ETV Bharat / state

சேலம் மாவட்டத்தில் ஆறுபேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு - மருத்துவ கல்லூரி முதல்வர் தகவல்

சேலம்: மாவட்டத்தில் ஆறு பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதாகவும், அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவக் கல்லூரி முதல்வர் திருமால்பாபு தெரிவித்துள்ளார்.

மருத்துவ கல்லூரி முதல்வர் திருமால் பாபு
author img

By

Published : Sep 27, 2019, 5:26 PM IST


இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்," சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் இல்லை . இதுவரை காய்ச்சல் அறிகுறியுடன் 110 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர் . அவர்களில் 6 பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு தனி வார்டில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகள்
சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகள்

கடந்தாண்டை விட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் இல்லை. இதற்கு பொதுமக்களிடம், அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளே காரணம். மேலும் காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி பொதுமக்கள் சிகிச்சை பெற்றுக் கொள்ள முன்வரவேண்டும்.

குறிப்பாக அவர்களே மருந்து எடுத்துக் கொள்ளக்கூடாது. அதேபோல் தனியார் மருத்துவமனைகள் நோயாளியை தீவிர நிலையில் அரசு மருத்துவமனைக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும். லேசான காய்ச்சல் அறிகுறி இருந்தாலும் ரத்த பரிசோதனை செய்து கொண்டு, அதற்கு தகுந்தாற்போல் பொதுமக்கள் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. காய்ச்சல் அறிகுறி தென்படும் போது பொதுமக்கள் அதிகம் தண்ணீர் குடிப்பது, அரிசி கஞ்சி, ஆகியவற்றை உட்கொண்டு உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சேலம் அரசு பொது மருத்துவமனையை பொருத்த வரை டெங்கு காய்ச்சல் குணமான பிறகும் நோயாளிகள் இரண்டு நாள் தங்கி முழுபரிசோதனை செய்து கொண்டு முழுமையாக டெங்கு குணமானது என்று தெரிந்த பிறகு வீட்டிற்குச் செல்லும் வகையில் "ஸ்டெப் டவுன் வார்டு" அமைக்கப்பட உள்ளது. அது இன்னும் 48 மணி நேரத்திற்குள் செயல்பாட்டுக்கு வரும்" என்றார்.


இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்," சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் இல்லை . இதுவரை காய்ச்சல் அறிகுறியுடன் 110 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர் . அவர்களில் 6 பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு தனி வார்டில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகள்
சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகள்

கடந்தாண்டை விட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் இல்லை. இதற்கு பொதுமக்களிடம், அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளே காரணம். மேலும் காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி பொதுமக்கள் சிகிச்சை பெற்றுக் கொள்ள முன்வரவேண்டும்.

குறிப்பாக அவர்களே மருந்து எடுத்துக் கொள்ளக்கூடாது. அதேபோல் தனியார் மருத்துவமனைகள் நோயாளியை தீவிர நிலையில் அரசு மருத்துவமனைக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும். லேசான காய்ச்சல் அறிகுறி இருந்தாலும் ரத்த பரிசோதனை செய்து கொண்டு, அதற்கு தகுந்தாற்போல் பொதுமக்கள் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. காய்ச்சல் அறிகுறி தென்படும் போது பொதுமக்கள் அதிகம் தண்ணீர் குடிப்பது, அரிசி கஞ்சி, ஆகியவற்றை உட்கொண்டு உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சேலம் அரசு பொது மருத்துவமனையை பொருத்த வரை டெங்கு காய்ச்சல் குணமான பிறகும் நோயாளிகள் இரண்டு நாள் தங்கி முழுபரிசோதனை செய்து கொண்டு முழுமையாக டெங்கு குணமானது என்று தெரிந்த பிறகு வீட்டிற்குச் செல்லும் வகையில் "ஸ்டெப் டவுன் வார்டு" அமைக்கப்பட உள்ளது. அது இன்னும் 48 மணி நேரத்திற்குள் செயல்பாட்டுக்கு வரும்" என்றார்.

Intro:சேலத்தில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை முதல்வர் திருமால் பாபு தெரிவித்துள்ளார்.


Body:சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக புகார் எழுந்துள்ளது இந்நிலையில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருமால் பாபு ," சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் இல்லை . இதுவரை காய்ச்சல் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 110 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர் . அவர்களில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு தனி வார்டில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சென்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் இல்லை. இதற்கு பொதுமக்கள் மத்தியில் அரசு சார்பில் செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளே காரணம். சேலம் மருத்துவமனையில் தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகளும் காய்ச்சலுக்கான சிகிச்சை பெற்று வருகிறார்கள் . காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி பொதுமக்கள் சிகிச்சை பெற்றுக் கொள்ள முன்வரவேண்டும். அவர்களாகவே மெடிக்கல் மூலம் மருந்து மாத்திரை வாங்கி சாப்பிடுவது ஊசி போட்டுக்கொள்வது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் . தனியார் மருத்துவமனைகள் நோயாளியை சீரியஸான நிலையில் அரசு மருத்துவமனைக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும். முதல் ஒரு சில நாட்களிலேயே இரத்தப்பரிசோதனை செய்து டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அவர்களை அனுப்பிட வேண்டும். காய்ச்சல் அறிகுறி தென்படும் போது பொதுமக்கள் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் . அரிசி கஞ்சி சாதம் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சேலம் அரசு பொது மருத்துவமனையில் பொருத்த வரை டெங்கு காய்ச்சல் குணமான பிறகும் இரண்டு நாள் தங்கி முழுபரிசோதனை செய்து கொண்டு முழுமையாக டெங்கு குணமானது என்று தெரிந்த பிறகு வீட்டிற்குச் செல்லும் வகையில் ஸ்டெப் டவுன் வார்டு அமைக்கப்பட உள்ளது. அது இன்னும் 48 மணி நேரத்திற்கு செயல்பாட்டுக்கு வரும்" என்று தெரிவித்தார்.


Conclusion:மேலும் அவர் கூறுகையில் ,'டெங்கு காய்ச்சலுக்கு பொதுமக்கள் பயப்பட வேண்டாம் மலேரியா டைபாய்டு காய்ச்சல் போன்றதுதான் டெங்குவும். தகுந்த சிகிச்சையை உரிய நேரத்தில் எடுத்துக் கொண்டால் பூரணகுணம் அடையலாம்' என்றும் தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.