ETV Bharat / state

ரஜினி, ஜெயலலிதா திரைப்படத்தின் கதாசிரியர் மகரிஷி மரணம்!

author img

By

Published : Sep 28, 2019, 6:55 PM IST

சேலம்: ரஜினிகாந்தின் திரைவாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய புவனா ஒரு கேள்விக்குறி திரைப்படத்தின் கதாசிரியர் நேற்று மரணமடைந்தார்.

writer-magarishi-died-in-salem

மகரிஷி என்கிற பாலசுப்ரமணியம் தமிழ்நாட்டின் பிரபலமான எழுத்தாளர். மே 1, 1932ல் தஞ்சாவூரை அடுத்த ஒரத்தநாட்டில், டி.என். கிருஷ்ணசாமி-மீனாட்சி அம்மாள் தம்பதியினருக்கு பிறந்த இவர், எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் பள்ளிப்பருவத்திலேயே எழுதத் தொடங்கி விட்டார்.

தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத ஆளுமை திகழ்ந்த இவர், சுமார் 130 புதினங்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60 கட்டுரை இலக்கிய நூல்களை எழுதியுள்ளார். இவரது முதல் புதினம் "பனிமலை" வெளிவந்து சில வருடங்களிலே 1965ல் "என்னதான் முடிவு" என்ற திரைப்படமாக வெளிவந்தது.

இதுமட்டுமல்லாமல் இவரது மற்ற புதினங்களும் தொடர்ந்து திரைப்படமாக வெளிவந்து வரவேற்பை பெற்றது . பத்ரகாளி (1977), சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு (1977), புவனா ஒரு கேள்விக்குறி (1977), வட்டத்துக்குள் சதுரம் (1978), நதியை தேடி வந்த கடல் (1980) உள்ளிட்ட திரைப்படங்கள் இவரின் நாவலின் அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு வெள்ளித்திரையில் பெரிய வெற்றியை பெற்றது.

எழுத்தாளார் மகரிஷி மரணம்

தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷியுடையது மட்டுமே. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நடித்த கடைசி படமான ‘நதியை தேடிவந்த கடல்’ இவரது நாவலை தழுவி எடுக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல்.

இவரது இயற்பெயர் பாலசுப்பரமணியம் என்றாலும் அந்த பெயரில் எழுதாமல் தொடர்ச்சியாக மகிரிஷி என்ற புனைப்பெயரிலே எழுதி வந்தார். இந்து மதத்தின்மீது கொண்ட பற்றாலும், ஞானிகள்மீது கொண்ட பெருமதிப்பாலும் 'மகரிஷி' என்ற புனைபெயரை சூட்டிக்கொண்டார்.

இவரது படைப்புகளில் மிகவும் முக்கியமானதாக 'ஸ்படிகம்' குறுநாவலைச் சொல்லலாம். காந்தியக் கொள்கைகளின் பெருமையைப் பேசும் இப்படைப்பு கல்கியில் வெளியானது. இதனைப் பிரபல மொழிபெயர்ப்பாளரான ஆன்டி சுந்தரேசன் 'Pure As a Crystal' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அவரே தெலுங்கிலும் இதனை மொழிபெயர்த்திருக்கிறார்.

'பூர்ணிமா' என்ற இவருடைய நாவல் தொலைக்காட்சித் தொடராகவும் வெளியாகிப் புகழ்பெற்றது. 300க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதிய இவர், கல்கி சிறுகதை போட்டிப் பரிசு, எழுத்துச் சித்தர் விருது, நாவல் திலகம், நாவல் மணி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

இத்தனை சிறப்புகளுக்கு சொந்தக்காரரான நாவலாசிரியர் மகரிஷி, நேற்று இரவு 9.00 மணியளவில் சேலத்தில் அவரது வீட்டில் காலமானார். அவரது உடல் சேலத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: விஜய் அரசியலுக்கு வருவாரா ? பதிலளித்த சந்திரசேகர்

மகரிஷி என்கிற பாலசுப்ரமணியம் தமிழ்நாட்டின் பிரபலமான எழுத்தாளர். மே 1, 1932ல் தஞ்சாவூரை அடுத்த ஒரத்தநாட்டில், டி.என். கிருஷ்ணசாமி-மீனாட்சி அம்மாள் தம்பதியினருக்கு பிறந்த இவர், எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் பள்ளிப்பருவத்திலேயே எழுதத் தொடங்கி விட்டார்.

தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத ஆளுமை திகழ்ந்த இவர், சுமார் 130 புதினங்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60 கட்டுரை இலக்கிய நூல்களை எழுதியுள்ளார். இவரது முதல் புதினம் "பனிமலை" வெளிவந்து சில வருடங்களிலே 1965ல் "என்னதான் முடிவு" என்ற திரைப்படமாக வெளிவந்தது.

இதுமட்டுமல்லாமல் இவரது மற்ற புதினங்களும் தொடர்ந்து திரைப்படமாக வெளிவந்து வரவேற்பை பெற்றது . பத்ரகாளி (1977), சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு (1977), புவனா ஒரு கேள்விக்குறி (1977), வட்டத்துக்குள் சதுரம் (1978), நதியை தேடி வந்த கடல் (1980) உள்ளிட்ட திரைப்படங்கள் இவரின் நாவலின் அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு வெள்ளித்திரையில் பெரிய வெற்றியை பெற்றது.

எழுத்தாளார் மகரிஷி மரணம்

தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷியுடையது மட்டுமே. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நடித்த கடைசி படமான ‘நதியை தேடிவந்த கடல்’ இவரது நாவலை தழுவி எடுக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல்.

இவரது இயற்பெயர் பாலசுப்பரமணியம் என்றாலும் அந்த பெயரில் எழுதாமல் தொடர்ச்சியாக மகிரிஷி என்ற புனைப்பெயரிலே எழுதி வந்தார். இந்து மதத்தின்மீது கொண்ட பற்றாலும், ஞானிகள்மீது கொண்ட பெருமதிப்பாலும் 'மகரிஷி' என்ற புனைபெயரை சூட்டிக்கொண்டார்.

இவரது படைப்புகளில் மிகவும் முக்கியமானதாக 'ஸ்படிகம்' குறுநாவலைச் சொல்லலாம். காந்தியக் கொள்கைகளின் பெருமையைப் பேசும் இப்படைப்பு கல்கியில் வெளியானது. இதனைப் பிரபல மொழிபெயர்ப்பாளரான ஆன்டி சுந்தரேசன் 'Pure As a Crystal' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அவரே தெலுங்கிலும் இதனை மொழிபெயர்த்திருக்கிறார்.

'பூர்ணிமா' என்ற இவருடைய நாவல் தொலைக்காட்சித் தொடராகவும் வெளியாகிப் புகழ்பெற்றது. 300க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதிய இவர், கல்கி சிறுகதை போட்டிப் பரிசு, எழுத்துச் சித்தர் விருது, நாவல் திலகம், நாவல் மணி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

இத்தனை சிறப்புகளுக்கு சொந்தக்காரரான நாவலாசிரியர் மகரிஷி, நேற்று இரவு 9.00 மணியளவில் சேலத்தில் அவரது வீட்டில் காலமானார். அவரது உடல் சேலத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: விஜய் அரசியலுக்கு வருவாரா ? பதிலளித்த சந்திரசேகர்

Intro:முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ரஜினிகாந்த் உள்ளிட்டோரின் திரைப் படங்களின் கதாசிரியர் மகரிஷி சேலத்தில் காலமானார்.Body:

மகரிஷி என்கிற பாலசுப்பிரமணி ஐயர் தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் .
மகரிஷி. இயற்பெயர் டி.கே. பாலசுப்ரமணியம். இவர், மே 1, 1932ல் தஞ்சாவூரை அடுத்த ஒரத்தநாட்டில், டி.என். கிருஷ்ணசாமி-மீனாட்சி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிப்பருவத்திலேயே எழுதத் துவங்கிவிட்டார்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

தமிழ் இலக்கிய காலத்தில் தவிர்க்க முடியாத ஆளுமை பெற்றவராக மகரிஷி திகழ்ந்தார். சுமார் 130 புதினங்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60 கட்டுரை இலக்கிய நூல்களை எழுதியுள்ளார்.

22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக்குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது முதல் புதினம் "பனிமலை" வெளிவந்து சில வருடங்களில், அது 1965ல் "என்னதான் முடிவு" என்ற திரைப்படமாக வெளிவந்தது.

மேலும் இவரது மற்ற புதினங்களும் தொடர்ந்து திரைப்படமாக வெளிவந்தது.

பத்ரகாளி (1977),
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு (1977),
புவனா ஒரு கேள்விக்குறி (1977), வட்டத்துக்குள் சதுரம் (1978),
மற்றும் நதியை தேடி வந்த கடல் (1980)
என திரைப்படங்களாக அவரின் நாவல்கள் வெள்ளித்திரையில் மின்னியது.


‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது என்பது இவரின் கதை சொல்லும் திறமை எடுத்துக்காட்டு.

தனிப்பட்ட ஓர் எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே என்பது கூடுதல் சிறப்பு.

அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான் என்பதும் கவனிக்கத் தக்க ஒன்று.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நடித்த கடைசி படம் கதை மகரிஷி எழுதியது. ‘நதியை தேடிவந்த கடல்’ நாவல், அதே பெயரில் படமானது. அதில் ஜெயலலிதா நடித்திருந்தார் . அவரது பாத்திரம் அப்போது தமிழ் சினிமா உலகில் மிகவும் பிரபலமானது.

சமுதாய நிகழ்வுகளும், வறுமை மற்றும் வாழ்க்கைச் சூழல் இவரை எழுதத் தூண்டின. இந்து மதத்தின்மீது கொண்ட பற்றாலும், ஞானிகள்மீது கொண்ட பெருமதிப்பாலும் 'மகரிஷி' என்ற புனைபெயரில் எழுத ஆரம்பித்தார்.


'ஒரத்தநாட்டிற்குச் சமர்ப்பணம்' என்ற இவரது கட்டுரை அக்காலத்தில் பரவலாகப் பேசப்பட்ட ஒன்று. இவரது படைப்புகளில் மிகவும் முக்கியமானதாக 'ஸ்படிகம்' குறுநாவலைச் சொல்லலாம். காந்தியக் கொள்கைகளின் பெருமையைப் பேசும் இப்படைப்பு கல்கியில் வெளியானது. இதனைப் பிரபல மொழிபெயர்ப்பாளரான ஆன்டி சுந்தரேசன் 'Pure As a Crystal' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அவரே தெலுங்கிலும் இதனை மொழிபெயர்த்திருக்கிறார்.

இவரது படைப்புகள்

மகாநதி,
உயிர்த்துடிப்பு,
மேகநிழல்,
எதிர்காற்று,
புழுதிப் புயல்,
இலையுதிர்காலம்,
காந்தமுனை,
அக்கினி வளையம்,
அண்ணா,
ஒன்றுக்குள் ஓராயிரம்,
துயரங்கள் உறங்குவதில்லை,
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு,
ஒரு முன்பனிக்காலம்,
பனிப்போர்,
புதிய பூ,
ஜோதி வந்து பிறந்தாள்,
நிழலைத் தேடியவர்கள்,
வண்டிச்சக்கரம்,
பாடிப் பறந்தவள்,
தேர்க்கால்,
வாழ்ந்துகாட்டுவோம் வா,
விட்டில் அணைத்த விளக்கு,
போன்ற இவரது படைப்புகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை.


பூர்ணிமா' என்ற இவரது நாவல் முக்கியமானது. இது தொலைக்காட்சித் தொடராகவும் வெளியாகிப் புகழ்பெற்றது

300க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல், சமுக விழிப்புணர்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். கல்கி சிறுகதைப் போட்டிப் பரிசு, எழுத்துச் சித்தர் விருது, நாவல் திலகம், நாவல் மணி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். கவியோகி சுத்தானந்த பாரதியார் 'நாவல் மகரிஷி' என்ற பட்டத்தை இவருக்களித்து கௌரவித்திருக்கிறார்.

Conclusion:
பிரபல நாவலாசிரியர் மகரிஷி நேற்று இரவு 9.00 மணியளவில் சேலத்தில் காலமானார். இன்று அன்னாரின் உடல் சேலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.