ETV Bharat / state

26 நாட்களில் ரூ. 58 லட்சம் காணிக்கை - சுப்ரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் அறிவிப்பு

author img

By

Published : Jan 29, 2020, 9:47 PM IST

திருவள்ளூர்: கடந்த 26 நாட்களில், 58 லட்சம் ரூபாய் காணிக்கை தொகையாக பெறப்பட்டுள்ளதாக திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் கனக்கிட்டு அறிவித்துள்ளது.

Subramaniya Swamy Koilg, சுப்பிரமணிய சுவாமி கோயில்
Subramaniya Swamy Koil

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருத்தலமாகும்.

இந்த திருத்தலத்திற்கு, அருகிலுள்ள கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களிலிருந்தும், மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இதனால் காணிக்கைத் தொகையும் அதிகம் பெறப்பட்டுவருகிறது.

இந்நிலையில், கோயில் காணிக்கைத் தொகையினை எண்ணுவதற்கு இந்து அறநிலையத் துறை ஆணையரிடமிருந்து அனுமதி பெற்று, மலைக்கோயில் தேவர் மண்டபத்தில் இன்று உண்டியல் பணம் எண்ணப்பட்டது.

உண்டியல் பணத்தை எண்ணுவதற்காக வரவழைக்கப்பட்ட தன்னார்வத் தொண்டர்களும் பக்தர்களும் திருக்கோயில் ஊழியர்கள் முன்னிலையில் பணத்தைக் கணக்கிட்டனர்.

எண்ணி முடித்து கணக்கிடப்பட்ட பின், 58 லட்சத்து 42 ஆயிரத்து 847 ரூபாய் பணமும், 220 கிராம் தங்க நகை மற்றும் 3 ஆயிரத்து 590 கிராம் வெள்ளி உள்ளிட்டவை கடந்த 26 நாட்களில் பெறப்பட்ட மொத்த காணிக்கைத் தொகை என கோயில் நிர்வாகம் கணக்கிட்டு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: தூய்மைப்படுத்தும் பணி: தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியர்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருத்தலமாகும்.

இந்த திருத்தலத்திற்கு, அருகிலுள்ள கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களிலிருந்தும், மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இதனால் காணிக்கைத் தொகையும் அதிகம் பெறப்பட்டுவருகிறது.

இந்நிலையில், கோயில் காணிக்கைத் தொகையினை எண்ணுவதற்கு இந்து அறநிலையத் துறை ஆணையரிடமிருந்து அனுமதி பெற்று, மலைக்கோயில் தேவர் மண்டபத்தில் இன்று உண்டியல் பணம் எண்ணப்பட்டது.

உண்டியல் பணத்தை எண்ணுவதற்காக வரவழைக்கப்பட்ட தன்னார்வத் தொண்டர்களும் பக்தர்களும் திருக்கோயில் ஊழியர்கள் முன்னிலையில் பணத்தைக் கணக்கிட்டனர்.

எண்ணி முடித்து கணக்கிடப்பட்ட பின், 58 லட்சத்து 42 ஆயிரத்து 847 ரூபாய் பணமும், 220 கிராம் தங்க நகை மற்றும் 3 ஆயிரத்து 590 கிராம் வெள்ளி உள்ளிட்டவை கடந்த 26 நாட்களில் பெறப்பட்ட மொத்த காணிக்கைத் தொகை என கோயில் நிர்வாகம் கணக்கிட்டு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: தூய்மைப்படுத்தும் பணி: தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியர்

Intro:திருத்தணி முருகன் கோவில் பக்தர்கள் 58 லட்சம் உண்டியலில் காணிக்கையாக 26 நாட்களில் செலுத்தியுள்ளனர் கோவில் நிர்வாகம் அறிவிப்பு.


Body:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருத்தலமாகும் இந்த திருத்தலத்தில் அருகில் உள்ள கர்நாடக மாநிலம் ஆந்திரா மாநிலம் மற்றும் பல்வேறு தமிழகத்தில் மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிக அளவில் வெளியூர் வெளி மாநிலம் வெளி மாவட்ட பக்தர்கள் முருகப் பெருமானை தரிசிக்க மலைக்கோவிலுக்கு அதிக அளவில் வருகிறார்கள். பக்தர்கள் முருகனை தரிசித்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் செலுத்திய தொகை யினை முருகன் கோவில் நிர்வாகம் எண்ணுவதற்கு இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் இருந்து அனுமதி பெற்று இன்று மலைக்கோவிலில் தேவர் மண்டபத்தில் உண்டியல் பணம் என்பதற்கு தன்னார்வத் தொண்டர்கள் பக்தர்கள் திருக்கோயில் ஊழியர்கள் ஆகியோர் திருக்கோயிலில் இணை ஆணையர் செயல் அலுவலர் பழனிக்குமார்,கோயில் தக்கார் ஜெய்சங்கர்,உதவி ஆணையர் ரமணி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் பணம் எண்ணப்பட்டது. உண்டியல் பணம் எண்ணிய பிறகு முடிவில் திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு பணம் ரூபாய் 58 லட்சத்து 42 ஆயிரத்து 847 ரூபாய் பணமும்,220 கிராம் தங்க நகையும் மற்றும் வெள்ளி 3 ஆயிரத்து 590 கிராம் ஆகியவை 26 நாட்களில் பக்தர்கள் முருகன் கோவிலுக்கு காணிக்கையாக செலுத்திய தொகை என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.