ETV Bharat / state

ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன், மனைவி!

திருவள்ளூர்: செங்குன்றத்தில் குடும்ப பிரச்னையால் கணவன், மனைவி இருவரும் ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

suicide
author img

By

Published : Jun 28, 2019, 11:15 PM IST

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் ஜிஎன்டி சாலை அருகே சாமியார் மடம் என்ற பகுதியில் வசித்து வருபவர் மதன்(38), இவர் டாட்டா ஏசி வாகனத்தை வாடகைக்கு கொடுத்து தொழில் செய்து வருகிறார். அவருடைய மனைவி கௌசல்யா(35). இவர்களுக்கு வெற்றிமாறம்(9), பிரவீனா(7) என்ற குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், மதனுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டை வருவதும் பின் சமாதானமாவதும் வழக்கமான ஒன்றாக இருந்துள்ளது. இந்நிலையில், இன்று கணவன் மனைவி இருவருக்கும் பிரச்னை அதிகமாகி வாக்குவாதம் வரை சென்று, பின் கௌசல்யா மன வேதனையில் புடவையினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனை கண்ட மதனும் அதே புடவையில் தூக்கிட்டுக் கொண்டுள்ளார். அச்சமயம் அவர்களது குழந்தைகள் பள்ளியில் இருந்து வர, வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டிய நிலையில் இருக்கவும், அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து ஜன்னலின் வழியாக எட்டி பார்த்ததில் இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

உடனடியாக செங்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன்-மனைவி இருவரும் ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தினால் அவர்களது குழந்தைகள் பெற்றோர்களின்றி தவித்தது அப்பகுதியில் உள்ளோரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் ஜிஎன்டி சாலை அருகே சாமியார் மடம் என்ற பகுதியில் வசித்து வருபவர் மதன்(38), இவர் டாட்டா ஏசி வாகனத்தை வாடகைக்கு கொடுத்து தொழில் செய்து வருகிறார். அவருடைய மனைவி கௌசல்யா(35). இவர்களுக்கு வெற்றிமாறம்(9), பிரவீனா(7) என்ற குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், மதனுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டை வருவதும் பின் சமாதானமாவதும் வழக்கமான ஒன்றாக இருந்துள்ளது. இந்நிலையில், இன்று கணவன் மனைவி இருவருக்கும் பிரச்னை அதிகமாகி வாக்குவாதம் வரை சென்று, பின் கௌசல்யா மன வேதனையில் புடவையினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனை கண்ட மதனும் அதே புடவையில் தூக்கிட்டுக் கொண்டுள்ளார். அச்சமயம் அவர்களது குழந்தைகள் பள்ளியில் இருந்து வர, வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டிய நிலையில் இருக்கவும், அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து ஜன்னலின் வழியாக எட்டி பார்த்ததில் இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

உடனடியாக செங்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன்-மனைவி இருவரும் ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தினால் அவர்களது குழந்தைகள் பெற்றோர்களின்றி தவித்தது அப்பகுதியில் உள்ளோரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

தூக்கிட்டு தற்கொலை
Intro:செங்குன்றத்தில் குடும்ப பிரச்சனையால் கணவன் மனைவி இருவரும் ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுBody:செங்குன்றம் ஜிஎன்டி சாலை அருகே சாமியார் மடம் என்ற பகுதியில் வசித்து வருபவர் மதன் வயது 38 இவர் டாட்டா ஏசி வாகனத்தை வாடகைக்கு விட்டு அதன் மூலம் தொழில் புரிந்து வருகிறார் அவருடைய மனைவி கௌசல்யா வயது 35 இவர்களுக்கு கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தேறியது இதில் வெற்றிமாறன் வயது 9 என்ற மகனும் பிரவீனா வயது 7 என்ற மகளும் இருக்கிறார்கள்.இவர்கள் அருகிலுள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.


இவரது குடும்ப வாழ்க்கையில் அடிக்கடி சண்டை ஏற்படுவதும் பின்னர் சமாதானம் ஆகி விடுவதுமாக இருந்து வந்த நிலையில் இன்று மதியம் சுமார் 3 மணி அளவில் கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை மூண்டது.

இதனால் வாய்த்தகராறு முற்றி இருவரும் மனம் வெறுத்து வந்த நிலையில் திடீரென தனது மனைவி கவுசல்யா புடவையால் தனது வீட்டின் ஒர்அறைக்கு ஓடிச்சென்று புடவையால் மின்விசிறியில் தூக்கு மாட்டினார் அதை கண்டு அலறிய மதனும் அதே புடவையில் இருவருமாக சேர்ந்து ஒன்றாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.


இந்த விபரீத இதனை உணராத அருகிலுள்ள பள்ளிக்கு சென்ற சிறுவர்கள் இருவரும் வீட்டின் கதவை திறக்க முற்பட்டனர் ஆனால் வீடு உள்புறமாக தாழிட்டு இருந்தது.

இதனைக் கண்ட அருகிலுள்ளோர் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்ததில் இருவரும் தூக்கில் இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றனர்.

உடனே இதுபற்றி செங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .


இதுபற்றி கௌசல்யாவின் சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம் காரணி பேட்டை கோடுவெளி கிராமத்தில் உள்ள அவளுடைய பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுபற்றி செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்


கணவன்-மனைவி பிரச்சனையால் இருவரும் தூக்கிலிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது பெற்றவர்களை பறிகொடுத்த மகன் வெற்றிமாறன் மகள் பிரவீனா இருவரும் அப்பாவிகள் போல தவித்தது அப்பகுதி மக்களை கண்கலங்க செய்தது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.