ETV Bharat / state

தீ விபத்தில் எரிந்து நாசமான மாட்டுத் தீவனம் - கண்ணீர் வடிக்கும் விவசாயி

சேலம்: ஓமலூர் அருகே ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான மாட்டுத் தீவனத் தட்டை எரிந்து நாசமானது.

author img

By

Published : Jan 21, 2020, 10:41 AM IST

salem
salem

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகேயுள்ள ரங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணா. இவர் தன்னுடைய கால்நடைகளின் தீவனத் தேவைகளுக்காக, சோளத்தட்டை கட்டுகளை சேமித்து வைத்துள்ளார். இந்நிலையில் எதிர்பாராமல் அந்த சோளதட்டில் தீப்பிடித்து மளமளவென்று எரியத் தொடங்கியது. அருகாமையில் செங்கல் சூளை இருப்பதால் அங்கிருந்தவர்கள் செங்கல் வேகவைக்க தீமூட்டி இருப்பார்கள் என நினைத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த விவசாயி கிருஷ்ணா, கால்நடைக்காக வைத்திருந்த தீவனம் எரிவதை கண்டு, உடனடியாக ஓமலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவலளித்துள்ளார். தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அனைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 2 லட்சம் மதிப்பிலான சோளத்தட்டுக்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக விவசாயி கிருஷ்ணா வேதனையுடன் தெரிவித்தார்.

தீ விபத்தில் எரிந்து நாசமான மாட்டுத் தீவனம்

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகேயுள்ள ரங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணா. இவர் தன்னுடைய கால்நடைகளின் தீவனத் தேவைகளுக்காக, சோளத்தட்டை கட்டுகளை சேமித்து வைத்துள்ளார். இந்நிலையில் எதிர்பாராமல் அந்த சோளதட்டில் தீப்பிடித்து மளமளவென்று எரியத் தொடங்கியது. அருகாமையில் செங்கல் சூளை இருப்பதால் அங்கிருந்தவர்கள் செங்கல் வேகவைக்க தீமூட்டி இருப்பார்கள் என நினைத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த விவசாயி கிருஷ்ணா, கால்நடைக்காக வைத்திருந்த தீவனம் எரிவதை கண்டு, உடனடியாக ஓமலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவலளித்துள்ளார். தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அனைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 2 லட்சம் மதிப்பிலான சோளத்தட்டுக்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக விவசாயி கிருஷ்ணா வேதனையுடன் தெரிவித்தார்.

தீ விபத்தில் எரிந்து நாசமான மாட்டுத் தீவனம்
Intro:ஓமலூர் அருகே ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் விவசாயி ஒருவர் கால்நடைகளுக்கு வைத்திருந்த சுமார் 2 லட்சம் மதிப்புள்ள மாட்டுத் தீவனத் தட்டை எரிந்து நாசமானது.
Body:

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகில் உள்ள ரங்கனூர் பகுதியில் விவசாயி கிருஷ்ணாரெட்டி வசித்து வருகிறார்.

இவர் தன்னுடைய கால்நடைகளின் தீவன தேவைகளுக்காக, சோளத்தட்டை கட்டுகளை சேமித்து வைத்துள்ளார்.

இந்த நிலையில் எதிர்பாராமல் அந்த சோளதட்டில் தீபிடித்து மளமளவென்று எரிய தொடங்கியது. பக்கத்தில் செங்கல் சூலை இருப்பதால், அக்கம்பக்கம் உள்ளவர்கள் செங்கல் வேகவைக்க தீமூட்டி இருப்பார்கள் என நினைத்து கண்டுகொள்ளாத இருந்து விட்டனர்.

இதைத்தொடர்ந்து விவசாயி கிருஷ்ணா ரெட்டி அருகில் வந்து பார்த்தபோது தன்னுடை கால்நடை தீவனம் எரிவதை கண்டு அதிர்ச்சியில் ஓமலூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவலறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீ அக்கம்பக்கம்பரவாமல் அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 2லட்சம் சோளத்தட்டுக்கள் எரிந்து சேதமானது.

Conclusion: இந்த தீவிபத்தினால் அப்பகுதி சுமார் ஒரு மணி நேரம் அளவிற்கு புகைமூட்டமாக காட்சியளித்தது. இதனால் பொதுமக்கள் சுவாசிக்க முடியாமல் அவதிப்பட்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.