தமிழ்நாடு முழுவதும் மோட்டார் தொழிலாளர்களுக்கு நிவாரணமாக மாதம் ரூ. 7,500 வழங்கிட வேண்டும், 2020 டிசம்பர் வரை இன்சூரன்ஸ் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறன.
அதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும், வாகன கடன் செலுத்த டிசம்பர் வரை கால அவகாசம் வழங்க வேண்டும், தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், காலாவதியான டோல்கேட்டை அகற்ற வேண்டும் உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட செயலாளர் எஸ்.கே. தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: விவசாயி சந்தேக மரணம்: சிபிஐ விசாரணைக்கோரி ஆர்ப்பாட்டம்