ETV Bharat / state

Theni Student murder: தேனி அருகே பள்ளி மாணவன் படுகொலைக்கு காதல் காரணமா..? போலீசார் விசாரணை

தேனி அருகே பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மாணவன் காதலித்ததாகக் கூறப்படும் பெண்ணின் பெற்றோர், உறவினர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தேனி அருகே பள்ளி மாணவன் படுகொலை
தேனி அருகே பள்ளி மாணவன் படுகொலை
author img

By

Published : May 17, 2023, 12:05 PM IST

Updated : May 17, 2023, 12:13 PM IST

தேனி: வீட்டில் இருந்து வெளியே சென்ற பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர் மீண்டும் வீடு திரும்பாத நிலையில், கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி அருகே வீரசின்னம்மாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் எனும் கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி ஊஞ்சம்மாள். இந்த தம்பதிக்கு காமேஸ்வரன் வயது 17 என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். காமேஸ்வரன் சமீபத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்திருந்தார். இந்த நிலையில் காமேஸ்வரன் கடந்த ஞாயிற்றுக் கிழமை (மே 14) அவர் வீட்டில் இருந்து வெளியே சென்று உள்ளார். ஆனால், காமேஸ்வரன் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் குடும்பத்தினர் அவரை அக்கம்பக்கத்தில் தேடி உள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் (மே 15) அவருடைய வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள காலி இடத்தில் காமேஸ்வரன் சடலமாக கிடப்பதாக ஊஞ்சம்மாளுக்குத் தகவல் கிடைத்தது.

தகவல் அறிந்த உடன் அவர் அங்கு சென்று பார்த்து உள்ளார். அப்போது அங்கு காமேஸ்வரன் கழுத்து அறுபட்டு தலை திருகிய நிலையில் சடலமாக கிடந்து உள்ளார். இதைப் பார்த்து அவருடைய தாயார் கதறி அழுதார். இது குறித்து தகவல் அறிந்த பழனிசெட்டிபட்டி காவல் ஆய்வாளர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த காமேஸ்வரன் உடலைக் கைப்பற்றினர்.

பின்னர் காமேஸ்வரன் உடல் கிடந்த இடத்தை ஆய்வு செய்த போலீசார் தடயங்களை சேகரித்தனர். பின்னர் காமேஸ்வரன் உடலைப் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து காமேஸ்வரன் தாயார் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவர் அளித்தப் புகாரின் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் கொலை செய்யப்பட்ட மாணவன் காமேஸ்வரன் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், இது குறித்து இரு வீட்டாருக்கும் தெரியவந்த நிலையில் பெண்ணின் வீட்டில் இவர்கள் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவன் காமேஸ்வரன் கொலை சம்பவத்தில் பெண்ணின் உறவினர்களுக்கு தொடர்பு இருக்கலாமோ என்கின்ற சந்தேகத்தில் பழனிசெட்டிபட்டி போலீசார், சம்பந்தப்பட்ட பெண்ணின் உறவினர்களை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், மாணவன் கொலை செய்யப்பட்டதில் வேறு எவருக்கும் சம்பந்தம் உள்ளதா, மாணவருக்கு வேறு எவருடனும் தகராறு ஏதேனும் இருந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் மாணவனின் நண்பர்களிடமும், அவர் அடிக்கடி சென்று வரும் இடங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: 'பாண்டியநாடு' பட பாணியில் நடந்த கொலை - மகனின் கொலைக்கு பழி தீர்த்த தந்தை

தேனி: வீட்டில் இருந்து வெளியே சென்ற பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர் மீண்டும் வீடு திரும்பாத நிலையில், கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி அருகே வீரசின்னம்மாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் எனும் கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி ஊஞ்சம்மாள். இந்த தம்பதிக்கு காமேஸ்வரன் வயது 17 என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். காமேஸ்வரன் சமீபத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்திருந்தார். இந்த நிலையில் காமேஸ்வரன் கடந்த ஞாயிற்றுக் கிழமை (மே 14) அவர் வீட்டில் இருந்து வெளியே சென்று உள்ளார். ஆனால், காமேஸ்வரன் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் குடும்பத்தினர் அவரை அக்கம்பக்கத்தில் தேடி உள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் (மே 15) அவருடைய வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள காலி இடத்தில் காமேஸ்வரன் சடலமாக கிடப்பதாக ஊஞ்சம்மாளுக்குத் தகவல் கிடைத்தது.

தகவல் அறிந்த உடன் அவர் அங்கு சென்று பார்த்து உள்ளார். அப்போது அங்கு காமேஸ்வரன் கழுத்து அறுபட்டு தலை திருகிய நிலையில் சடலமாக கிடந்து உள்ளார். இதைப் பார்த்து அவருடைய தாயார் கதறி அழுதார். இது குறித்து தகவல் அறிந்த பழனிசெட்டிபட்டி காவல் ஆய்வாளர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த காமேஸ்வரன் உடலைக் கைப்பற்றினர்.

பின்னர் காமேஸ்வரன் உடல் கிடந்த இடத்தை ஆய்வு செய்த போலீசார் தடயங்களை சேகரித்தனர். பின்னர் காமேஸ்வரன் உடலைப் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து காமேஸ்வரன் தாயார் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவர் அளித்தப் புகாரின் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் கொலை செய்யப்பட்ட மாணவன் காமேஸ்வரன் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், இது குறித்து இரு வீட்டாருக்கும் தெரியவந்த நிலையில் பெண்ணின் வீட்டில் இவர்கள் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவன் காமேஸ்வரன் கொலை சம்பவத்தில் பெண்ணின் உறவினர்களுக்கு தொடர்பு இருக்கலாமோ என்கின்ற சந்தேகத்தில் பழனிசெட்டிபட்டி போலீசார், சம்பந்தப்பட்ட பெண்ணின் உறவினர்களை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், மாணவன் கொலை செய்யப்பட்டதில் வேறு எவருக்கும் சம்பந்தம் உள்ளதா, மாணவருக்கு வேறு எவருடனும் தகராறு ஏதேனும் இருந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் மாணவனின் நண்பர்களிடமும், அவர் அடிக்கடி சென்று வரும் இடங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: 'பாண்டியநாடு' பட பாணியில் நடந்த கொலை - மகனின் கொலைக்கு பழி தீர்த்த தந்தை

Last Updated : May 17, 2023, 12:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.