பள்ளி மாணவ, மாணவிகளிடம் தற்காப்பு கலையை வளர்க்கும் நோக்கில் சேலத்தில் உள்ள காந்தி விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.
இதில் கும்மிடி, கட்டாக் என இரு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தினர். அரசுப் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகள், கராத்தே போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டது காண்போரை வெகுவாக கவர்ந்தனர்.
இதையும் படிங்க: கோடோி கிராமத்தில் புகுந்த காட்டுயானையால் மக்கள் அச்சம்!