ETV Bharat / state

’கரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை’: பொதுமக்கள் திருப்பி அனுப்பி வைப்பு

author img

By

Published : Jun 5, 2021, 5:08 PM IST

Updated : Jun 5, 2021, 5:33 PM IST

தஞ்சாவூர் அண்ணா நூற்றாண்டு மண்டபத்திலுள்ள தடுப்பூசி முகாமில், கரோனா தொற்று தடுப்பூசி மருந்துகள் கையிருப்பில் இல்லாததால், தடுப்பூசி செலுத்த வந்த பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

பொதுமக்கள் திருப்பி அனுப்பி வைப்பு
பொதுமக்கள் திருப்பி அனுப்பி வைப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 117 இடங்களில் கரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டுவந்தது. நாள்தோறும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 100 பேருக்கும், 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் 100 பேருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

கரோனா தடுப்பூசி கையிருப்பு

அறிஞர் அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் உள்ள தடுப்பூசி மையத்தில் இன்று (ஜூன்5) கரோனா தொற்று தடுப்பூசி கையிருப்பில் இல்லை என்றும், நாளை வரும் என எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. இதனால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வமாக வந்த பொதுமக்கள் ஏமாற்றுத்துடன் திருப்பிச் சென்றனர்.

இணையத்தில் தடுப்பூசி தகவல்கள்

இது குறித்து தடுப்பூசி போட வந்தவரிடம் கேட்டபோது, தடுப்பூசி கையிருப்பு குறித்து மாவட்ட நிர்வாகம் வெளிப்படையாக முன்னதாகவே அறிவிப்பு வெளியிட வேண்டும். இணையத்தில் பதிவு செய்து ஒரு வாரம் ஆகியும் சரியான தகவல் கிடைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினர்.

கரோனா தொற்று தடுப்பூசி கையிருப்பு குறித்த தகவல்களை இணையத்தில் நாள்தோறும் பதிவு செய்து வெளியிட வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: வண்டலூர் பூங்காவைச் சுற்றிவரும் கரோனா; 2 சிங்கங்கள் கவலைக்கிடம்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் 117 இடங்களில் கரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டுவந்தது. நாள்தோறும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 100 பேருக்கும், 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் 100 பேருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

கரோனா தடுப்பூசி கையிருப்பு

அறிஞர் அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் உள்ள தடுப்பூசி மையத்தில் இன்று (ஜூன்5) கரோனா தொற்று தடுப்பூசி கையிருப்பில் இல்லை என்றும், நாளை வரும் என எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. இதனால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வமாக வந்த பொதுமக்கள் ஏமாற்றுத்துடன் திருப்பிச் சென்றனர்.

இணையத்தில் தடுப்பூசி தகவல்கள்

இது குறித்து தடுப்பூசி போட வந்தவரிடம் கேட்டபோது, தடுப்பூசி கையிருப்பு குறித்து மாவட்ட நிர்வாகம் வெளிப்படையாக முன்னதாகவே அறிவிப்பு வெளியிட வேண்டும். இணையத்தில் பதிவு செய்து ஒரு வாரம் ஆகியும் சரியான தகவல் கிடைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினர்.

கரோனா தொற்று தடுப்பூசி கையிருப்பு குறித்த தகவல்களை இணையத்தில் நாள்தோறும் பதிவு செய்து வெளியிட வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: வண்டலூர் பூங்காவைச் சுற்றிவரும் கரோனா; 2 சிங்கங்கள் கவலைக்கிடம்!

Last Updated : Jun 5, 2021, 5:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.