ETV Bharat / state

1.4 கிலோ தங்கத்தை திருடிய ஹெல்மெட் கொள்ளையர்கள் கைது

author img

By

Published : Mar 24, 2023, 9:44 PM IST

சென்னையை அடுத்த வெங்கல் அருகே 1.4 கிலோ தங்க நகையை கொள்ளையடித்த வழக்கில் ஹெல்மெட் கொள்ளையர்கள் 5 பேரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

1.4 கிலோ தங்கத்தை பறித்த ஹெல்மெட் கொள்ளையர்கள் கைது!
1.4 கிலோ தங்கத்தை பறித்த ஹெல்மெட் கொள்ளையர்கள் கைது!

திருவள்ளூர்: நெற்குன்றத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராமேஸ் லால் என்பவர் 25 ஆண்டுகளாக நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்தக் கடை மூலம் சென்னை மற்றும் அதன் புறநகரைச் சுற்றியுள்ள சிறிய சிறிய நகைக் கடைக்கு நகைகளை விற்பனை செய்து வந்துள்ளார். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் மாதாவரம், வெங்கல், பூச்சி அத்திப்பட்டு, தாமரைப்பாக்கம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் உள்ள சிறிய சிறிய நகைக்கடைக்கும் வாரம் ஒரு முறை, தனது நகைக்கடையில் இருந்து நகைகளை கடையில் பணியாற்றும் ஊழியர்கள் மூலம் விற்பனை செய்தும், பணத்தை வசூலித்தும் வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் 20ஆம் தேதி தனது நகைக்கடையில் விற்பனையாளராக பணியாற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சோகன்லால் மற்றும் காலூராம் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் 1,400 கிராம் கொண்ட மூக்குத்தி, கம்மல், வளையல் மற்றும் சரடு போன்ற 30க்கும் மேற்பட்ட வகையான தங்க நகைகளை நெற்குன்றம் கடையில் இருந்து விற்பனைக்காக வழக்கமாகக் கொண்டு வந்துள்ளனர்.

பின்னர் அவர்கள் நெற்குன்றத்தில் இருந்து பாக்கம் கிராமத்தில் உள்ள நகைக்கடைக்கு நகையை கொடுத்து விட்டு வசூலித்த ரொக்கப் பணமான 1 லட்சத்து 10 ஆயிரம் மற்றும் 1.4 கிலோ நகைகளை எடுத்துக் கொண்டு செங்குன்றம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது அவர்கள் பூச்சி அத்திப்பட்டு - காரணிபேட்டை இடையே சென்றபோது, இவர்களது பின்னால் இரண்டு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தவாறு வந்த 3 பேர், காலூராம் இடமிருந்து நகையைப் பறிக்க முயற்சித்துள்ளனர்.

ஆனால், காலூராம் கொடுக்க மறுக்கவே, பட்டாக்கத்தியைக் கொண்டு அவரை வெட்டி விட்டு, 1.4 கிலோ நகை மற்றும் 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக நகைக்கடை உரிமையாளர் ராமேஸ்லால், வெங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காாணிப்பாளர் சிபாஸ் கல்யான் உத்தரவின் பேரில், ஊத்துக்கோட்டை காவல் துணை கண்காணிப்பளர் கனேஷ்குமார் தலைமையிலான 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நசரத்பேட்டை, திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சுமார் 200க்கும் மேற்ப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.

பின்னர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் சென்னை பாலமேடு பகுதியில் பதுங்கி இருப்பாதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேரை தனிப்படை காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து சுமார் 820 கிராம் தங்க நகைகளை மீட்ட காவல் துறையினர், வழிப்பறிக்கு பயன்படுத்திய சுவிஃப்ட் கார், 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் திருநின்றவூரைச் சேர்ந்த கமல் கிஷோர் (31), பாலவேடைச் சேர்ந்த பாலாஜி (29), சுகுமார் (26), கிளிடோஸ் (29) மற்றும் தமிழ்மணி (28) என்பது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: லிங்க்டு இன் மூலமாக சிறிய தொழிலதிபர்களை குறிவைத்து மோசடி செய்யும் நைஜீரிய கும்பல் கைது!

திருவள்ளூர்: நெற்குன்றத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராமேஸ் லால் என்பவர் 25 ஆண்டுகளாக நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்தக் கடை மூலம் சென்னை மற்றும் அதன் புறநகரைச் சுற்றியுள்ள சிறிய சிறிய நகைக் கடைக்கு நகைகளை விற்பனை செய்து வந்துள்ளார். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் மாதாவரம், வெங்கல், பூச்சி அத்திப்பட்டு, தாமரைப்பாக்கம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் உள்ள சிறிய சிறிய நகைக்கடைக்கும் வாரம் ஒரு முறை, தனது நகைக்கடையில் இருந்து நகைகளை கடையில் பணியாற்றும் ஊழியர்கள் மூலம் விற்பனை செய்தும், பணத்தை வசூலித்தும் வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் 20ஆம் தேதி தனது நகைக்கடையில் விற்பனையாளராக பணியாற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சோகன்லால் மற்றும் காலூராம் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் 1,400 கிராம் கொண்ட மூக்குத்தி, கம்மல், வளையல் மற்றும் சரடு போன்ற 30க்கும் மேற்பட்ட வகையான தங்க நகைகளை நெற்குன்றம் கடையில் இருந்து விற்பனைக்காக வழக்கமாகக் கொண்டு வந்துள்ளனர்.

பின்னர் அவர்கள் நெற்குன்றத்தில் இருந்து பாக்கம் கிராமத்தில் உள்ள நகைக்கடைக்கு நகையை கொடுத்து விட்டு வசூலித்த ரொக்கப் பணமான 1 லட்சத்து 10 ஆயிரம் மற்றும் 1.4 கிலோ நகைகளை எடுத்துக் கொண்டு செங்குன்றம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது அவர்கள் பூச்சி அத்திப்பட்டு - காரணிபேட்டை இடையே சென்றபோது, இவர்களது பின்னால் இரண்டு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தவாறு வந்த 3 பேர், காலூராம் இடமிருந்து நகையைப் பறிக்க முயற்சித்துள்ளனர்.

ஆனால், காலூராம் கொடுக்க மறுக்கவே, பட்டாக்கத்தியைக் கொண்டு அவரை வெட்டி விட்டு, 1.4 கிலோ நகை மற்றும் 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக நகைக்கடை உரிமையாளர் ராமேஸ்லால், வெங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காாணிப்பாளர் சிபாஸ் கல்யான் உத்தரவின் பேரில், ஊத்துக்கோட்டை காவல் துணை கண்காணிப்பளர் கனேஷ்குமார் தலைமையிலான 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நசரத்பேட்டை, திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சுமார் 200க்கும் மேற்ப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.

பின்னர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் சென்னை பாலமேடு பகுதியில் பதுங்கி இருப்பாதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேரை தனிப்படை காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து சுமார் 820 கிராம் தங்க நகைகளை மீட்ட காவல் துறையினர், வழிப்பறிக்கு பயன்படுத்திய சுவிஃப்ட் கார், 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் திருநின்றவூரைச் சேர்ந்த கமல் கிஷோர் (31), பாலவேடைச் சேர்ந்த பாலாஜி (29), சுகுமார் (26), கிளிடோஸ் (29) மற்றும் தமிழ்மணி (28) என்பது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: லிங்க்டு இன் மூலமாக சிறிய தொழிலதிபர்களை குறிவைத்து மோசடி செய்யும் நைஜீரிய கும்பல் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.