ETV Bharat / state

பழங்குடியின மக்களின் குறைகளை நடந்து சென்றே தீர்க்கும் நீலகிரி ஆட்சியர்! - பழங்குடியின கிரமாங்களுக்கு சென்ற நீலகிரி மாவட்ட ஆட்சியர்

நீலகிரி: வனப்பகுதி வழியாக பழங்குடியினர் கிராமங்களுக்கு நடந்துசென்றே அங்கு அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துதந்த மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மக்களின் குறைகளை நேரிலே சென்று தீர்க்கும் மாவட்ட ஆட்சியர்!
author img

By

Published : Oct 18, 2019, 4:07 PM IST

நீலகிரி மாவட்டத்தில் இருளர், தோடர், கோத்தர், பனியர், காட்டுநாயக்கர், குரும்பர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்துவருகின்றனர். வனப்பகுதியிலும் வனப்பகுதியையொட்டிள்ள கிராமங்களிலும் வசித்துவரும் இவர்கள் அடிப்படை வசதிகளின்றி தவித்துவருகின்றனர். இவர்கள் தங்கள் தேவைகளைக் கோரி மனுக்கள் வழங்க வேண்டுமென்றாலும் வெகு தொலைவிலிருந்து உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத்தான் வர வேண்டும்.

நீலகிரி மாவட்ட ஆட்சியரின் மகத்தான தேவை

இதனையறிந்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அவர்களின் கிராமத்திற்கேச் சென்று அவர்களுடைய குறைகளைக் கேட்டறிந்து அதைத் தீர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டுவருகிறார். இதன்படி இன்று வன விலங்குகள் நடமாட்டம் உள்ள வனப்பகுதி வழியாக 12 கி.மீ. தூரம் நடந்துசென்றே ஆனைகட்டியைச் சுற்றியுள்ள பழங்குடியின மக்களைச் சந்தித்துள்ளார். அப்போது குடிநீர் குழாய் சீரமைப்பு, 25 பசுமை குடில் வீடுகள் திட்டம், பள்ளி கட்டடம் சீரமைப்பு, பேருந்து வசதி உள்பட பல திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.

மேலும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளைக் கண்காணிக்க சிறப்பு ஏற்பாடு செய்தார். மாவட்ட ஆட்சியரே தங்களது கிராமத்திற்கு நடந்துவந்து குறைகளைக் கேட்டறிந்ததற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்ததோடு திட்டங்களை விரைவாக நிறைவேற்றித் தர கோரிக்கைவிடுத்தனர்.

இதையும் படியுங்க:

காட்டுப்பன்றி என நினைத்து காதலர்களை சுட்ட விவசாயி - காதலன் பலி!

நீலகிரி மாவட்டத்தில் இருளர், தோடர், கோத்தர், பனியர், காட்டுநாயக்கர், குரும்பர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்துவருகின்றனர். வனப்பகுதியிலும் வனப்பகுதியையொட்டிள்ள கிராமங்களிலும் வசித்துவரும் இவர்கள் அடிப்படை வசதிகளின்றி தவித்துவருகின்றனர். இவர்கள் தங்கள் தேவைகளைக் கோரி மனுக்கள் வழங்க வேண்டுமென்றாலும் வெகு தொலைவிலிருந்து உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத்தான் வர வேண்டும்.

நீலகிரி மாவட்ட ஆட்சியரின் மகத்தான தேவை

இதனையறிந்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அவர்களின் கிராமத்திற்கேச் சென்று அவர்களுடைய குறைகளைக் கேட்டறிந்து அதைத் தீர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டுவருகிறார். இதன்படி இன்று வன விலங்குகள் நடமாட்டம் உள்ள வனப்பகுதி வழியாக 12 கி.மீ. தூரம் நடந்துசென்றே ஆனைகட்டியைச் சுற்றியுள்ள பழங்குடியின மக்களைச் சந்தித்துள்ளார். அப்போது குடிநீர் குழாய் சீரமைப்பு, 25 பசுமை குடில் வீடுகள் திட்டம், பள்ளி கட்டடம் சீரமைப்பு, பேருந்து வசதி உள்பட பல திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.

மேலும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளைக் கண்காணிக்க சிறப்பு ஏற்பாடு செய்தார். மாவட்ட ஆட்சியரே தங்களது கிராமத்திற்கு நடந்துவந்து குறைகளைக் கேட்டறிந்ததற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்ததோடு திட்டங்களை விரைவாக நிறைவேற்றித் தர கோரிக்கைவிடுத்தனர்.

இதையும் படியுங்க:

காட்டுப்பன்றி என நினைத்து காதலர்களை சுட்ட விவசாயி - காதலன் பலி!

Intro:OotyBody:உதகை 18-10-19
12 கி.மீ தூரம் அடர்ந்த வனபகுதி வழியாக ஆதிவாசி கிரமாங்களுக்கு நடந்து சென்று அடிபடை வசதிகளுக்கு உடனடி தீர்வு கண்ட நீலகிரி மாவட்ட ஆட்சியர். புழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்,
நீலகிரி மாவட்டத்தில் இருளர், தோடர், கோத்தர், பனியர், காட்டுநாயக்கர், குரும்பர் உள்ளிட்ட 6 வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் வனபகுதியிலும், வனப்பகுதியெட்டிள்ள கிராமங்களில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு போதுமான அடிப்படை வசிதிகள் இன்றி இன்றளவும் பல கிராமத்ததை சேர்ந்த பழங்குடியின மக்கள் தவித்து வருகின்றனர். இவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து குறைகளை மனுக்களாக கொடுக்க உதகை ஆட்சியர் அலுவலகத்திற்கு தான் வர வேண்டும. தங்கள் கிராமங்களில் இருந்த வெகு தொலைவு வர வேண்டும் என்பதற்காகவே பலர் அடிபடை வசதிகளின்ற தவித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த நீலகிரி மாவட்;ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பழங்குடியின மக்களை அரசு அலுவலர்கள் அனைவரும் அவர்களது பழங்குடியின கிராமத்திற்கே சென்று குறைகளை கேட்டறிய முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதன்படி இன்று ஆனைகட்டி மற்றும் அதைனை சுற்றியுள்ள ஆதிவாசி மக்களை சந்;திக்க வன விலங்குகள் அதிக நடமாட்டம் அதிகம் உள்ள அடர்ந்த வன பகுதி வழியாக 12 கி.மீ தூரம் நடந்து சென்று கிராம மக்களை சந்திதார். அப்போது குடிநீர் பிரச்சனை, குடிநீர் குழாய் சீரமைப்பு. விளையாட்டு மைதானம், 25 பசுமை குடில் வீடுகள் திட்டம், பள்ளி கட்டடிம் சீரமைப்பு, பேருந்து வசதி, சாலை வசதி உட்டபட பல திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் ஊட்டசத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கண்காணிக்க சிறப்பு ஏற்பாடு செய்தார். பின்னர் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார். முன்னதாக வனப்பகுதி வழியாக வரும் போது யானை வழிதடங்களில் சீல் வைக்கட்ட தனியார் தங்கும் விடுதிகளை ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் தங்களது கிராமத்திற்கு நடந்து வந்து கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கு பழங்குடியினர் நன்றி தெரிவித்ததோடு திட்டங்களை விரைவாக நிறைவேற்றி தர கோரிகைவிடுத்தனர்.Conclusion:Ooty

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.