ETV Bharat / state

'சிஏஏ கரோனாவை விட கொடிய நோய்' - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

author img

By

Published : Mar 18, 2020, 11:47 PM IST

திருநெல்வேலி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து பெண்கள், குழந்தைகள் உட்பட 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tamil Nadu Thowheed Jamath
Tamil Nadu Thowheed Jamath

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து இஸ்லாமியர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு மாநிலங்களில் இச்சட்டத்தை எதிர்த்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை சிறைச்சாலை அருகில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறை நிரப்பும் போராட்டம்

இப்போராட்டத்தின் போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும், இச்சட்டம் ஒரு கரோனா நோயை விட கொடியது எனவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இரண்டாம் நபருக்கு கரோனா தொற்று!

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து இஸ்லாமியர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு மாநிலங்களில் இச்சட்டத்தை எதிர்த்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை சிறைச்சாலை அருகில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறை நிரப்பும் போராட்டம்

இப்போராட்டத்தின் போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும், இச்சட்டம் ஒரு கரோனா நோயை விட கொடியது எனவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இரண்டாம் நபருக்கு கரோனா தொற்று!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.