ETV Bharat / state

காவலர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள் வழங்கிய காவல் ஆணையர் - கரோனா செய்திகள்

சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு வைட்டமின் மாத்திரைகளை மாநகர காவல் ஆணையர் செந்தில் வழங்கினார்.

salem-cop-gives-medicine-to-police
salem-cop-gives-medicine-to-police
author img

By

Published : Apr 28, 2020, 8:40 PM IST

உலகையே உலுக்கும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைப்பிடிக்க காவல் துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு ஆரோக்கியத் திட்டத்தின் கீழ், வைட்டமின் மாத்திரைகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

மாநகர காவல் ஆணையர் செந்தில்

அதன்படி, சேலம் மாநகர காவலர்களுக்கு ஹோமியோபதி மாத்திரைகளை, சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில் இன்று வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர், 'ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து சேலத்தில் கட்டுப்பாடுகளை மீறும் குற்றச் சம்பவங்கள் பெரும்பாலும் குறைந்து விட்டன' எனத் தெரிவித்தார்.

அதையடுத்து அவர், 'இந்த ஊரடங்கு உத்தரவில் அனுமதிக்கப்படாத நேரங்களில் வெளியில் சுற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமல்லால், அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்' எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிகழ்ச்சியில் இந்தியன் ஹோமியோபதி மெடிக்கல் அசோசியேசன் மருத்துவர் அன்பரசி, மருத்துவர்கள், காவல் துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கரோனா தடுப்பு பணியாளர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

உலகையே உலுக்கும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைப்பிடிக்க காவல் துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு ஆரோக்கியத் திட்டத்தின் கீழ், வைட்டமின் மாத்திரைகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

மாநகர காவல் ஆணையர் செந்தில்

அதன்படி, சேலம் மாநகர காவலர்களுக்கு ஹோமியோபதி மாத்திரைகளை, சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில் இன்று வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர், 'ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து சேலத்தில் கட்டுப்பாடுகளை மீறும் குற்றச் சம்பவங்கள் பெரும்பாலும் குறைந்து விட்டன' எனத் தெரிவித்தார்.

அதையடுத்து அவர், 'இந்த ஊரடங்கு உத்தரவில் அனுமதிக்கப்படாத நேரங்களில் வெளியில் சுற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமல்லால், அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்' எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிகழ்ச்சியில் இந்தியன் ஹோமியோபதி மெடிக்கல் அசோசியேசன் மருத்துவர் அன்பரசி, மருத்துவர்கள், காவல் துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கரோனா தடுப்பு பணியாளர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.