ETV Bharat / state

நடத்தையில் சந்தேகம்: மனைவியைக் கொன்றவர் கைது!

author img

By

Published : Apr 17, 2020, 12:55 PM IST

திருவள்ளூர்: கவரைப்பேட்டை அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலைசெய்தவர் கைதுசெய்யப்பட்டார்.

மனைவியை கொலை செய்த கணவர்
மனைவியை கொலை செய்த கணவர்

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அடுத்த குருவராஜாகண்டிகையைச் சேர்ந்தவர் கட்டட தொழிலாளி ரமேஷ். இவரது மனைவி புஷ்பா. ரமேஷ் தனது மனைவியின் மீது சந்தேகப்பட்டு அடிக்கடி அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு வழக்கம்போல் ரமேஷுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் தூங்கச் சென்றனர். பின்னர், நடு இரவில் எழுந்து ரமேஷ் தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்தினார்.

புஷ்பாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கவரைப்பேட்டை காவல் துறையினர் புஷ்பாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மனைவியை கொலைசெய்த கணவர்

பின்னர், ரமேஷை கைதுசெய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியைக் கொடூரமாகக் கொலைசெய்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கணவருக்கு கொல்லி வைத்த மனைவி... இறுதிச்சடங்கை வீடியோ காலில் மகன் பார்த்த சோகம்!

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அடுத்த குருவராஜாகண்டிகையைச் சேர்ந்தவர் கட்டட தொழிலாளி ரமேஷ். இவரது மனைவி புஷ்பா. ரமேஷ் தனது மனைவியின் மீது சந்தேகப்பட்டு அடிக்கடி அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு வழக்கம்போல் ரமேஷுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் தூங்கச் சென்றனர். பின்னர், நடு இரவில் எழுந்து ரமேஷ் தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்தினார்.

புஷ்பாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கவரைப்பேட்டை காவல் துறையினர் புஷ்பாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மனைவியை கொலைசெய்த கணவர்

பின்னர், ரமேஷை கைதுசெய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியைக் கொடூரமாகக் கொலைசெய்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கணவருக்கு கொல்லி வைத்த மனைவி... இறுதிச்சடங்கை வீடியோ காலில் மகன் பார்த்த சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.