ETV Bharat / state

தஞ்சாவூரில் திடீரென பொதுமக்கள் சாலை மறியல்!

author img

By

Published : Apr 20, 2020, 1:49 PM IST

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூரில் திடீரென பொதுமக்கள் சாலை மறியல்
தஞ்சாவூரில் திடீரென பொதுமக்கள் சாலை மறியல்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள சாலையில் இன்று காலை ஐம்பதுக்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த அதிராம்பட்டினம் காவல் உதவி ஆய்வாளர் ராஜ், காவலர்கள் விரைந்துசென்று அவர்களிடத்தில் விசாரணை நடத்தினர்.

அதில், இப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராம மக்கள் தாங்கள் செல்லாதவாறு, தடுப்புகள் அமைத்துள்ளதால் அப்பகுதிக்குச் செல்ல முடியாத நிலை உள்ளதாகத் தெரிவித்தனர்.

மேலும், பிரதான சாலையை அடைத்தால்தான் காவல் துறை தலையிடும் என்றும், கிராமப்பகுதியில் உள்ள தெருக்களுக்குச் செல்லும் சாலையை அடைத்தால் அதில் காவல் துறை தலையிட முடியாது என்றும் தெரிவித்தனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் காவல் துறை

இதையடுத்து காவல் துறை நடத்திய பேச்சுவார்த்தையில் அவர்கள் அப்பகுதியிலிருந்து கலைந்துசென்றனர். இந்தத் திடீர் சாலை மறியலால் அதிராம்பட்டினத்திற்கு வந்த எரிவாயு உருளை வாகனம், பால் வண்டிகள் சுமார் 1 மணி நேரம் தடைபட்டது.

இதையும் படிங்க: ஊரடங்கினால் மீண்டும் தலைதூக்கும் சட்டவிரோத மது விற்பனை!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள சாலையில் இன்று காலை ஐம்பதுக்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த அதிராம்பட்டினம் காவல் உதவி ஆய்வாளர் ராஜ், காவலர்கள் விரைந்துசென்று அவர்களிடத்தில் விசாரணை நடத்தினர்.

அதில், இப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராம மக்கள் தாங்கள் செல்லாதவாறு, தடுப்புகள் அமைத்துள்ளதால் அப்பகுதிக்குச் செல்ல முடியாத நிலை உள்ளதாகத் தெரிவித்தனர்.

மேலும், பிரதான சாலையை அடைத்தால்தான் காவல் துறை தலையிடும் என்றும், கிராமப்பகுதியில் உள்ள தெருக்களுக்குச் செல்லும் சாலையை அடைத்தால் அதில் காவல் துறை தலையிட முடியாது என்றும் தெரிவித்தனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் காவல் துறை

இதையடுத்து காவல் துறை நடத்திய பேச்சுவார்த்தையில் அவர்கள் அப்பகுதியிலிருந்து கலைந்துசென்றனர். இந்தத் திடீர் சாலை மறியலால் அதிராம்பட்டினத்திற்கு வந்த எரிவாயு உருளை வாகனம், பால் வண்டிகள் சுமார் 1 மணி நேரம் தடைபட்டது.

இதையும் படிங்க: ஊரடங்கினால் மீண்டும் தலைதூக்கும் சட்டவிரோத மது விற்பனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.