உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின்போது கரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற மருத்துவர்கள், துப்புரவுப் பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் கடுமையாக பணியாற்றி வருகின்றனர்.
அந்த வகையில், மக்களை தேடிச்சென்று உதவி செய்துவரும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனுக்கு, ட்விட்டர் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், அவரது தலைமையின் கீழ் பணிபுரியும் காவல்துறையினர் சிறப்பான முறையில் பணியாற்றி வருவதாக ட்விட்டரில் முதலமைச்சர் பழனிசாமி பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: நெல்லை மாநகர காவல் துணை ஆணையருக்கு முதலமைச்சர் ட்விட்டரில் பாராட்டு