ETV Bharat / state

அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த விவசாயி உயிரிழப்பு

author img

By

Published : Jan 1, 2021, 6:58 AM IST

பெரியகுளம் அருகேயுள்ள செலும்பாற்று பகுதியில், அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

A farmer was killed when he stepped on a power line near Periyakulam
பெரியகுளம் அருகே அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த விவசாயி உயிரிழப்பு

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள செலும்பாற்று பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வீரய்யா (70). இவர், தனக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் இன்று வழக்கம்போல் தோட்ட வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது, தென்னை மரக்கிளை விழுந்ததில், மின்கம்பி அறுந்து கீழே விழுந்துள்ளது. இதனைக் கவனிக்காமல் நடந்து சென்ற வீரய்யா மின்கம்பியை மிதித்ததால் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.

இதையறிந்த அப்பகுதி மக்கள் மின்வாரியம், காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரியத்தினர் விவசாயி வீரய்யாவின் மரணம் குறித்து ஆய்வு செய்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள மின் இணைப்பைத் துண்டித்து அறுந்து விழுந்த மின்கம்பியை சரி செய்தனர்.

இதையடுத்து வீரய்யாவின் உடலை உடற்கூராய்விற்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததோடு இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்து விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தேனியில் முகாமிட்ட திமுக தேர்தல் அறிக்கைத் தயாரிக்கும் குழு

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள செலும்பாற்று பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வீரய்யா (70). இவர், தனக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் இன்று வழக்கம்போல் தோட்ட வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது, தென்னை மரக்கிளை விழுந்ததில், மின்கம்பி அறுந்து கீழே விழுந்துள்ளது. இதனைக் கவனிக்காமல் நடந்து சென்ற வீரய்யா மின்கம்பியை மிதித்ததால் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.

இதையறிந்த அப்பகுதி மக்கள் மின்வாரியம், காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரியத்தினர் விவசாயி வீரய்யாவின் மரணம் குறித்து ஆய்வு செய்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள மின் இணைப்பைத் துண்டித்து அறுந்து விழுந்த மின்கம்பியை சரி செய்தனர்.

இதையடுத்து வீரய்யாவின் உடலை உடற்கூராய்விற்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததோடு இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்து விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தேனியில் முகாமிட்ட திமுக தேர்தல் அறிக்கைத் தயாரிக்கும் குழு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.