ETV Bharat / state

கர்நாடகா - தமிழ்நாடு எல்லைப்பகுதியில் வாகனங்கள் செல்ல தடை!

author img

By

Published : Aug 14, 2019, 10:28 PM IST

சேலம்: காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கர்நாடகா - தமிழ்நாடு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கிராமங்களுக்குள் வாகனங்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை நான்காவது நாளாக நீடிக்கிறது.

tamilnadu karnataka border cauvery issue

கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மலை பகுதிகளில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருவதால் கர்நாடக மாநில கபினி, கிருஷ்ணராஜ சாகர் போன்ற அணைகள் நிரம்பி வருகின்றன. இதனால் கார்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் பல லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

நீர் வரத்து அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணையில் நீரின் அளவு 100 அடியை எட்டியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு கர்நாடக மாநிலங்களின் எல்லைப் பகுதியான பாலாறு அடுத்த கோபிநத்தம் , செங்கப்பாடி, புதூர், ஜம்பூத்து, கோட்டூர் உள்ளிட்ட காவிரிக்கரை கிராமங்களுக்குள் வாகனங்கள் செல்ல கர்நாடக மாநில வனத்துறை தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு கர்நாடக எல்லைப்பகுதி

இந்த தடை கடந்த நான்கு நாட்களாக நீடிப்பதால் அந்தப் பகுதிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கர்நாடக மாநில எல்லையில் உள்ள சோதனைச்சாவடியோடு திருப்பி விடப்படுகின்றனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மலை பகுதிகளில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருவதால் கர்நாடக மாநில கபினி, கிருஷ்ணராஜ சாகர் போன்ற அணைகள் நிரம்பி வருகின்றன. இதனால் கார்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் பல லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

நீர் வரத்து அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணையில் நீரின் அளவு 100 அடியை எட்டியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு கர்நாடக மாநிலங்களின் எல்லைப் பகுதியான பாலாறு அடுத்த கோபிநத்தம் , செங்கப்பாடி, புதூர், ஜம்பூத்து, கோட்டூர் உள்ளிட்ட காவிரிக்கரை கிராமங்களுக்குள் வாகனங்கள் செல்ல கர்நாடக மாநில வனத்துறை தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு கர்நாடக எல்லைப்பகுதி

இந்த தடை கடந்த நான்கு நாட்களாக நீடிப்பதால் அந்தப் பகுதிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கர்நாடக மாநில எல்லையில் உள்ள சோதனைச்சாவடியோடு திருப்பி விடப்படுகின்றனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Intro:காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கர்நாடகா தமிழ்நாடு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கிராமங்களுக்குள் வாகனங்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை 4 நாட்களாக நீடிக்கிறது.


Body:கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மலை பகுதிகளில் கடந்த 10 நாளுக்கும் மேலாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இதனையடுத்து கர்நாடக மாநில கபினி, கிருஷ்ணராஜசாகர் அணை உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனைத் தொடர்ந்து கர்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் பல லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி இன்று மதியம் நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109 அடியைத் தொட்டு உள்ளது. மேட்டூர் அணை நீர் மட்டம் 100 அடியை தொட்ட நிலையில் நேற்று காலை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன வசதிக்காக 10 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட்டார்.

இந்த நிலையில் தமிழ்நாடு கர்நாடக மாநிலங்களின் எல்லைப் பகுதியான பாலாறு அடுத்த கோபிநத்தம் , செங்கப்பாடி,புதூர், ஜம்பூத்து , கோட்டூர் உள்ளிட்ட காவிரிக்கரை கிராமங்களுக்குள் வாகனங்கள் செல்ல கர்நாடக மாநில வனத்துறை தடை விதித்துள்ளது.

இந்த தடை கடந்த 4 நாட்களாக நீடிப்பதால் அந்த பகுதிக்கு செல்லும் கிராம மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கர்நாடக மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடியோடு திருப்பி விடப்படுகின்றனர்.

காவிரி ஆற்றில் வெள்ளம் அதிக அளவில் வந்து கொண்டிருப்பதால் கோபிநத்தம் உள்ளிட்ட காவிரி கரை கிராமங்களுக்குள் செல்ல வேண்டாம் என்றும் கர்நாடக வனத்துறை பொது மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. வெள்ளப்பெருக்கு நின்ற பிறகு காவிரிக்கரை கிராமங்களுக்குள் பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கர்நாடக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.


Conclusion:காவிரி கரையோர கிராமங்களுக்கு வாகனங்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை நான்கு நாட்களாக நீடிப்பதால் கிராம மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.