திருவள்ளூர்: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் திமுக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம், மாவட்ட பொறுப்பாளர் டி. ஜெ. கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுடன் உரையாற்றிய மாவட்ட பொறுப்பாளர் டி. ஜெ. கோவிந்தராஜ், "பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய இரண்டு தொகுதிகளும் தற்போது, ஆளும் அதிமுகவிடம் இருக்கிறது. இன்னும் ஜந்து மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வர உள்ளது. அப்போது, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி ஆகிய இரண்டு தொகுதிகளையும் நாம் வெற்றி பெற்று தலைவர் ஸ்டாலினிடம் ஒப்படைக்க வேண்டும். வரும், 19ஆம் தேதி, கட்சி நிர்வாகிகளுடன் காணொளி காட்சி மூலம் ஸ்டாலின் உரையாற்ற உள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் கட்சியின் முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி, மாவட்ட அவை தலைவர் பகலவன், மாவட்ட பிரதிநிதி ஆனந்தகுமார், மாவட்ட பொறுப்பு குழ உறுப்பினர்கள், பேரூர் நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: வழிப்பறி கொள்ளையர்களை துரத்தி சென்று தர்ம அடி!