தஞ்சாவூர்: வல்லத்தில் தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் 15 கவுன்சிலர்கள் பதவி வகித்து வருகின்றனர். இந்நிலையில் வல்லம் பேரூராட்சிக்குட்பட்ட அரசு நிலத்தில் உள்ள யூகலிப்டஸ் மரத்தை வெட்டி, திமுக கவுன்சிலர் அன்பழகன் உள்ளிட்ட அவரது நண்பர்கள் அனுமதி இன்றி, கடத்திச்சென்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
கடத்தப்பட்ட மரங்களில் பாதி மீட்கப்பட்டுள்ளதாகவும், அதனை பேரூராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுகவைச் சேர்ந்த வார்டு கவுன்சிலர் முருகானந்தம் என்பவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் பேரூராட்சியில் புகார் அளித்துள்ளார்.
![Tanjore tanjore news tanjore latest news aiadmk councilor councilor aiadmk aiadmk councilor complaint smuggling government land tree smuggling from government land aiadmk councilor complaint on tree smuggling மரம் கடத்தல் கடத்தல் கவுன்சிலர் அதிமுக அரசு நிலத்தில் மரம் கடத்தல் அதிமுக கவுன்சிலர் புகார் தஞ்சாவூர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tntnjgovttreecutting_23112022170111_2311f_1669203071_665.jpg)
இதற்கு மறுப்புத்தெரிவித்து திமுக கவுன்சிலர் அன்பழகன், “தனது வார்டு இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக இடம் சுத்தப்படுத்தப்பட்டது. என் மீது தவறு ஏதும் இல்லை" எனத் தெரிவித்தார்.
வெட்டப்பட்ட யூகலிப்டஸ் மரங்கள் பேரூராட்சி அலுவலகத்தில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர், மரங்களை வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீசில் புகார் மனு அளித்துள்ளார்.
இதையும் படிங்க: இருளர் பெண்கள் பாலியல் வழக்கு: போலீஸ் அதிகாரியின் ஜாமீன் மறுப்பு