ETV Bharat / state

மாடு மேய்க்க சென்றவர் கொலை .. .உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

author img

By

Published : Nov 14, 2022, 2:23 PM IST

திருநெல்வேலி சீவலப்பேரி மாயாண்டி கொலை வழக்கில் நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Etv Bharat
Etv Bharat

திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே சீவலப்பேரி யாதவர் தெருவைச் சேர்ந்தவர் சங்கரலிங்க மகன் மாயாண்டி. இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருவதுடன், வீட்டில் ஆடு மாடுகளையும் வளர்த்து வந்தார். தினமும் காலை நேரத்தில் ஆடு, மாடுகளை கலியாவூர் காட்டு பகுதியில் மேய்சலுக்கு கொண்டு செல்வதும் மாலையில் அவற்றை மீண்டும் வீட்டுக்கு கொண்டு வந்து சேர்ப்பது வழக்கம்.

இந்நிலையில் கடந்த நவ.11ஆம் தேதி மாலை சீவலப்பேரி கலியாவூர் சாலையில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. இதில் அவர் உயிரிழந்தார்.

விசாரணையில், கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி சீவலப்பேரி சுடலை கோயில் பூசாரி துரை என்ற சிதம்பரம் கொலை சம்பவத்தை தொடர்ச்சியாக இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. சீவலப்பேரி சுடலை கோயிலை நிர்வகிப்பது தொடர்பாகவும் அங்கு கடைகள் நடத்துவது தொடர்பாகவும் கடந்த ஆண்டு இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த குவிந்த காவலர்கள்

இதில் ஆத்திரமடைந்த ஒரு கும்பல் கோயில் பூசாரி சிதம்பரத்தை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதை தடுக்கச் சென்ற நடராஜர் பெருமாள் என்பவருக்கும் அப்போது அரிவாள் வெட்டு விழுந்தது. இக்கொலை சம்பந்தமாக சீவலப்பேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 10 பேரை கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த கோயில் பூசாரி கொலை வழக்கில் தற்போது கொலையான மாயாண்டி என்பவரின் உறவினர்கள் சிலரை சாட்சி சொல்ல மாயாண்டி வற்புறுத்தி வந்ததால் ஆத்திரத்தில் எதிர் தரப்பினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்காக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு இதுவரை 13 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். .

இது தொடர்பாக பலரையும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாயாண்டி கொலையில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய கோரியும், குடும்பத்திற்கு நிவாரண வழங்க கோரியும், அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இறந்த மாயாண்டின் உடலை நான்கு நாள்களாக உறவினர்கள் வாங்க மறுத்து போராட்டமும் நடத்தி வருகின்றனர். அவரது உடல் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு பிரிவில் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சொத்து பிரச்சினை காரணமாக உறவினர் கத்தியால் குத்தி கொலை

திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே சீவலப்பேரி யாதவர் தெருவைச் சேர்ந்தவர் சங்கரலிங்க மகன் மாயாண்டி. இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருவதுடன், வீட்டில் ஆடு மாடுகளையும் வளர்த்து வந்தார். தினமும் காலை நேரத்தில் ஆடு, மாடுகளை கலியாவூர் காட்டு பகுதியில் மேய்சலுக்கு கொண்டு செல்வதும் மாலையில் அவற்றை மீண்டும் வீட்டுக்கு கொண்டு வந்து சேர்ப்பது வழக்கம்.

இந்நிலையில் கடந்த நவ.11ஆம் தேதி மாலை சீவலப்பேரி கலியாவூர் சாலையில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. இதில் அவர் உயிரிழந்தார்.

விசாரணையில், கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி சீவலப்பேரி சுடலை கோயில் பூசாரி துரை என்ற சிதம்பரம் கொலை சம்பவத்தை தொடர்ச்சியாக இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. சீவலப்பேரி சுடலை கோயிலை நிர்வகிப்பது தொடர்பாகவும் அங்கு கடைகள் நடத்துவது தொடர்பாகவும் கடந்த ஆண்டு இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த குவிந்த காவலர்கள்

இதில் ஆத்திரமடைந்த ஒரு கும்பல் கோயில் பூசாரி சிதம்பரத்தை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதை தடுக்கச் சென்ற நடராஜர் பெருமாள் என்பவருக்கும் அப்போது அரிவாள் வெட்டு விழுந்தது. இக்கொலை சம்பந்தமாக சீவலப்பேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 10 பேரை கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த கோயில் பூசாரி கொலை வழக்கில் தற்போது கொலையான மாயாண்டி என்பவரின் உறவினர்கள் சிலரை சாட்சி சொல்ல மாயாண்டி வற்புறுத்தி வந்ததால் ஆத்திரத்தில் எதிர் தரப்பினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்காக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு இதுவரை 13 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். .

இது தொடர்பாக பலரையும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாயாண்டி கொலையில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய கோரியும், குடும்பத்திற்கு நிவாரண வழங்க கோரியும், அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இறந்த மாயாண்டின் உடலை நான்கு நாள்களாக உறவினர்கள் வாங்க மறுத்து போராட்டமும் நடத்தி வருகின்றனர். அவரது உடல் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு பிரிவில் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சொத்து பிரச்சினை காரணமாக உறவினர் கத்தியால் குத்தி கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.