ETV Bharat / state

தொட்டபெட்டா காட்சிமுனை சாலையை திறக்க சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை

நீலகிரி: உதகை அருகே 45 நாட்களாக மூடப்பட்டுள்ள தொட்டபெட்டா காட்சிமுனை சாலையை உடனடியாக திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

author img

By

Published : Jul 27, 2019, 4:07 PM IST

Dodabetta Road

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் ஊட்டி இந்தியாவின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. கோடை சீசன் மட்டுமின்றி, நாள்தோறும் தமிழ்நாடு மட்டுமில்லாமல் பல வெளிமாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகைதருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம், படகு இல்லம், தேயிலை பூங்கா, சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, முதுமலை புலிகள் சரணாலயம் உள்பட ஏராளமான சுற்றுலா தலங்களுக்கு செல்வது வழக்கம்.

திறக்கப்படாத நிலையில் உள்ள தொட்டபெட்டா காட்சிமுனை சாலை

இதில் குறிப்பாக தென்னிந்தியாவின் உயரமான சிகரம் என்று அழைக்கப்படும் தொட்டபெட்டா காட்சிமுனையை காண தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள்வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் உதகை - கோத்தகிரி நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம் வாகனங்களில் சென்று பார்வையிட்டு வந்தனர். கடல் மட்டத்திலிருந்து 2637 மீட்டர் உயரத்தில் உள்ள தொட்டபெட்டா சிகரத்தை கண்டுரசித்து செல்கின்றனர்.

வனத்துறை கட்டுபாட்டில் உள்ள இந்தசாலை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கபடாமல் இருந்ததையடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைவிடுக்கபட்டது.

இதனையடுத்து, தமிழ்நாடு அரசு ரூ.1.09 கோடி நிதி ஒதுக்கியது. அந்த நிதியில் சாலை தற்போது சீரமைக்கபட்டுள்ளதுடன், சாலையின் இருபுறமும் கான்கீரிட் போடப்பட்டுள்ளன. ஆனாலும், 15 நாட்கள் மேலாகி இந்த சாலை திறக்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த சுற்றுலாப் பயணிகள் 15 நாட்கள் ஆகியும் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்காக அந்த சாலை திறக்கப்படாமல் உள்ளது. எனவே அதை உடனடியாக திறக்கவேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் ஊட்டி இந்தியாவின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. கோடை சீசன் மட்டுமின்றி, நாள்தோறும் தமிழ்நாடு மட்டுமில்லாமல் பல வெளிமாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகைதருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம், படகு இல்லம், தேயிலை பூங்கா, சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, முதுமலை புலிகள் சரணாலயம் உள்பட ஏராளமான சுற்றுலா தலங்களுக்கு செல்வது வழக்கம்.

திறக்கப்படாத நிலையில் உள்ள தொட்டபெட்டா காட்சிமுனை சாலை

இதில் குறிப்பாக தென்னிந்தியாவின் உயரமான சிகரம் என்று அழைக்கப்படும் தொட்டபெட்டா காட்சிமுனையை காண தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள்வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் உதகை - கோத்தகிரி நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம் வாகனங்களில் சென்று பார்வையிட்டு வந்தனர். கடல் மட்டத்திலிருந்து 2637 மீட்டர் உயரத்தில் உள்ள தொட்டபெட்டா சிகரத்தை கண்டுரசித்து செல்கின்றனர்.

வனத்துறை கட்டுபாட்டில் உள்ள இந்தசாலை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கபடாமல் இருந்ததையடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைவிடுக்கபட்டது.

இதனையடுத்து, தமிழ்நாடு அரசு ரூ.1.09 கோடி நிதி ஒதுக்கியது. அந்த நிதியில் சாலை தற்போது சீரமைக்கபட்டுள்ளதுடன், சாலையின் இருபுறமும் கான்கீரிட் போடப்பட்டுள்ளன. ஆனாலும், 15 நாட்கள் மேலாகி இந்த சாலை திறக்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த சுற்றுலாப் பயணிகள் 15 நாட்கள் ஆகியும் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்காக அந்த சாலை திறக்கப்படாமல் உள்ளது. எனவே அதை உடனடியாக திறக்கவேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:OotyBody:
உதகை package 27-07-19
உதகை அருகே கடந்த 45 நாட்களாக மூடப்பட்டுள்ள தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்லும் சாலையை உடனடியாக திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலா தலமாக உள்ளது. கோடை சீசன் மட்டுமின்றி நாள்தோரும் தமிழ்நாடு, கர்நாடாக, கேரளா என வெளிமாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம், படகு இல்லம், தேயிலை பூங்கா, சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, முதுமலை புலிகள் சரணாலயம் உள்பட ஏராளமான சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம். இந்நிலையில் தென்னிந்தியாவின் உயரமான சிகரம் என்று அழைக்கபடும் இந்த தொட்டபெட்டா காட்சிமுனையை காண தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் உதகை - கோத்தகிரி நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம் வாகனங்களில் சென்று பார்வையிட்டு வந்தனர். கடல் மட்டத்திலிருந்து 2637மீட்டர் உயரத்தில் உள்ள தொட்டபெட்டா சிகரத்தை கண்டு ரசித்து செல்கின்றனர். வனத்துறை கட்டுபாட்டில் உள்ள அந்த சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கபடாமல் இருந்தது. மேலும் போதிய பராமரிப்பு இல்லாததால் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக மாறி வாகனங்கள் பெரும் சிரமத்துடன் இயக்க வேண்டிய அவல நிலை இருந்தது.
இதனையடுத்து அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைவிடுக்கபட்ட நிலையில் சாலையை சீரமைக்க தமிழக அரசு 1.9 கோடி நிதி ஒதுக்கியது. அந்த நிதியில் சாலை தற்போது சீரமைக்கபட்டுள்ளதுடன், சாலையின் இருபுறமும் காண்கிரீட் போடபட்டுள்ளது. இந்த நிலையில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து சுமார் 15 நாட்கள் ஆகியும் சுற்றுலா பயணிகள் செல்வதற்காக அந்த சாலை திறக்கபடாமல் உள்ளது. முக்கிய அமைச்சர்கள் வந்து அச்சாலையை திறந்து வைக்க வேண்டும் என்பதற்காக சாலை திறக்கபடாமல் உள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் தொட்டபெட்டா காட்சிமுனையை காண வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே இந்த சாலையை திறக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
பேட்டி:         1. வல்லாளி - சுற்றுலா பயணி சென்னை
2. பாபு – சுற்றுலா வாகன ஓட்டி



Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.