ETV Bharat / state

ஒற்றைக் காலுடன் ஐயப்பனைக் காண சபரிமலைக்கு பாதயாத்திரை செய்யும் பக்தர்

author img

By

Published : Jan 5, 2023, 6:39 PM IST

Updated : Jan 5, 2023, 8:29 PM IST

ஐயப்பன் மீது கொண்ட பக்தி காரணமாக, தேனி மாவட்டம் கம்பம் நகரில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சுமார் 130 கி.மீ. பாதயாத்திரையாக மாற்றுத் திறனாளி ஒருவர் செல்லத் தொடங்கியுள்ளார்.

ஒற்றை காலுடன் ஐயப்பனை காண சபரிமலைக்கு நடைபயணம்
ஒற்றை காலுடன் ஐயப்பனை காண சபரிமலைக்கு நடைபயணம்
ஒற்றைக் காலுடன் ஐயப்பனைக் காண சபரிமலைக்கு பாதயாத்திரை செய்யும் பக்தர்

தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு இந்தியாவில் கரோனா தொற்று முழுமையாக ஒழிய வேண்டி ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து, கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் திருக்கோயிலுக்கு பாதயாத்திரையாக ஒற்றைக் காலுடன் ஒற்றை ஆளாக சென்ற மாற்றுத்திறனாளியான சுரேஷ், இந்த ஆண்டு ஐயப்பன் மீது கொண்டுள்ள பக்தி காரணமாக தேனி மாவட்டம் கம்பம் நகரில் இருந்து சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்லத் தொடங்கினார்.

கேரள மாநிலத்தில், உள்ள சபரிமலை ஐயப்பன் திருக்கோயில் உலகப்புகழ்பெற்ற மிகவும் பிரசித்திபெற்ற கோயிலாகும். இக்கோயிலுக்கு தமிழ்நாடு மட்டும் அல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்கச் செல்வது உண்டு.

இக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் வாகனத்தில் செல்வது மட்டுமல்லாமல், சில ஐயப்ப பக்தர்கள் இறைவனை வேண்டி பாதயாத்திரையாக பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே சபரிமலைக்குச் செல்வதும் வழக்கமாக உள்ளது. கடந்த ஆண்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாகவும் நலமுடன் இருக்க வேண்டியும், கரோனா தொற்று இந்தியாவில் முழுமையாக ஒழிய வேண்டும் என்றும் சபரிமலை ஐயப்பனை வேண்டி, ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சுமார் 750 கிலோ மீட்டருக்கும் மேல் இரு மாநிலத்தைக் கடந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பாதயாத்திரையாக ஒற்றைக் காலுடன் தனியாக மாற்றுத்திறனாளியான, சுரேஷ் பயணம் மேற்கொண்டு, சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்தார்.

இந்த நிலையில் தற்போது ஐயப்பன் மீது கொண்ட பக்தி காரணமாக தேனி மாவட்டம் கம்பம் நகரில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சுமார் 130 கி.மீ. பாதயாத்திரையாக செல்லத் தொடங்கி உள்ளார். ஒவ்வொரு நாளும் பத்து கிலோமீட்டர் நடைபயணமாக மேற்கொண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ய உள்ளார்.

கடந்த ஆண்டு கரோனா பரவல் முழுமையாக ஒழிய வேண்டும் என்பதற்காக நடைபயணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற இவர் இந்த ஆண்டு ஐயப்பன் மீது கொண்டுள்ள அதீத பற்று காரணமாக தனது உறவினருடன் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்கிறார். ஒற்றைக்காலுடன் சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்லும் நபரை கண்டு பலரும் வியந்து பாராட்டியும் வருகின்றனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 6.20 கோடி வாக்காளர்கள்: இறுதி பட்டியலை வெளியிட்ட சாகு!

ஒற்றைக் காலுடன் ஐயப்பனைக் காண சபரிமலைக்கு பாதயாத்திரை செய்யும் பக்தர்

தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு இந்தியாவில் கரோனா தொற்று முழுமையாக ஒழிய வேண்டி ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து, கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் திருக்கோயிலுக்கு பாதயாத்திரையாக ஒற்றைக் காலுடன் ஒற்றை ஆளாக சென்ற மாற்றுத்திறனாளியான சுரேஷ், இந்த ஆண்டு ஐயப்பன் மீது கொண்டுள்ள பக்தி காரணமாக தேனி மாவட்டம் கம்பம் நகரில் இருந்து சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்லத் தொடங்கினார்.

கேரள மாநிலத்தில், உள்ள சபரிமலை ஐயப்பன் திருக்கோயில் உலகப்புகழ்பெற்ற மிகவும் பிரசித்திபெற்ற கோயிலாகும். இக்கோயிலுக்கு தமிழ்நாடு மட்டும் அல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்கச் செல்வது உண்டு.

இக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் வாகனத்தில் செல்வது மட்டுமல்லாமல், சில ஐயப்ப பக்தர்கள் இறைவனை வேண்டி பாதயாத்திரையாக பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே சபரிமலைக்குச் செல்வதும் வழக்கமாக உள்ளது. கடந்த ஆண்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாகவும் நலமுடன் இருக்க வேண்டியும், கரோனா தொற்று இந்தியாவில் முழுமையாக ஒழிய வேண்டும் என்றும் சபரிமலை ஐயப்பனை வேண்டி, ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சுமார் 750 கிலோ மீட்டருக்கும் மேல் இரு மாநிலத்தைக் கடந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பாதயாத்திரையாக ஒற்றைக் காலுடன் தனியாக மாற்றுத்திறனாளியான, சுரேஷ் பயணம் மேற்கொண்டு, சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்தார்.

இந்த நிலையில் தற்போது ஐயப்பன் மீது கொண்ட பக்தி காரணமாக தேனி மாவட்டம் கம்பம் நகரில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சுமார் 130 கி.மீ. பாதயாத்திரையாக செல்லத் தொடங்கி உள்ளார். ஒவ்வொரு நாளும் பத்து கிலோமீட்டர் நடைபயணமாக மேற்கொண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ய உள்ளார்.

கடந்த ஆண்டு கரோனா பரவல் முழுமையாக ஒழிய வேண்டும் என்பதற்காக நடைபயணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற இவர் இந்த ஆண்டு ஐயப்பன் மீது கொண்டுள்ள அதீத பற்று காரணமாக தனது உறவினருடன் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்கிறார். ஒற்றைக்காலுடன் சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்லும் நபரை கண்டு பலரும் வியந்து பாராட்டியும் வருகின்றனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 6.20 கோடி வாக்காளர்கள்: இறுதி பட்டியலை வெளியிட்ட சாகு!

Last Updated : Jan 5, 2023, 8:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.