ETV Bharat / state

செடி புட்டா சேலைக்கு புவிசார் குறியீடு கிடைத்ததன் பின்னணி குறித்து விவரிக்கும் சிறப்பு தொகுப்பு!

author img

By

Published : Aug 1, 2023, 3:05 PM IST

நெல்லை மாவட்டம் புதுக்குடியில் நெசவாளர்களால் பிரத்யேகமான தயாரிப்பாக நெய்யப்படும் செடி புட்டா கைத்தறி சேலைகளுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு அறிவித்து உள்ளது. இதன் பின்னணி குறித்து விரிவாக விவரிக்கும் சிறப்பு செய்தி தொகுப்பு.

செடி புட்டா சேலைக்கு புவிசார் குறியீடு கிடைத்ததன் பின்னணி குறித்து விவரிக்கும் சிறப்பு தொகுப்பு
செடி புட்டா சேலைக்கு புவிசார் குறியீடு கிடைத்ததன் பின்னணி குறித்து விவரிக்கும் சிறப்பு தொகுப்பு

செடி புட்டா சேலைக்கு புவிசார் குறியீடு கிடைத்ததன் பின்னணி குறித்து விவரிக்கும் சிறப்பு தொகுப்பு

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகா புதுக்குடியில் நெசவாளர்களால் பிரத்யேகமான தயாரிப்பாக நெய்யப்படும் செடி புட்டா கைத்தறி சேலைகளுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு அறிவித்து உள்ளது. 50 ஆண்டுகளுக்கு மேலாக உற்பத்தி செய்து வரும் செடி புட்டா சேலைகளுக்கு புவிசார் குறியீடு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும், ஊக்கத்தை அளித்துள்ளதாகவும் நெசவாளர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த அங்கீகாரத்தால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள எங்களின் வாழ்வாதாரம் இனி மேம்படுவதற்கான வழி பிறக்கும் என்கின்றனர்.

அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற நெசவு கிராமங்களின் பின்னணி:

திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி தாலுகாவில் உள்ள புதுக்குடி, கிளாக்குளம், வீரவநல்லூர், வெள்ளாங்குழி என நான்கு கிராமங்களில் 1000 கைத்தறி கூடங்கள் வரை செயல்படுகின்றன. குறிப்பாக இதில் புதுக்குடி கிராமத்தில் தான் மத்திய அரசின் புவிசார் குறியீடு பெற்ற செடி புட்டா சேலைகள் அதிக எண்ணிக்கையில் நெய்யப்படுகிறது. சுமார் 250 வீடுகள் உள்ள இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் கைத்தறி நெசவு கூடங்களை தங்களது வீட்டிற்குள்ளேயே அமைத்துள்ளனர்.

இந்த வீடுகள் அனைத்தும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தகரங்களாலும், ஓடுகளாலுமே வேயப்பட்டுள்ளது. இங்குள்ள வீடுகளும் தொழில் செய்யும் கைத்தறிக் கூடங்களும் ஒன்றாக நெய்யப்பட்டே காணப்படுகிறது. ஒரு அறையில் தறி, மறு அறையாக சமையலறை. தறிக்கு அருகிலேயே சாப்பாடு, தூக்கம், கனவு என வீடுகளே கைத்தறி கூடங்களாகவும், கைத்தறி கூடங்களே வீடுகளாகவும் என நெசவாளர் வாழ்க்கை சிறிய வட்டத்திற்குள்ளேயே அமைந்து உள்ளது.

வீட்டிற்குள் வெண்தேக்கு மரக்கம்புகளால் செய்யப்பட்டுள்ள தறிகளில் இடையே நூல்களை கோர்க்கும் வகையில் நான்கு கம்புகள் கீழே இரண்டு கால்களைக் கொண்டு மிதிக்கும் மர பெடல்களுடன் இணைக்கப்பட்டு உள்ளது. தறி இயக்கத்தில் வலது கால் பெடலை மிதிக்கும் போது இடது புறம் கட்டப்பட்ட 2 கம்புடன் சேர்ந்த நூல் மேல் நோக்கி நகரும். பின்னர் இடது கால் பெடலை மிதிக்கும் போது வலது பக்கம் நூல் கட்டப்பட்ட கம்புகள் கீழ் நோக்கி நகரும்.

ஒரே நேரத்தில் இடப்புறமும், வலப்புறமும் நூல்களுடன் இணைக்கப்பட்டுள்ள மர குச்சிகளை அவ்வப்போது இரண்டு கைகளாலும் நகர்த்தி நெய்யும் போது நூல்களில் மேலும், கீழும், இடதும், வலதும் என நான்கு புறமும் கொடுக்கப்படும் இறுக்கத்தில் நூலானது சேலையாக மாறுகிறது. வயதை அடையாளப்படுத்தும் விதமாக நிறம் மாறி நிற்கும் தறிகள் போலவே, குறைந்தபட்ச பொருளாதார நிலையின் குறியீடாகவே நெசவாளர்கள் காட்சியளிக்கின்றனர்.

ஆனாலும் சிப்பிக்குள் தோன்றும் முத்து போல மிகவும் நேரமெடுத்து நெய்யும் சேலையில் தங்கள் திறமையை முழுமையாக காட்டி ஆடம்பரத்தின் உச்சமாக தயாரிக்கின்றனர். அந்த மெனக்கெடலின் பெயர் தான், புவிசார் குறியீட்டை பெற்றிருக்கும் செடி புட்டா சேலைகள். இந்த நெசவாளர்களுடன் பயணிக்கும் விதமாக அரசு சார்ந்து இயங்கும் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்கள் மட்டும் 8 உள்ளது.

சங்கம் மூலம் தறி நெய்ய மூலப் பொருளான பாவு, நூல் தளவாட பொருட்களை வழங்கி விடுகின்றனர். நெய்யும் சேலைகளுக்கான கூலியும் சங்கம் மூலமாகவே கொடுக்கப்படுகிறது. இந்த சங்கத்தில் நெசவாளர் மூலம் கைத்தறி செய்து பெறப்படக்கூடிய சேலைகள் அனைத்தும் அரசின் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் பெற்று அதன் விற்பனை கூடங்கள் மூலமாக மக்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. வட மாநில மக்களின் மிக விருப்பத்திற்குரிய சேலையாக செடி புட்டா சேலைகள் உள்ளதால் உற்பத்தி செய்யப்பட்ட சேலைகள் அதிகளவில் வடமாநிலங்களுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது.

செடி புட்டா சேலைகள் வரலாறு:

கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்படாத 1970 - 1975 காலக்கட்டத்தில் மதுரையை சேர்ந்த M.A ராமமூர்த்தி என்பவர் இந்த புதுக்குடி மக்களுக்கு செடி புட்டா சேலை நெய்வது குறித்து கற்றுக் கொடுத்துள்ளார். அவரால் தான் 50 ஆண்டுகளை கடந்து இன்றும் செடி புட்டா சேலைகள் இங்கு நெய்யப்படுகிறது. குறிப்பாக இந்த சேலைகளில் வண்ண வண்ண நிறங்களில் பூக்கள் நெய்யப்பட்டிருக்கும் இவை எம்ராய்டிரிங் என்று நினைத்தால் அதில் உண்மை அல்ல.

ஏனென்றால் இதில் தான் அதன் சிறப்பு அம்சமே உள்ளது. என்னவென்றால் கைத்தறி சேலைகளில் பச்சை, சிகப்பு, மஞ்சள், ரோஸ், ஆரஞ்சு என வண்ண வண்ண நூல்களை பயன்படுத்தி முந்தானை தொடங்கி சேலை முழுவதிலும் ஆங்காங்கே 15 பூக்கள் வரை நெசவு மூலமாகவே மிக நுணுக்கமாக வரைகின்றனர்.

எம்பிராய்டிரிங் செய்யாமல் நேரடியாக நூல்களை நெசவின் மூலம் சேலையில் கோர்ப்பதாலேயே செடி புட்டா சேலைகள் நெய்ய அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. குறிப்பாக புதுக்குடி கிராமத்தில் கடந்த 50 வருடங்களாக செடி புட்டா சேலைகள் பாரம்பரியமாக நெய்யப்படுகிறது. ஒரு சேலை நெய்வதற்கு மூன்று முதல் நான்கு நாட்கள் வரை ஆகும். ஒரு சேலைக்கு சங்கத்தின் மூலம் 486 ரூபாய் கூலி கொடுக்கப்படுகிறது.

கூலியில் 8% சிக்கனம் என (39 ரூபாய் பிடித்தம்) சேமிப்பாக சங்கத்தின் மூலம் பிடிக்கப்படுகிறது. சேமிப்பு பிடித்தல் போக 447 ரூபாய் மட்டுமே ஒரு சேலைக்கு சம்பளமாக கிடைக்கிறது. இதனால் மாதம் அதிகபட்சமாக 4 ஆயிரம் ரூபாய்க்குள் தான் சம்பளம் கிடைக்கிறது.

இந்த குறைந்த சம்பளத்தின் காரணமாகவே செடி புட்டா சேலைகள் நெய்வதற்கு நெசவாளர்கள் பலரும் முன் வருவதில்லை. இதனால் 50 வயதை தாண்டிய நெசவாளர்கள் மட்டுமே மிகவும் மெனக்கெட்டு செய்யக்கூடிய இந்த செடி புட்டா கைத்தறி சேலைகளை நெய்து வருவதாக கூறுகின்றனர். இதன் காரணமாக 4 ஊர்களிலும் ஆயிரம் தறிகள் வரை இருந்தாலும் அதில் குறைந்த அளவு தறிகளே செடி புட்டா சேலைகளை நெய்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்க செய்தியாக உள்ளது.

செடி புட்டாவில் என்ன ஸ்பெஷல்?

இந்த செடி புட்டா சேலைகள் முழுக்க முழுக்க பருத்தி நூல்களால் நெய்யப்படுகிறது. முழு காட்டன் என்பதால் உடுத்துவதற்கு இதமாகவும் உடலுக்கு குளிர்ச்சியாகவும் இருக்கும். உடலில் உள்ள சூட்டை குறைக்கும் தன்மை இந்த சேலைகளுக்கு உண்டு. மேலும் இந்த சேலையில் செடியின் கிளைகள் பிரத்யேகமாக கையால் நெய்யப்படும் நவீன இயந்திரங்கள் புகுத்தப்பட்டுள்ளது.

எனினும் நெல்லை நெசவாளர்களால் நெய்யப்படும் இந்த செடி புட்டா ரக சேலைகளை தற்போது வரை எந்திரத்தில் நெய்ய முடியாது என்பது யாரும் அறிந்திடாத உண்மை. பல மாவட்டங்களில் நெசவாளர்கள் எந்திரத்தில் இது போன்ற செடி புட்ட ரக சேலையை நெய்வதற்கு முயற்சித்தும் தோல்விதான் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கீகாரத்தால் வாழ்வாதாரம் உயருமா?

செடி புட்டா சேலைகளுக்கு அரசின் அங்கீகாரம் கிடைத்தது 50 ஆண்டு காலமாக நெய்து கொண்டிருந்த நெசவாளர்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஆனாலும் நெசவு செய்யும் ஒவ்வொருவர் வீட்டிலும் டப் டப் என தறி ஓடும் சத்தத்தின் பின்னணியில் விடுபட்ட நூலை போல இருக்கும் அவர்களின் வாழ்க்கையில் குறைந்தபட்ச கூலி உயர்வுக்கான குரல் கூட கேட்கவில்லை என்பதே யதார்த்தமான உண்மை.

80 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!

தேசிய அளவில் புகழ்பெற்ற இந்த செடி புட்டா சேலைகளுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் இங்குள்ள நெசவாளர்கள் போராடி வருகின்றனர். அப்போதிலிருந்து அரசுக்கு இது குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது இருப்பினும் சுமார் 43 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு தாய்ப்பால் புகட்டும் வழிமுறை - மகப்பேறு மருத்துவர் சுஜாதா சங்குமணி..

செடி புட்டா சேலைக்கு புவிசார் குறியீடு கிடைத்ததன் பின்னணி குறித்து விவரிக்கும் சிறப்பு தொகுப்பு

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகா புதுக்குடியில் நெசவாளர்களால் பிரத்யேகமான தயாரிப்பாக நெய்யப்படும் செடி புட்டா கைத்தறி சேலைகளுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு அறிவித்து உள்ளது. 50 ஆண்டுகளுக்கு மேலாக உற்பத்தி செய்து வரும் செடி புட்டா சேலைகளுக்கு புவிசார் குறியீடு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும், ஊக்கத்தை அளித்துள்ளதாகவும் நெசவாளர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த அங்கீகாரத்தால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள எங்களின் வாழ்வாதாரம் இனி மேம்படுவதற்கான வழி பிறக்கும் என்கின்றனர்.

அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற நெசவு கிராமங்களின் பின்னணி:

திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி தாலுகாவில் உள்ள புதுக்குடி, கிளாக்குளம், வீரவநல்லூர், வெள்ளாங்குழி என நான்கு கிராமங்களில் 1000 கைத்தறி கூடங்கள் வரை செயல்படுகின்றன. குறிப்பாக இதில் புதுக்குடி கிராமத்தில் தான் மத்திய அரசின் புவிசார் குறியீடு பெற்ற செடி புட்டா சேலைகள் அதிக எண்ணிக்கையில் நெய்யப்படுகிறது. சுமார் 250 வீடுகள் உள்ள இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் கைத்தறி நெசவு கூடங்களை தங்களது வீட்டிற்குள்ளேயே அமைத்துள்ளனர்.

இந்த வீடுகள் அனைத்தும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தகரங்களாலும், ஓடுகளாலுமே வேயப்பட்டுள்ளது. இங்குள்ள வீடுகளும் தொழில் செய்யும் கைத்தறிக் கூடங்களும் ஒன்றாக நெய்யப்பட்டே காணப்படுகிறது. ஒரு அறையில் தறி, மறு அறையாக சமையலறை. தறிக்கு அருகிலேயே சாப்பாடு, தூக்கம், கனவு என வீடுகளே கைத்தறி கூடங்களாகவும், கைத்தறி கூடங்களே வீடுகளாகவும் என நெசவாளர் வாழ்க்கை சிறிய வட்டத்திற்குள்ளேயே அமைந்து உள்ளது.

வீட்டிற்குள் வெண்தேக்கு மரக்கம்புகளால் செய்யப்பட்டுள்ள தறிகளில் இடையே நூல்களை கோர்க்கும் வகையில் நான்கு கம்புகள் கீழே இரண்டு கால்களைக் கொண்டு மிதிக்கும் மர பெடல்களுடன் இணைக்கப்பட்டு உள்ளது. தறி இயக்கத்தில் வலது கால் பெடலை மிதிக்கும் போது இடது புறம் கட்டப்பட்ட 2 கம்புடன் சேர்ந்த நூல் மேல் நோக்கி நகரும். பின்னர் இடது கால் பெடலை மிதிக்கும் போது வலது பக்கம் நூல் கட்டப்பட்ட கம்புகள் கீழ் நோக்கி நகரும்.

ஒரே நேரத்தில் இடப்புறமும், வலப்புறமும் நூல்களுடன் இணைக்கப்பட்டுள்ள மர குச்சிகளை அவ்வப்போது இரண்டு கைகளாலும் நகர்த்தி நெய்யும் போது நூல்களில் மேலும், கீழும், இடதும், வலதும் என நான்கு புறமும் கொடுக்கப்படும் இறுக்கத்தில் நூலானது சேலையாக மாறுகிறது. வயதை அடையாளப்படுத்தும் விதமாக நிறம் மாறி நிற்கும் தறிகள் போலவே, குறைந்தபட்ச பொருளாதார நிலையின் குறியீடாகவே நெசவாளர்கள் காட்சியளிக்கின்றனர்.

ஆனாலும் சிப்பிக்குள் தோன்றும் முத்து போல மிகவும் நேரமெடுத்து நெய்யும் சேலையில் தங்கள் திறமையை முழுமையாக காட்டி ஆடம்பரத்தின் உச்சமாக தயாரிக்கின்றனர். அந்த மெனக்கெடலின் பெயர் தான், புவிசார் குறியீட்டை பெற்றிருக்கும் செடி புட்டா சேலைகள். இந்த நெசவாளர்களுடன் பயணிக்கும் விதமாக அரசு சார்ந்து இயங்கும் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்கள் மட்டும் 8 உள்ளது.

சங்கம் மூலம் தறி நெய்ய மூலப் பொருளான பாவு, நூல் தளவாட பொருட்களை வழங்கி விடுகின்றனர். நெய்யும் சேலைகளுக்கான கூலியும் சங்கம் மூலமாகவே கொடுக்கப்படுகிறது. இந்த சங்கத்தில் நெசவாளர் மூலம் கைத்தறி செய்து பெறப்படக்கூடிய சேலைகள் அனைத்தும் அரசின் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் பெற்று அதன் விற்பனை கூடங்கள் மூலமாக மக்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. வட மாநில மக்களின் மிக விருப்பத்திற்குரிய சேலையாக செடி புட்டா சேலைகள் உள்ளதால் உற்பத்தி செய்யப்பட்ட சேலைகள் அதிகளவில் வடமாநிலங்களுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது.

செடி புட்டா சேலைகள் வரலாறு:

கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்படாத 1970 - 1975 காலக்கட்டத்தில் மதுரையை சேர்ந்த M.A ராமமூர்த்தி என்பவர் இந்த புதுக்குடி மக்களுக்கு செடி புட்டா சேலை நெய்வது குறித்து கற்றுக் கொடுத்துள்ளார். அவரால் தான் 50 ஆண்டுகளை கடந்து இன்றும் செடி புட்டா சேலைகள் இங்கு நெய்யப்படுகிறது. குறிப்பாக இந்த சேலைகளில் வண்ண வண்ண நிறங்களில் பூக்கள் நெய்யப்பட்டிருக்கும் இவை எம்ராய்டிரிங் என்று நினைத்தால் அதில் உண்மை அல்ல.

ஏனென்றால் இதில் தான் அதன் சிறப்பு அம்சமே உள்ளது. என்னவென்றால் கைத்தறி சேலைகளில் பச்சை, சிகப்பு, மஞ்சள், ரோஸ், ஆரஞ்சு என வண்ண வண்ண நூல்களை பயன்படுத்தி முந்தானை தொடங்கி சேலை முழுவதிலும் ஆங்காங்கே 15 பூக்கள் வரை நெசவு மூலமாகவே மிக நுணுக்கமாக வரைகின்றனர்.

எம்பிராய்டிரிங் செய்யாமல் நேரடியாக நூல்களை நெசவின் மூலம் சேலையில் கோர்ப்பதாலேயே செடி புட்டா சேலைகள் நெய்ய அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. குறிப்பாக புதுக்குடி கிராமத்தில் கடந்த 50 வருடங்களாக செடி புட்டா சேலைகள் பாரம்பரியமாக நெய்யப்படுகிறது. ஒரு சேலை நெய்வதற்கு மூன்று முதல் நான்கு நாட்கள் வரை ஆகும். ஒரு சேலைக்கு சங்கத்தின் மூலம் 486 ரூபாய் கூலி கொடுக்கப்படுகிறது.

கூலியில் 8% சிக்கனம் என (39 ரூபாய் பிடித்தம்) சேமிப்பாக சங்கத்தின் மூலம் பிடிக்கப்படுகிறது. சேமிப்பு பிடித்தல் போக 447 ரூபாய் மட்டுமே ஒரு சேலைக்கு சம்பளமாக கிடைக்கிறது. இதனால் மாதம் அதிகபட்சமாக 4 ஆயிரம் ரூபாய்க்குள் தான் சம்பளம் கிடைக்கிறது.

இந்த குறைந்த சம்பளத்தின் காரணமாகவே செடி புட்டா சேலைகள் நெய்வதற்கு நெசவாளர்கள் பலரும் முன் வருவதில்லை. இதனால் 50 வயதை தாண்டிய நெசவாளர்கள் மட்டுமே மிகவும் மெனக்கெட்டு செய்யக்கூடிய இந்த செடி புட்டா கைத்தறி சேலைகளை நெய்து வருவதாக கூறுகின்றனர். இதன் காரணமாக 4 ஊர்களிலும் ஆயிரம் தறிகள் வரை இருந்தாலும் அதில் குறைந்த அளவு தறிகளே செடி புட்டா சேலைகளை நெய்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்க செய்தியாக உள்ளது.

செடி புட்டாவில் என்ன ஸ்பெஷல்?

இந்த செடி புட்டா சேலைகள் முழுக்க முழுக்க பருத்தி நூல்களால் நெய்யப்படுகிறது. முழு காட்டன் என்பதால் உடுத்துவதற்கு இதமாகவும் உடலுக்கு குளிர்ச்சியாகவும் இருக்கும். உடலில் உள்ள சூட்டை குறைக்கும் தன்மை இந்த சேலைகளுக்கு உண்டு. மேலும் இந்த சேலையில் செடியின் கிளைகள் பிரத்யேகமாக கையால் நெய்யப்படும் நவீன இயந்திரங்கள் புகுத்தப்பட்டுள்ளது.

எனினும் நெல்லை நெசவாளர்களால் நெய்யப்படும் இந்த செடி புட்டா ரக சேலைகளை தற்போது வரை எந்திரத்தில் நெய்ய முடியாது என்பது யாரும் அறிந்திடாத உண்மை. பல மாவட்டங்களில் நெசவாளர்கள் எந்திரத்தில் இது போன்ற செடி புட்ட ரக சேலையை நெய்வதற்கு முயற்சித்தும் தோல்விதான் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கீகாரத்தால் வாழ்வாதாரம் உயருமா?

செடி புட்டா சேலைகளுக்கு அரசின் அங்கீகாரம் கிடைத்தது 50 ஆண்டு காலமாக நெய்து கொண்டிருந்த நெசவாளர்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஆனாலும் நெசவு செய்யும் ஒவ்வொருவர் வீட்டிலும் டப் டப் என தறி ஓடும் சத்தத்தின் பின்னணியில் விடுபட்ட நூலை போல இருக்கும் அவர்களின் வாழ்க்கையில் குறைந்தபட்ச கூலி உயர்வுக்கான குரல் கூட கேட்கவில்லை என்பதே யதார்த்தமான உண்மை.

80 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!

தேசிய அளவில் புகழ்பெற்ற இந்த செடி புட்டா சேலைகளுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் இங்குள்ள நெசவாளர்கள் போராடி வருகின்றனர். அப்போதிலிருந்து அரசுக்கு இது குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது இருப்பினும் சுமார் 43 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு தாய்ப்பால் புகட்டும் வழிமுறை - மகப்பேறு மருத்துவர் சுஜாதா சங்குமணி..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.