ETV Bharat / state

போகி பண்டிகை 2024; தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டம்!

Bhogi Celebration: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள், பழைய பொருட்களை எரித்தும், சிறுவர்கள் மேளங்கள் இசைத்தும் போகி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 14, 2024, 1:16 PM IST

போகி பண்டிகை 202
போகி பண்டிகை 202
போகி பண்டிகை 202

திருவள்ளூர்: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் ஜன.14ஆம் தேதி போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் கடைசி நாளான போகி பண்டிகை அன்று, மக்கள் தங்கள் வீட்டினை சுத்தப்படுத்தி, வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிப்பது வழக்கம். கிராமப்புறங்களில் வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் பணியினையும் மேற்கொள்கின்றனர்.

போகி பண்டிகையை பழையன கழிதல் புதியன புகுதல் என்று குறிப்பிடுவதற்கிணங்க, மக்கள் தங்கள் வீடுகளை சுத்தப்படுத்துவர். போகி பண்டிகை என்பது, வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களையும், குப்பைகளையும் ஒழிப்பது மட்டுமல்லாமல், மனதில் இருக்கும் தேவையற்ற எண்ணங்கள், தீய சிந்தனைகளையும் போட்டு பொசுக்கக் கூடிய நல்ல நாளாக கருதப்படுகின்றது.

தற்போது வட கிழக்கு பருவமழையின் தீவிரம் குறைந்த நிலையில், பனிப்பொழிவு சற்று அதிகரித்து வருகிறது. இந்த பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் நோய் பாதிப்பை குறைக்கவே, போகி பண்டிகை கொண்டாடுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போகி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் போகி பண்டிகையை முன்னிட்டு, அதிகாலை முதலே வீடுதோறும் சுத்தம் செய்து, வாசலில் வண்ணக் கோலங்கள் இட்டும், பழைய துணிகளை வீட்டு முன்பு எரித்தும் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்கின்றனர். சிறுவர்கள் மேளங்களை அடித்தும் தங்கள் மகிழ்ச்சியை போகிப் பண்டிகை மூலம் கொண்டாடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் காலை 8 மணி வரை அதிக அளவில் மூடு பணி காரணமாக, வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டுச் சென்றனர். கீழ்பென்னாத்தூர் சுற்றியுள்ள வேட்டவலம், சோமாசிபாடி, மேக்களூர், வேடந்தவாடி, கருமாரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 8 மணி வரை அதிக அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டது.

மேலும், சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதால், இருசக்கர வாகனங்கள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டு பெரும் சிரமத்துடன் சென்றனர். மேலும் கீழ்பென்னாத்தூர் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ஊட்டி கொடைக்கானல் போன்று பனிப்பொழிவு ரம்மியமாக காட்சி அளித்தது. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் ரசித்தனர்.

அதேபோல், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த வாரம் முழுவதும் மழை பெய்த நிலையில், நேற்று இரவு முதலே கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்நிலையில், காலை 8 மணி தாண்டியும் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, மங்கைநல்லூர், மணல்மேடு, மன்னம்பந்தல், பெரம்பூர், பொறையார் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று, கிராமப் பகுதிகள் மட்டுமின்றி, நகர் பகுதிகளிலும் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அதிகாலை முதல் தங்கள் வீடுகளுக்கு முன்பு தங்கள் வீட்டில் உள்ள பழைய பொருட்களை தீ மூட்டி எரிய வைத்து, உற்சாகமாக போகி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பண்டிகைக்காக பொதுமக்கள் குப்பைகளை தீயிட்டு கொளுத்துவதால் புகை மூட்டமும் அதிகமாக காணப்படுகிறது. அதேபோல காலை நேரத்தில் நடை பயிற்சிக்கு சென்ற பொதுமக்களும், பொங்கல் பண்டிகைக்காக வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு வரும் பேருந்து பயணிகள் என பலரும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஏற்கனவே பெய்த கனமழையால் சம்பா பயிர்கள் சாய்ந்து மழை நீரில் மூழ்கி உள்ள நிலையில், தற்போது மழை நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடும் பனிப்பொழிவின் காரணமாக நெற்பயிர்களில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பொதுமக்கள் உற்சாகமாக போகி பண்டிகை கொண்டாடி வருகின்றனர். சிறுவர்கள் மேளங்களை அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி அதிகாலை வேளையில் மகிழ்ச்சியுடன் போகி பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் போகி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில், பனிப்பொழிவும் அதிகமாக காணப்படுகிறது.

இதையும் படிங்க: ஜன.16-ல் சூரியூர் ஜல்லிக்கட்டு: சூடுபிடிக்கும் ஜல்லிக்கட்டு மைதானம்..!

போகி பண்டிகை 202

திருவள்ளூர்: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் ஜன.14ஆம் தேதி போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் கடைசி நாளான போகி பண்டிகை அன்று, மக்கள் தங்கள் வீட்டினை சுத்தப்படுத்தி, வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிப்பது வழக்கம். கிராமப்புறங்களில் வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் பணியினையும் மேற்கொள்கின்றனர்.

போகி பண்டிகையை பழையன கழிதல் புதியன புகுதல் என்று குறிப்பிடுவதற்கிணங்க, மக்கள் தங்கள் வீடுகளை சுத்தப்படுத்துவர். போகி பண்டிகை என்பது, வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களையும், குப்பைகளையும் ஒழிப்பது மட்டுமல்லாமல், மனதில் இருக்கும் தேவையற்ற எண்ணங்கள், தீய சிந்தனைகளையும் போட்டு பொசுக்கக் கூடிய நல்ல நாளாக கருதப்படுகின்றது.

தற்போது வட கிழக்கு பருவமழையின் தீவிரம் குறைந்த நிலையில், பனிப்பொழிவு சற்று அதிகரித்து வருகிறது. இந்த பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் நோய் பாதிப்பை குறைக்கவே, போகி பண்டிகை கொண்டாடுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போகி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் போகி பண்டிகையை முன்னிட்டு, அதிகாலை முதலே வீடுதோறும் சுத்தம் செய்து, வாசலில் வண்ணக் கோலங்கள் இட்டும், பழைய துணிகளை வீட்டு முன்பு எரித்தும் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்கின்றனர். சிறுவர்கள் மேளங்களை அடித்தும் தங்கள் மகிழ்ச்சியை போகிப் பண்டிகை மூலம் கொண்டாடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் காலை 8 மணி வரை அதிக அளவில் மூடு பணி காரணமாக, வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டுச் சென்றனர். கீழ்பென்னாத்தூர் சுற்றியுள்ள வேட்டவலம், சோமாசிபாடி, மேக்களூர், வேடந்தவாடி, கருமாரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 8 மணி வரை அதிக அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டது.

மேலும், சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதால், இருசக்கர வாகனங்கள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டு பெரும் சிரமத்துடன் சென்றனர். மேலும் கீழ்பென்னாத்தூர் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ஊட்டி கொடைக்கானல் போன்று பனிப்பொழிவு ரம்மியமாக காட்சி அளித்தது. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் ரசித்தனர்.

அதேபோல், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த வாரம் முழுவதும் மழை பெய்த நிலையில், நேற்று இரவு முதலே கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்நிலையில், காலை 8 மணி தாண்டியும் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, மங்கைநல்லூர், மணல்மேடு, மன்னம்பந்தல், பெரம்பூர், பொறையார் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று, கிராமப் பகுதிகள் மட்டுமின்றி, நகர் பகுதிகளிலும் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அதிகாலை முதல் தங்கள் வீடுகளுக்கு முன்பு தங்கள் வீட்டில் உள்ள பழைய பொருட்களை தீ மூட்டி எரிய வைத்து, உற்சாகமாக போகி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பண்டிகைக்காக பொதுமக்கள் குப்பைகளை தீயிட்டு கொளுத்துவதால் புகை மூட்டமும் அதிகமாக காணப்படுகிறது. அதேபோல காலை நேரத்தில் நடை பயிற்சிக்கு சென்ற பொதுமக்களும், பொங்கல் பண்டிகைக்காக வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு வரும் பேருந்து பயணிகள் என பலரும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஏற்கனவே பெய்த கனமழையால் சம்பா பயிர்கள் சாய்ந்து மழை நீரில் மூழ்கி உள்ள நிலையில், தற்போது மழை நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடும் பனிப்பொழிவின் காரணமாக நெற்பயிர்களில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பொதுமக்கள் உற்சாகமாக போகி பண்டிகை கொண்டாடி வருகின்றனர். சிறுவர்கள் மேளங்களை அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி அதிகாலை வேளையில் மகிழ்ச்சியுடன் போகி பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் போகி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில், பனிப்பொழிவும் அதிகமாக காணப்படுகிறது.

இதையும் படிங்க: ஜன.16-ல் சூரியூர் ஜல்லிக்கட்டு: சூடுபிடிக்கும் ஜல்லிக்கட்டு மைதானம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.