ETV Bharat / state

2 குழந்தைகளைக் கொன்று தாயும் தற்கொலை! - Thiruvannamalai

திருவண்ணாமலை: சிறுவள்ளூர் கிராமத்தில் குடும்பத் தகராறு காரணமாக தனது இரண்டு பெண் குழந்தைகளை கொன்று, பெண்ணும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

CHILDKILLED
author img

By

Published : May 6, 2019, 2:22 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மனைவி செவ்வந்தி. இவருக்கு மதுஸ்ரீ (5), தனுஸ்ரீ (3) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாகவே ஜெய்சங்கருக்கு சரியாக வேலை கிடைக்காததால் வீட்டிலேயே மது அருந்திவந்துள்ளார். இதனால், கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

திருவண்ணாமலை
இறந்த பெண் குழந்தைகள்

இதனால் செவ்வந்தி தனது குழந்தைகளுடன் பக்கத்து தெருவில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். செவ்வந்தியின் தாய் அம்மணி அம்மாள் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள கோயில் திருவிழா நிகழ்ச்சிக்காக சென்றிருந்த நேரத்தில், அறையில் செவ்வந்தி தனது இரண்டு மகள்களையும் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். இதையடுத்து, தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார். அம்மணி அம்மாள் வீட்டிற்குள் வந்து பார்த்தபோது, பூஜை அறையில் செவ்வந்தி துாக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

குடும்பத் தகராறால் குழந்தைகளைக் கொன்று தாயும் தற்கொலை

மேலும், அவரது காலுக்கு அடியில் இருந்த தனது பேத்திகளைத் தூக்கி பார்த்தபோது கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடலாடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செவ்வந்தி, மதுஸ்ரீ, தனுஸ்ரீ ஆகிய மூன்று பேரின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மனைவி செவ்வந்தி. இவருக்கு மதுஸ்ரீ (5), தனுஸ்ரீ (3) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாகவே ஜெய்சங்கருக்கு சரியாக வேலை கிடைக்காததால் வீட்டிலேயே மது அருந்திவந்துள்ளார். இதனால், கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

திருவண்ணாமலை
இறந்த பெண் குழந்தைகள்

இதனால் செவ்வந்தி தனது குழந்தைகளுடன் பக்கத்து தெருவில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். செவ்வந்தியின் தாய் அம்மணி அம்மாள் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள கோயில் திருவிழா நிகழ்ச்சிக்காக சென்றிருந்த நேரத்தில், அறையில் செவ்வந்தி தனது இரண்டு மகள்களையும் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். இதையடுத்து, தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார். அம்மணி அம்மாள் வீட்டிற்குள் வந்து பார்த்தபோது, பூஜை அறையில் செவ்வந்தி துாக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

குடும்பத் தகராறால் குழந்தைகளைக் கொன்று தாயும் தற்கொலை

மேலும், அவரது காலுக்கு அடியில் இருந்த தனது பேத்திகளைத் தூக்கி பார்த்தபோது கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடலாடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செவ்வந்தி, மதுஸ்ரீ, தனுஸ்ரீ ஆகிய மூன்று பேரின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:இரண்டு பெண் குழந்தைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தாய், குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட சோக சம்பவம்.


Body:இரண்டு பெண் குழந்தைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தாய், குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட சோக சம்பவம்.

திருவண்ணாமலை மாவட்டம் சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மனைவி செவ்வந்தி அவர்களுக்கு மதுஸ்ரீ ஐந்து வயது தனுஸ்ரீ 3 வயது என்ற 2 மகள்கள் உள்ளனர்.

ஜெய்சங்கருக்கு கடந்த சில மாதங்களாக சரியாக வேலை கிடைக்காததால் வீட்டிலேயே மது அருந்தி விட்டு கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் மனவேதனை அடைந்த செவ்வந்தி தனது 2 மகள்களுடன் பக்கத்து தெருவில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

செவ்வந்தியின் தாய் அம்மணிஅம்மாள் அதே பகுதியில் உள்ள கோயில் திருவிழா நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார்.

அந்த வேலையில் அறையில் செவ்வந்தி தூக்கி மாட்டிக்கொண்டு தனது இரண்டு மகள்களையும் சாகடித்துள்ளார்.

கோவில் திருவிழாவிற்கு சென்று மீண்டும் திரும்பி வந்த அம்மணிஅம்மாள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பூஜைஅறையில் செவ்வந்தி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் அவரது காலுக்கு அடியில் இரண்டு மகன்களும் கிடந்தனர்.

தனது பேத்திகளைத் தூக்கி பார்த்த போது கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடலாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செவ்வந்தி, மதுஸ்ரீ, தனுஶ்ரீ ஆகிய 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்ப தகராறு காரணமாக இரண்டு மகள்களையும் கொன்று செவ்வந்தியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Conclusion:இரண்டு பெண் குழந்தைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தாய், குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட சோக சம்பவம்.

குடும்ப தகராறு காரணமாக இரண்டு மகள்களையும் கொன்று செவ்வந்தியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.