ETV Bharat / state

கோட்டாட்சியர் அலுவலத்திலுள்ள சொத்துக்கள் ஜப்தி... நேரில் சென்ற அதிகாரிகளுக்கு அதிர்ச்சி..

author img

By

Published : Oct 17, 2022, 4:56 PM IST

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசால் கையகப்படுத்த நிலத்தின் உரிமையாளருக்கு இழப்பீடு வழங்காத நிலையில் கோட்டாட்சியர் அலுவலத்திலுள்ள அசையும் சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட்டன.

Etv Bharat
Etv Bharat

தஞ்சாவூர்: கும்பகோணம் பெரியசாமி நகரைச் சேர்ந்தவர் சுவாமிநாதன். இவருக்குச் சொந்தமான 12ஆயிரத்து 500 சதுர அடி இடம், செட்டிமண்டபம் புறவழிச்சாலை பணிகளுக்காக 2011ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால், நிலம் கையகப்படுத்தப்பட்டது.

இதில் அருகில் இருந்த பிற நில உரிமையாளர்களுக்கு சதுர அடி ஒன்றுக்கு ரூபாய் 168 வீதம் இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், சுவாமிநாதனுக்கு மட்டும், சதுர அடி ஒன்றுக்கு ரூபாய் 42 என்று மட்டும் நிர்ணயம் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து இவர் கும்பகோணம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் 2011ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்திருந்தார். இவ்வழக்கில் கடந்த 2016ஆம் ஆண்டு சுவாமிநாதனுக்கு, ரூபாய் 60 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், இதனை தமிழ்நாடு அரசு வழங்க காலம் தாமதம் செய்து வந்த நிலையில், 2018ஆம் ஆண்டு இது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில், கும்பகோணம் கோட்டாட்சியர் இந்த இழப்பீட்டினை 2022 செப்டம்பர் 7ஆம் தேதிக்குள் வழங்குவதாக உறுதி அளித்திருந்தார்.

அதன் பிறகும் இழப்பீடு வழங்காத நிலையில், பாதிக்கப்பட்டவர் சம்மந்தப்பட்ட கும்பகோணம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட்டதை தொடர்ந்து, முதன்மை சார்பு நீதிபதி, கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலக வாகனத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டு இருந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி அந்த வாகனம் ஜப்தி செய்யப்பட்டது.

தொடர்ந்து இந்ந இழப்பீட்டினை வழங்க, அரசு தரப்பில் எந்தவித உத்தரவாதமும் பாதிக்கப்பட்ட நபருக்கு தராத நிலையிலும், மேலும் ஏற்கனவே ஜப்தி செய்யப்பட்ட வாகனமும், இழப்பீட்டிற்கு தொகைக்கு ஈடானதாக இல்லாத காரணத்தினாலும், இன்று கும்பகோணம் கோட்டாட்சியரின் அலுவலகத்தில் உள்ள அசையும் பொருள்களை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

கோட்டாட்சியர் அலுவலத்திலுள்ள அசையும் சொத்துக்கள் ஜப்தி

அதனைத் தொடர்ந்து, நீதிமன்ற அமீனா, பாதிக்கப்பட்ட நில உரிமையாளர் சுவாமிநாதன் அவரது வழக்கறிஞர் ராஜ்வேல் ஆகியோர் அலுவலக பொருள்களை ஜப்தி செய்ய கோட்டாட்சியர் அலுவலகம் சென்றனர். ஆனால், அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அலுவலகத்தில் இருந்து 15-க்கும் மேற்பட்ட மின்விசிறிகள், 10க்கும் மேற்பட்ட கணினிகள், வழக்கமான இருக்கைகள், ஏசி சாதனம் ஆகியவை மாயமாகி வெறிச்சோடி காணப்பட்டது.

தேவையில்லாத கோப்புகள், அகற்ற முடியாத பெரிய மேசைகள் சில மட்டுமே அலுவலகத்தில் இருந்தது. இதனையடுத்து, இருந்த பொருள்களை ஜப்தி செய்து ஒரு அறையில் வைத்து பூட்டினர். இதனால், இன்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே கோட்டாட்சியர் அலுவலக ஜீப் ஜப்தி செய்யப்பட்டும் இழப்பீடு தொகை வழங்க அரசு முன்வராத நிலையில் இன்று அசையும் பொருள்கள் ஜப்தி செய்யப்பட்டுள்ளது.

இழப்பீடு வழங்க மேலும் காலதாமதம் செய்தால், தஞ்சை மாவட்ட ஆட்சியரின் வாகனத்தையும், அவரது அலுவலக அசையும் பொருள்களையும் ஜப்தி செய்ய வேண்டி நீதிமன்றத்தை அணுகுவோம் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அமேசான் குடோனில் கொள்ளை... சுவற்றில் துளையிட்டு துணிகரம்..

தஞ்சாவூர்: கும்பகோணம் பெரியசாமி நகரைச் சேர்ந்தவர் சுவாமிநாதன். இவருக்குச் சொந்தமான 12ஆயிரத்து 500 சதுர அடி இடம், செட்டிமண்டபம் புறவழிச்சாலை பணிகளுக்காக 2011ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால், நிலம் கையகப்படுத்தப்பட்டது.

இதில் அருகில் இருந்த பிற நில உரிமையாளர்களுக்கு சதுர அடி ஒன்றுக்கு ரூபாய் 168 வீதம் இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், சுவாமிநாதனுக்கு மட்டும், சதுர அடி ஒன்றுக்கு ரூபாய் 42 என்று மட்டும் நிர்ணயம் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து இவர் கும்பகோணம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் 2011ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்திருந்தார். இவ்வழக்கில் கடந்த 2016ஆம் ஆண்டு சுவாமிநாதனுக்கு, ரூபாய் 60 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், இதனை தமிழ்நாடு அரசு வழங்க காலம் தாமதம் செய்து வந்த நிலையில், 2018ஆம் ஆண்டு இது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில், கும்பகோணம் கோட்டாட்சியர் இந்த இழப்பீட்டினை 2022 செப்டம்பர் 7ஆம் தேதிக்குள் வழங்குவதாக உறுதி அளித்திருந்தார்.

அதன் பிறகும் இழப்பீடு வழங்காத நிலையில், பாதிக்கப்பட்டவர் சம்மந்தப்பட்ட கும்பகோணம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட்டதை தொடர்ந்து, முதன்மை சார்பு நீதிபதி, கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலக வாகனத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டு இருந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி அந்த வாகனம் ஜப்தி செய்யப்பட்டது.

தொடர்ந்து இந்ந இழப்பீட்டினை வழங்க, அரசு தரப்பில் எந்தவித உத்தரவாதமும் பாதிக்கப்பட்ட நபருக்கு தராத நிலையிலும், மேலும் ஏற்கனவே ஜப்தி செய்யப்பட்ட வாகனமும், இழப்பீட்டிற்கு தொகைக்கு ஈடானதாக இல்லாத காரணத்தினாலும், இன்று கும்பகோணம் கோட்டாட்சியரின் அலுவலகத்தில் உள்ள அசையும் பொருள்களை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

கோட்டாட்சியர் அலுவலத்திலுள்ள அசையும் சொத்துக்கள் ஜப்தி

அதனைத் தொடர்ந்து, நீதிமன்ற அமீனா, பாதிக்கப்பட்ட நில உரிமையாளர் சுவாமிநாதன் அவரது வழக்கறிஞர் ராஜ்வேல் ஆகியோர் அலுவலக பொருள்களை ஜப்தி செய்ய கோட்டாட்சியர் அலுவலகம் சென்றனர். ஆனால், அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அலுவலகத்தில் இருந்து 15-க்கும் மேற்பட்ட மின்விசிறிகள், 10க்கும் மேற்பட்ட கணினிகள், வழக்கமான இருக்கைகள், ஏசி சாதனம் ஆகியவை மாயமாகி வெறிச்சோடி காணப்பட்டது.

தேவையில்லாத கோப்புகள், அகற்ற முடியாத பெரிய மேசைகள் சில மட்டுமே அலுவலகத்தில் இருந்தது. இதனையடுத்து, இருந்த பொருள்களை ஜப்தி செய்து ஒரு அறையில் வைத்து பூட்டினர். இதனால், இன்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே கோட்டாட்சியர் அலுவலக ஜீப் ஜப்தி செய்யப்பட்டும் இழப்பீடு தொகை வழங்க அரசு முன்வராத நிலையில் இன்று அசையும் பொருள்கள் ஜப்தி செய்யப்பட்டுள்ளது.

இழப்பீடு வழங்க மேலும் காலதாமதம் செய்தால், தஞ்சை மாவட்ட ஆட்சியரின் வாகனத்தையும், அவரது அலுவலக அசையும் பொருள்களையும் ஜப்தி செய்ய வேண்டி நீதிமன்றத்தை அணுகுவோம் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அமேசான் குடோனில் கொள்ளை... சுவற்றில் துளையிட்டு துணிகரம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.