஞர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றுபவர்களை கண்டால் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம்" என்றார்.
இதையும் படிங்க: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் - பி.ஆர்.நடராஜன் எம்பி!