ETV Bharat / state

மனைவியைக் கொன்று தற்கொலை செய்துகொண்ட கணவன்! - பூந்தமல்லி அருகே சோகம்

author img

By

Published : Sep 10, 2019, 8:29 AM IST

Updated : Sep 11, 2019, 7:22 AM IST

திருவள்ளூர்: நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியைக் கொலை செய்து கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Murder

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே உள்ள பாப்பான் சத்திரம், பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் மாரி (எ) மாரிமுத்து(60). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரிக்குச் சொந்தமான தோட்டத்தைப் பராமரிக்கும் பணி செய்துவந்தார். இவரது மனைவி ரேவதி(54). இந்நிலையில், மாரி-ரேவதி இருவரும் தங்களது இளைய மகனுக்கு பெண் பார்க்கச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளனர்.

தூக்கில் சடலமாகத் தொங்கிய தந்தை... கொலையுண்ட தாய்

பெண் பார்க்கச் சென்ற இருவரும் வீடு திரும்பாததால் அவர்களது மகன்கள் சந்தேகமடைந்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் மாரி பணிபுரியும் தோட்டத்திற்குச் சென்று பார்த்தபோது அங்குள்ள மரமொன்றில் அவர் இறந்தநிலையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.

மேலும், அங்கிருந்து சிறிது தூரம் சென்று பார்த்தபோது ரேவதி தலையில் காயங்களுடன் வேட்டியால் கழுத்து இறுக்கப்பட்டு இறந்துகிடந்துள்ளார். இதனைக் கண்டு அவரது மகன்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

Husband Murder Wife  Doubt in behavior  திருவள்ளுர்  நடத்தையில் சந்தேகம்  மனைவியை கொன்ற கணவன்  Tiruvallur
இறந்தவர்களின் சடலங்கள்

விசாரணையில் இறங்கிய காவல் துறை

பின்னர் இது குறித்து நசரத்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலங்களைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து அறிவதற்கு காவல் துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர்.

மனைவி மீது சந்தேகத்தால் தகராறு

அப்போது காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின்படி, மாரி பல ஆண்டுகளாக தனியார் கல்லூரிக்குச் சொந்தமான தோட்டத்தைப் பராமரித்துக்கொண்டு அங்குள்ள வீட்டில் தங்கிவந்தார். சில நேரங்களில் அவரது மனைவியும் அந்த வீட்டில் தங்குவார். அப்போது, மாரிக்கு ரேவதியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது.

ரேவதியின் கழுத்தை இறுக்கிக் கொலை

இதனால் ஆத்திரமடைந்த மாரி தனது மனைவியை கட்டையால் தாக்கியுள்ளார். அப்போது, அவரிடமிருந்து தப்பிக்க முயன்ற ரேவதி அந்தத் தோட்டத்தின் வழியாக சிறிது தூரம் ஓடியுள்ளார். தொடர்ந்து, மாரி அவரை விடாமல் விரட்டிச் சென்று சரமாரியாக தாக்கி தான் அணிந்திருந்த வேட்டியைக் கழற்றி ரேவதியின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட மாரி

அதன்பின்னர் அந்தத் தோட்டத்தில் உள்ள மரத்தில் மாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும் இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடத்தையில் சந்தேகம் மனைவியைக் கொன்று கணவன் தற்கொலை

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே உள்ள பாப்பான் சத்திரம், பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் மாரி (எ) மாரிமுத்து(60). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரிக்குச் சொந்தமான தோட்டத்தைப் பராமரிக்கும் பணி செய்துவந்தார். இவரது மனைவி ரேவதி(54). இந்நிலையில், மாரி-ரேவதி இருவரும் தங்களது இளைய மகனுக்கு பெண் பார்க்கச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளனர்.

தூக்கில் சடலமாகத் தொங்கிய தந்தை... கொலையுண்ட தாய்

பெண் பார்க்கச் சென்ற இருவரும் வீடு திரும்பாததால் அவர்களது மகன்கள் சந்தேகமடைந்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் மாரி பணிபுரியும் தோட்டத்திற்குச் சென்று பார்த்தபோது அங்குள்ள மரமொன்றில் அவர் இறந்தநிலையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.

மேலும், அங்கிருந்து சிறிது தூரம் சென்று பார்த்தபோது ரேவதி தலையில் காயங்களுடன் வேட்டியால் கழுத்து இறுக்கப்பட்டு இறந்துகிடந்துள்ளார். இதனைக் கண்டு அவரது மகன்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

Husband Murder Wife  Doubt in behavior  திருவள்ளுர்  நடத்தையில் சந்தேகம்  மனைவியை கொன்ற கணவன்  Tiruvallur
இறந்தவர்களின் சடலங்கள்

விசாரணையில் இறங்கிய காவல் துறை

பின்னர் இது குறித்து நசரத்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலங்களைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து அறிவதற்கு காவல் துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர்.

மனைவி மீது சந்தேகத்தால் தகராறு

அப்போது காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின்படி, மாரி பல ஆண்டுகளாக தனியார் கல்லூரிக்குச் சொந்தமான தோட்டத்தைப் பராமரித்துக்கொண்டு அங்குள்ள வீட்டில் தங்கிவந்தார். சில நேரங்களில் அவரது மனைவியும் அந்த வீட்டில் தங்குவார். அப்போது, மாரிக்கு ரேவதியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது.

ரேவதியின் கழுத்தை இறுக்கிக் கொலை

இதனால் ஆத்திரமடைந்த மாரி தனது மனைவியை கட்டையால் தாக்கியுள்ளார். அப்போது, அவரிடமிருந்து தப்பிக்க முயன்ற ரேவதி அந்தத் தோட்டத்தின் வழியாக சிறிது தூரம் ஓடியுள்ளார். தொடர்ந்து, மாரி அவரை விடாமல் விரட்டிச் சென்று சரமாரியாக தாக்கி தான் அணிந்திருந்த வேட்டியைக் கழற்றி ரேவதியின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட மாரி

அதன்பின்னர் அந்தத் தோட்டத்தில் உள்ள மரத்தில் மாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும் இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடத்தையில் சந்தேகம் மனைவியைக் கொன்று கணவன் தற்கொலை
Intro:Body:tn_trl_02_poonamalle_doubledeath_vis_script_tn10022Conclusion:
Last Updated : Sep 11, 2019, 7:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.