ETV Bharat / state

சாலையில் சரிந்து விழுந்த மரங்கள் - போக்குவரத்து இடையூறு!

author img

By

Published : Oct 18, 2019, 3:05 PM IST

நீலகிரி: கனமழையால் பல்வேறு இடங்களில் சாலைகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

போக்குவரத்து இடையூறு!

நீலகிரி மாவட்ட சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குந்தா, கோத்தகிரி, குன்னூர், உதகை உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

நீலகிரியில் போக்குவரத்து பாதிப்பு

இதேபோன்று உதகை, குன்னூர் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் அருவங்காடு பகுதியில் மூன்று ராட்சத மரங்கள் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்தத் தகவலறிந்த குன்னூர் தீயணைப்புத் துறையினர் 30க்கும் மேற்பட்டோர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால் சுமார் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்களுக்கு இடையூரானது. மேலும் நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க:

ஊட்டியில் மண் சரிவு - வாகன ஓட்டிகள் அவதி!

நீலகிரி மாவட்ட சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குந்தா, கோத்தகிரி, குன்னூர், உதகை உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

நீலகிரியில் போக்குவரத்து பாதிப்பு

இதேபோன்று உதகை, குன்னூர் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் அருவங்காடு பகுதியில் மூன்று ராட்சத மரங்கள் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்தத் தகவலறிந்த குன்னூர் தீயணைப்புத் துறையினர் 30க்கும் மேற்பட்டோர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால் சுமார் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்களுக்கு இடையூரானது. மேலும் நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க:

ஊட்டியில் மண் சரிவு - வாகன ஓட்டிகள் அவதி!

Intro:நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழை எதிரொலி உதகை குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் அருவங்காடு பகுதியில் ராட்சத மரம் விழுந்து இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


Body:நீலகிரி மாவட்ட சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக பலத்த மழை பெய்து வருகிறது இந்நிலையில் குந்தா கோத்தகிரி குன்னூர் உதகை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து சாலைகளில் மரம் விழுந்து மண்சரிவு ஏற்படும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது இதேபோன்று உதகை குன்னூர் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் அருவங்காடு பகுதியில் ராட்சத மரங்கள் 3 விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு பெரிதும் பாதிக்கப்பட்டது இந்நிலையில் உடனடியாக குன்னூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் கார்டிட் பேக்டரி தீயணைப்புத்துறையினர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர் சுமார் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதனால் அலுவலக பணியாளர்கள் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் தவித்து வந்தனர் நோயாளிகளின் ஆம்புலன்ஸ்சும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர் இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது பேட்டி ஜெர்ரி அருவங்காடு குன்னூர்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.