தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், இன்று (ஜூலை 21) ஒரே தினத்தில் 4 ஆயிரத்து 965 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 71 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,316ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 25 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் மாவட்டத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.