ETV Bharat / state

சுயேச்சை வார்டு உறுப்பினரை கடத்த முயற்சி; கட்சியினரிடையே மோதல் - போலீஸ் தடியடியால் பதற்றம்

author img

By

Published : Jan 6, 2020, 8:42 PM IST

தேனி: பெரியகுளம் அருகே ஊராட்சி மன்றத் துணை தலைவர் பதவியை தக்கவைக்க சுயேட்டை வார்டு பெண் உறுப்பினரை அதிமுகவினர் அழைத்துச் சென்றதால் அதிமுக, திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது.

theni
theni

பெரியகுளம் அருகே உள்ள கீழ வடகரை ஊராட்சி மன்றத் தேர்தலில், தலைவர் பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிட்ட செல்வராணி செல்வராஜ் என்பவர் வெற்றிபெற்றிருந்தார். இந்நிலையில், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவியை அதிமுகவினர் தக்கவைத்துக்கொள்ள, ஏழு வார்டு உறுப்பினர்கள் தேவைப்பட்ட நிலையில், ஐந்து வார்டு உறுப்பினர்கள் மட்டுமே அவர்களிடம் இருந்தனர்.

இதனால் எதிரணியில் இருக்கும் வார்டு உறுப்பினரை பதவிஏற்பு நிகழ்ச்சி முடிந்தபின்பு, கடத்திச் செல்லவிருப்பதாக காவல் துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

சுயேச்சை உறுப்பினரை அழைத்துச்செல்ல முயன்றதால் பதற்றம்

இதனிடையே பதவிஏற்பு நிகழ்சி முடிவுற்ற பின்பு, திமுக பக்கம் இருந்த ஏழாவது வார்டு பெண் உறுப்பினரான ஜெயராணியை அதிமுகவினர் அழைத்துச் சென்றனர். இதனால் திமுக, அதிமுகவினரிடையே மோதல் உண்டாகி ஒருகட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தடுக்க கூட்டத்தில் லேசான தடியடி நடத்தி காவல் துறையினர் கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இதையும் படிங்க: பதவியேற்பு விழாவில் மரக்கன்றுகளைப் பரிசளித்த ஊராட்சித் தலைவர்!

பெரியகுளம் அருகே உள்ள கீழ வடகரை ஊராட்சி மன்றத் தேர்தலில், தலைவர் பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிட்ட செல்வராணி செல்வராஜ் என்பவர் வெற்றிபெற்றிருந்தார். இந்நிலையில், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவியை அதிமுகவினர் தக்கவைத்துக்கொள்ள, ஏழு வார்டு உறுப்பினர்கள் தேவைப்பட்ட நிலையில், ஐந்து வார்டு உறுப்பினர்கள் மட்டுமே அவர்களிடம் இருந்தனர்.

இதனால் எதிரணியில் இருக்கும் வார்டு உறுப்பினரை பதவிஏற்பு நிகழ்ச்சி முடிந்தபின்பு, கடத்திச் செல்லவிருப்பதாக காவல் துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

சுயேச்சை உறுப்பினரை அழைத்துச்செல்ல முயன்றதால் பதற்றம்

இதனிடையே பதவிஏற்பு நிகழ்சி முடிவுற்ற பின்பு, திமுக பக்கம் இருந்த ஏழாவது வார்டு பெண் உறுப்பினரான ஜெயராணியை அதிமுகவினர் அழைத்துச் சென்றனர். இதனால் திமுக, அதிமுகவினரிடையே மோதல் உண்டாகி ஒருகட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தடுக்க கூட்டத்தில் லேசான தடியடி நடத்தி காவல் துறையினர் கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இதையும் படிங்க: பதவியேற்பு விழாவில் மரக்கன்றுகளைப் பரிசளித்த ஊராட்சித் தலைவர்!

Intro: பெரியகுளம் அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவியை தக்க வைக்க வார்டு பெண் உறுப்பினரை அதிமுகவினர் அழைத்து சென்றதால் அதிமுக, திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டத்தால் கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைப்பு.
Body: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழ வடகரை ஊராட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்ட செல்வராணி செல்வராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில் ஊராட்சி மன்ற துணை தலைவர் பதிவியை அதிமுகவினர் தக்க வைக்க 7 வார்டு உறுப்பினர்கள் தேவை பட்ட நிலையில் 5, வார்டு உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். இதனால் எதிர் அணியில் இருப்பவர்களை பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிந்த பின்பு வார்டு உறுப்பினரை கடத்தி செல்லவிருப்பதை அறிந்த காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றனர். பதவி ஏற்பு நிகழ்சி முடிவுற்ற பின்பு திமுக பக்கம் இருந்த 7வது வார்டு ஒரு பெண் உறுப்பினர் ஜெயராணியை அதிமுகவினர் அழைத்து சென்றனர். இதனால் திமுக அதிமுகவினரிடையே மோதல் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர் மோதலை தடுக்க கூட்டத்தில் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

Conclusion: வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு கடந்த 3 நாட்களாக திமுக உறுப்பினராக இருந்த பெண் அதிமுகவினரால் அழைத்து செல்லப்பட்டதால் அந்த பகுதியில் மக்கள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.