ETV Bharat / state

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி எரித்து கொலை!

author img

By

Published : Aug 21, 2020, 10:43 PM IST

திருவண்ணாமலை: ஆரணி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூதாட்டி எரித்து கொலை
மூதாட்டி எரித்து கொலை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள தேவாங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி ராஜேஸ்வரி. இவருடைய கணவர் நாராயணசாமி, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ராஜேஸ்வரிக்கு கோமதி என்ற பெண் உள்ளார். அவர் ஓண்ணுபுரம் என்ற பகுதியில் கணவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.

ராஜேஸ்வரி தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். அங்கு அவர் அப்பகுதி மக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று (ஆக.21) காலையில் ராஜேஸ்வரியின் வீடு உள்பக்கம் பூட்டியிருந்தது. இதில் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது மகள் கோமதிக்கு தகவலளித்துள்ளனர்.

பின்னர், கோமதி தாயாரின் வீட்டுக்கு வந்து அழைத்துள்ளார். அப்போதும் ராஜேஸ்வரி வெளியே வராததால் கதவை உடைத்து பார்த்துள்ளார். உள்ளே சென்றபோது, மூதாட்டி ராஜேஸ்வரி எரிந்த நிலையில் கிடந்துள்ளார். சம்பவம் தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னை ரவுடி சங்கர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள தேவாங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி ராஜேஸ்வரி. இவருடைய கணவர் நாராயணசாமி, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ராஜேஸ்வரிக்கு கோமதி என்ற பெண் உள்ளார். அவர் ஓண்ணுபுரம் என்ற பகுதியில் கணவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.

ராஜேஸ்வரி தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். அங்கு அவர் அப்பகுதி மக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று (ஆக.21) காலையில் ராஜேஸ்வரியின் வீடு உள்பக்கம் பூட்டியிருந்தது. இதில் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது மகள் கோமதிக்கு தகவலளித்துள்ளனர்.

பின்னர், கோமதி தாயாரின் வீட்டுக்கு வந்து அழைத்துள்ளார். அப்போதும் ராஜேஸ்வரி வெளியே வராததால் கதவை உடைத்து பார்த்துள்ளார். உள்ளே சென்றபோது, மூதாட்டி ராஜேஸ்வரி எரிந்த நிலையில் கிடந்துள்ளார். சம்பவம் தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னை ரவுடி சங்கர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.