ETV Bharat / state

வன்னியர் சொத்து...! ஸ்டாலினுக்கு அன்புமணி சவால் - PMK Anbumani Ramadoss

திருவள்ளூர்: திருத்தணியில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, வன்னியர்கள் சொத்துக்களை அபகரித்ததாக எங்கள்மீது குற்றம்சாட்டும் ஸ்டாலின், அதனை நிரூபித்தால் அவர் சொல்வதை நாங்கள் செய்கிறோம் என சவால் விடுத்துள்ளார்.

thiruttani
author img

By

Published : Apr 4, 2019, 9:35 AM IST

திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி போட்டியிடுகிறார்.திருத்தணியில் நேற்று திருத்தணி கமலா திரையரங்கம் அருகே பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தமிழ்நாட்டிற்கானஉரிமைகளை வென்றெடுக்க அதிமுக தலைமையிலான இந்த வெற்றிக் கூட்டணி மாம்பழ சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர், 'எதிர் வேட்பாளர் திமுக ஜெகத்ரட்சகன் 10 ஆண்டுகளாக மக்களவை உறுப்பினராக இருந்தவர். ஆனால், தொகுதிக்காக ஒரு துரும்பைகூட செய்யவில்லை.தேர்தல் நேரத்தில் மட்டும் தொகுதிக்கு பண மூட்டையுடன் வருவார். இலங்கையில் 26 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். மது ஆலைகள் மற்றும் பல கல்லூரிகள் வைத்துள்ள அவர்இங்கு ஒரு பள்ளியோ, கல்லூரியோ, தொழிற்சாலையையோ அமைக்கவில்லை' என குற்றச்சாட்டினார்.

மேலும், அன்புமணி கூறுகையில், நாங்கள் வன்னியர்கள் சொத்தை அபகரித்துவிட்டதாக குற்றஞ்சாட்டி தேர்தல் பரப்புரையில் ஸ்டாலின் பேசிவருகிறார். எங்கள் பெயரில் ஒரே ஒரு சென்ட் வன்னியர் சொத்தை அபகரித்து விட்டோம் என்று சிபிஐ மூலமாகவோ (அ) நீதிமன்றம் மூலமாகவோ நிரூபித்தால் நீங்கள் சொல்வதை நாங்கள் கேட்கிறோம் என சவால் விடுத்தார்.

நிரூபிக்க முடியவில்லையென்றால், நான் ஒன்றே ஒன்று சொல்கிறேன். ஸ்டாலின் திமுக தலைவர் பதவியிலிருந்து விலகவேண்டும்என அவர் தெரிவித்தார்.

அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரை

திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி போட்டியிடுகிறார்.திருத்தணியில் நேற்று திருத்தணி கமலா திரையரங்கம் அருகே பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தமிழ்நாட்டிற்கானஉரிமைகளை வென்றெடுக்க அதிமுக தலைமையிலான இந்த வெற்றிக் கூட்டணி மாம்பழ சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர், 'எதிர் வேட்பாளர் திமுக ஜெகத்ரட்சகன் 10 ஆண்டுகளாக மக்களவை உறுப்பினராக இருந்தவர். ஆனால், தொகுதிக்காக ஒரு துரும்பைகூட செய்யவில்லை.தேர்தல் நேரத்தில் மட்டும் தொகுதிக்கு பண மூட்டையுடன் வருவார். இலங்கையில் 26 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். மது ஆலைகள் மற்றும் பல கல்லூரிகள் வைத்துள்ள அவர்இங்கு ஒரு பள்ளியோ, கல்லூரியோ, தொழிற்சாலையையோ அமைக்கவில்லை' என குற்றச்சாட்டினார்.

மேலும், அன்புமணி கூறுகையில், நாங்கள் வன்னியர்கள் சொத்தை அபகரித்துவிட்டதாக குற்றஞ்சாட்டி தேர்தல் பரப்புரையில் ஸ்டாலின் பேசிவருகிறார். எங்கள் பெயரில் ஒரே ஒரு சென்ட் வன்னியர் சொத்தை அபகரித்து விட்டோம் என்று சிபிஐ மூலமாகவோ (அ) நீதிமன்றம் மூலமாகவோ நிரூபித்தால் நீங்கள் சொல்வதை நாங்கள் கேட்கிறோம் என சவால் விடுத்தார்.

நிரூபிக்க முடியவில்லையென்றால், நான் ஒன்றே ஒன்று சொல்கிறேன். ஸ்டாலின் திமுக தலைவர் பதவியிலிருந்து விலகவேண்டும்என அவர் தெரிவித்தார்.

அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரை
Intro:திருவள்ளூர் திருத்தணியில் மாம்பழத்தில் இருபக்கமும் இலை இருப்பதால் இது இயற்கையான கூட்டணி இதன் நோக்கம் தமிழக உரிமைகளை வென்றெடுப்பது தான் என்று பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சாரம்.


Body:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கமலா திரையரங்கம் அருகே அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் ஏகே மூர்த்தி ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தமிழகத்துக்கான உரிமைகளை வென்றெடுக்க அதிமுக தலைமையிலான இந்த வெற்றிக் கூட்டணி மாம்பழ சின்னத்திற்கு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது எதிர் வேட்பாளர் திமுக ஜெகத்ரட்சகன் 10 ஆண்டு காலமாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். ஆனால் தொகுதிக்காக ஒரு துரும்பையும் கூட செய்யவில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் பண மூட்டையுடன் வருவார் தொகுதிக்கு ஜெகத்ரட்சகன் இலங்கையில் 26 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார் மது ஆலைகள் மற்றும் பல கல்லூரிகளில் வைத்துள்ளார் ஆனால் அவரது தொகுதியான இங்கு ஒரு பள்ளியோ கல்லூரியோ தொழிற்சாலையை அமைக்க வில்லை என குற்றச்சாட்டு தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்த சிங்களவர்கள் நலம் பெறும் நோக்கில் அங்கு முதலீடு செய்துள்ளார். இதை தொடர்ந்து அவர் பேசியதாவது நேற்று முன் தினம் வேலூரில் பிரச்சாரம் சேலம் ஒன்றில் பேசும் ஸ்டாலின் நாங்கள் வன்னியர்கள் சொத்தை அபகரித்து விட்டதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு வைக்கிறார். அதற்கு அன்புமணி கூறியதாவது என் மீதோ இல்லை என் அப்பா மீது இல்லை என் அம்மா மீது ஒரே ஒரு சென்ட் வன்னியர் சொத்தை நாங்கள் அபகரித்து விட்டோம் என்று நீங்கள் சிபிஐ மூலமாகவோ அல்லது நீதிமன்றம் மூலமாக நிரூபித்தால் நீங்கள் சொல்வதை நாங்கள் கேட்கிறோம் அப்படி நிரூபிக்கவில்லை என்றால் நான் ஒன்றே ஒன்று சொல்கிறேன் அதை நீங்கள் செய்ய தயாரா என்ற கேள்வியை அன்புமணி முன்வைத்தார். அப்படி நீங்கள் நிரூபிக்க வில்லை என்றால் உங்கள் திமுக தலைவர் பதவியில் இருந்து விலகத் தயாரா என்றார் ஏனென்றால் உங்கள் கட்சியில் நிறைய பேர் நீங்கள் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் அதிலும் முக்கியமாக உங்கள் அண்ணன் அழகிரி அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். என்று கூறியது மட்டுமில்லாமல் திமுகவினரே ஸ்டாலின் மீது கோபத்தில் உள்ளனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.