ETV Bharat / state

கொத்தடிமைகளாக இருந்த இருளர் குடும்பத்தினரை மீட்ட கோட்டாட்சியர்!

author img

By

Published : Oct 23, 2020, 12:02 AM IST

திருவள்ளூர்: திருத்தணியில் மர வியாபாரியிடம் கொத்தடிமைகளாக இருந்த இருளர் குடும்பத்தினர் சேர்ந்த ஏழு பேரை வருவாய் கோட்டாட்சியர் சத்யா மீட்டு நிவாரணம் வழங்கினார்.

இருளர் குடும்பத்தினரை மீட்ட கோட்டாட்சியர்
இருளர் குடும்பத்தினரை மீட்ட கோட்டாட்சியர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த திருவாலங்காடு ஒன்றியம், கோடிவள்ளி கிராமம் அருகே இரண்டு இருளர் குடும்பத்தினர் குடிசை வீட்டில் வசித்துவருவதாகவும், மர வியாபாரியிடம் கொத்தடிமைகளாக இருந்து வருவதாகவும் வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்யா, தாசில்தார் உமா ஆகியோர் கோடிவள்ளி கிராமத்திற்கு சென்று கொத்தடிமைகளாக இருந்த இரண்டு இருளர் குடும்பத்தினர் சேர்ந்த, கோபி(33), சுமதி(31), சங்கர்(28), தேசம்மா(23), நந்தினி(12), யுவராஜ்(7), ஆனந்த்(5) ஆகிய ஏழு பேரை மீட்டனர்.

இருளர் குடும்பத்தினரை மீட்ட கோட்டாட்சியர்

பின்னர், அவர்களை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விடுதலை சான்று, அரிசி, பருப்பு, தலா ஆயிரம் ரூபாய் பணம் வழங்கி, இருளர்களின் சொந்த ஊரான ராமாபுரம் இருளர் காலனிக்கு அனுப்பி வைத்தனர்.

முதல்கட்ட விசாரணையில், கொத்தடிமைகளாக இருந்த இரண்டு இருளர் குடும்பத்தினர், ராணிப்பேட்டை மாவட்டம் பராஞ்சி பகுதியைச் சேர்ந்த மர வியாபாரி ரமேஷ்(40) என்பவர் இரண்டு குடும்பத்தினருக்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் கடனாக வழங்கி, நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மரங்களை வெட்டும் பணியில் ஈடுபடுத்தியுள்ளார்.

இவர்களுக்கு குடிசை வீடு அமைத்து வாரத்திற்கு 500 ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார் என தெரியவந்தது. தற்போது தலைமறைவான ரமேஷ் மீது வழக்கு பதிந்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் முறைகேடு - நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த திருவாலங்காடு ஒன்றியம், கோடிவள்ளி கிராமம் அருகே இரண்டு இருளர் குடும்பத்தினர் குடிசை வீட்டில் வசித்துவருவதாகவும், மர வியாபாரியிடம் கொத்தடிமைகளாக இருந்து வருவதாகவும் வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்யா, தாசில்தார் உமா ஆகியோர் கோடிவள்ளி கிராமத்திற்கு சென்று கொத்தடிமைகளாக இருந்த இரண்டு இருளர் குடும்பத்தினர் சேர்ந்த, கோபி(33), சுமதி(31), சங்கர்(28), தேசம்மா(23), நந்தினி(12), யுவராஜ்(7), ஆனந்த்(5) ஆகிய ஏழு பேரை மீட்டனர்.

இருளர் குடும்பத்தினரை மீட்ட கோட்டாட்சியர்

பின்னர், அவர்களை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விடுதலை சான்று, அரிசி, பருப்பு, தலா ஆயிரம் ரூபாய் பணம் வழங்கி, இருளர்களின் சொந்த ஊரான ராமாபுரம் இருளர் காலனிக்கு அனுப்பி வைத்தனர்.

முதல்கட்ட விசாரணையில், கொத்தடிமைகளாக இருந்த இரண்டு இருளர் குடும்பத்தினர், ராணிப்பேட்டை மாவட்டம் பராஞ்சி பகுதியைச் சேர்ந்த மர வியாபாரி ரமேஷ்(40) என்பவர் இரண்டு குடும்பத்தினருக்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் கடனாக வழங்கி, நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மரங்களை வெட்டும் பணியில் ஈடுபடுத்தியுள்ளார்.

இவர்களுக்கு குடிசை வீடு அமைத்து வாரத்திற்கு 500 ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார் என தெரியவந்தது. தற்போது தலைமறைவான ரமேஷ் மீது வழக்கு பதிந்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் முறைகேடு - நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.