ETV Bharat / state

'என்னைப் பார்த்து சிரித்ததால்தான் ஓபிஎஸ்க்கு முதலமைச்சர் பதவி பறிபோனது' - ஸ்டாலின்

author img

By

Published : Oct 16, 2019, 6:07 PM IST

நெல்லை: அன்று ஓ. பன்னீர்செல்வம் என்னைப் பார்த்து சிரித்ததால்தான் அவருக்கு முதலமைச்சர் பதவி பறிபோனது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

mk stalin

நெல்லை மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

இதையடுத்து அவர் பரப்புரையில் பேசியதாவது, "முதலமைச்சர் மனுக்களை வாங்கி ஒன்றும் செய்யவில்லை. எனவேதான் நான் மக்களிடம் மனுக்களை வாங்குகின்றேன். நாங்கள் அதிகாரத்தில் இல்லை, ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் உறுதியாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். அதிமுகவினர் தங்கள் ஆட்சியைக் காப்பாற்றவே உழைக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி விபத்தினால் முதலமைச்சரானார். ஜெயலலிதாதான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஸ்டாலின் பரப்புரையின் போது
ஸ்டாலின் பரப்புரையின்போது

ஓ. பன்னீர்செல்வம் என்னைப் பார்த்து சிரித்ததால் அவருக்கு முதலமைச்சர் பதவி பறிபோனது. எடப்பாடி பழனிசாமி, சசிகலா காலில் தவழ்ந்து பதவியை பெற்றார். அதை காப்பாற்ற தற்போது பாஜக காலில் விழுகிறார்.

அனைத்து திட்டங்களிலும் கொள்ளையடிக்கும் ஆட்சிதான் அதிமுக ஆட்சி. பதவிபோனதும் அவர்கள் சிறை செல்வது உறுதி. அதுமட்டுமின்றி எந்த மாநிலத்திலும் முதலமைச்சர் மரணத்தில் மர்மம் இல்லை. ஆனால் தமிழ்நாட்டின் நிலை என்ன?

திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் கண்டுபிடிக்கப்பட்டு அது தொடர்புடையவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்" என்றார்.

இதையும் படிங்க: பெண்களின் முன்னேற்றத்தில் திமுக ஆற்றிய பங்கு என்ன? - ஸ்டாலின் விளக்கம்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

இதையடுத்து அவர் பரப்புரையில் பேசியதாவது, "முதலமைச்சர் மனுக்களை வாங்கி ஒன்றும் செய்யவில்லை. எனவேதான் நான் மக்களிடம் மனுக்களை வாங்குகின்றேன். நாங்கள் அதிகாரத்தில் இல்லை, ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் உறுதியாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். அதிமுகவினர் தங்கள் ஆட்சியைக் காப்பாற்றவே உழைக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி விபத்தினால் முதலமைச்சரானார். ஜெயலலிதாதான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஸ்டாலின் பரப்புரையின் போது
ஸ்டாலின் பரப்புரையின்போது

ஓ. பன்னீர்செல்வம் என்னைப் பார்த்து சிரித்ததால் அவருக்கு முதலமைச்சர் பதவி பறிபோனது. எடப்பாடி பழனிசாமி, சசிகலா காலில் தவழ்ந்து பதவியை பெற்றார். அதை காப்பாற்ற தற்போது பாஜக காலில் விழுகிறார்.

அனைத்து திட்டங்களிலும் கொள்ளையடிக்கும் ஆட்சிதான் அதிமுக ஆட்சி. பதவிபோனதும் அவர்கள் சிறை செல்வது உறுதி. அதுமட்டுமின்றி எந்த மாநிலத்திலும் முதலமைச்சர் மரணத்தில் மர்மம் இல்லை. ஆனால் தமிழ்நாட்டின் நிலை என்ன?

திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் கண்டுபிடிக்கப்பட்டு அது தொடர்புடையவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்" என்றார்.

இதையும் படிங்க: பெண்களின் முன்னேற்றத்தில் திமுக ஆற்றிய பங்கு என்ன? - ஸ்டாலின் விளக்கம்

Intro:அன்று ஓ. பன்னீர்செல்வம் என்னை பார்த்து சிரித்ததால் அவருக்கு முதல்வர் பதவி பறிபோனது. நாங்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு.Body:
அன்று ஓ. பன்னீர்செல்வம் என்னை பார்த்து சிரித்ததால் அவருக்கு முதல்வர் பதவி பறிபோனது. நாங்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு.


நெல்லை மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் இரண்டாவது நாளாகிய இன்று தனது திண்ணை பிரச்சாரத்தை நாங்குநேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்பலம் , பருத்திப்பாடு ஆகிய இடங்களில் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில்,

நாடாளுமன்ற வெற்றிக்கு நன்றி கூறவேண்டும் என்ற கடமை உணர்வோடு நன்றி கூற வந்துள்ளேன். பாண்டிச்சேரியை சேர்த்து 39 தொகுதியில் வெற்றி பெற்ற அணி நமது அணி. இடைத்தேர்தலில் மக்கள் மாபெரும் வெற்றியை திமுக கூட்டணிக்கு தருவார்கள். 100 நாள் வேலைத்திட்டம், குடிநீர் பிரச்சனை, போக்குவரத்து போன்றவற்றால் மக்கள் தமிழகம் முழுவதும் அவதிபடுகின்றனர். இதற்கு முதல் காரணம் உள்ளாட்சி தேர்தல் முறையாக நடைபெறாதது தான்.

திமுக ஆட்சியில் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் மக்களிடம் சரியாக சென்றடைந்தது. பெண்களுக்கான பல திட்டங்கள் கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இந்த ஆட்சியில் அனைத்து திட்டங்களிலும் கமிஷன் பெற்று வருகின்றனர்.

முதல்வர் மனுக்களை வாங்கி ஒன்றும் செய்யவில்லை எனவேதான் நான் மக்களிடம் மனுக்களை வாங்குகின்றேன். நாங்கள் அதிகாரத்தில் இல்லை ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் உறுதியாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். அதிமுகவினர் தங்கள் ஆட்சியை காப்பாற்றவே உழைக்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி விபத்தினால் முதல்வரானார். ஜெயலலிதா தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஓ. பன்னீர்செல்வம் என்னை பார்த்து சிரித்ததால் அவருக்கு முதல்வர் பதவி பறிபோனது. எடப்பாடி பழனிச்சாமி சசிகலா காலில் தவழ்ந்து பதவியை பெற்றார். அதை காப்பாற்ற தற்போது பாஜக காலில் விழுகிறார்.

அனைத்து திட்டங்களிலும் கொள்ளையடிக்கும் ஆட்சி தான் அதிமுக ஆட்சி. பதவி போனது அவர்கள் சிறை செல்வது உறுதி. அதுமட்டுமின்றி எந்த மாநிலத்திலும் முதல்வர் மரணத்தில் மர்மம் இல்லை ஆனால் தமிழகத்தில் நிலை என்ன. திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் கண்டுபிடிக்கப்பட்டு தொடர்புடையவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் அவர் பேசினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.