ETV Bharat / state

சமூக இடைவெளியை பின்பற்றாத மருந்தகத்துக்கு சீல்

author img

By

Published : Mar 27, 2020, 6:27 PM IST

ராமநாதபுரம்: சமூக இடைவெளியை பின்பற்றாத மருந்தகத்துக்கு மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் சீல் வைத்தார்.

ராமநாதபுரத்தில் மருந்தகத்திற்கு சீல் வைத்த மாவட்ட ஆட்சியர்
ராமநாதபுரத்தில் மருந்தகத்திற்கு சீல் வைத்த மாவட்ட ஆட்சியர்

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் காய்கறி கடைகள், மளிகை கடைகள், மருந்தகங்கள் உள்ளிட்டவை செயல்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் அங்கு சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் கரோனா தொற்றை தடுப்பதற்கான சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை. இது குறித்து, மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் நேரடியாக ஆய்வு செய்து சமூக இடைவெளி பின்பற்றுமாறு கடைக்காரர்களிடம் அறிவுரை கூறியிருந்தார்.

ராமநாதபுரத்தில் மருந்தகத்திற்கு சீல் வைத்த மாவட்ட ஆட்சியர்

இந்நிலையில், ராமநாதபுரம் பஜார் பகுதியில் மாவட்ட ஆட்சியர் இன்று ஆய்வு மேற்கொண்டபோது, அப்பகுதியில் இயங்கிவரும் மருந்தகம் ஒன்றில் மக்கள் அனைவரும் நெருக்கமாக நின்றிருந்தனர். இதைக் கண்ட மாவட்ட ஆட்சியர், மருந்தக உரிமையாளரை கண்டித்து பின்பு மருந்தகத்துக்கு சீல் வைத்தார்.

இதையும் படிங்க: காட்டுத்தீயில் பெண் குழந்தைகள் இருவர் உள்பட 4 பேர் உயிரிழப்பு!

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் காய்கறி கடைகள், மளிகை கடைகள், மருந்தகங்கள் உள்ளிட்டவை செயல்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் அங்கு சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் கரோனா தொற்றை தடுப்பதற்கான சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை. இது குறித்து, மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் நேரடியாக ஆய்வு செய்து சமூக இடைவெளி பின்பற்றுமாறு கடைக்காரர்களிடம் அறிவுரை கூறியிருந்தார்.

ராமநாதபுரத்தில் மருந்தகத்திற்கு சீல் வைத்த மாவட்ட ஆட்சியர்

இந்நிலையில், ராமநாதபுரம் பஜார் பகுதியில் மாவட்ட ஆட்சியர் இன்று ஆய்வு மேற்கொண்டபோது, அப்பகுதியில் இயங்கிவரும் மருந்தகம் ஒன்றில் மக்கள் அனைவரும் நெருக்கமாக நின்றிருந்தனர். இதைக் கண்ட மாவட்ட ஆட்சியர், மருந்தக உரிமையாளரை கண்டித்து பின்பு மருந்தகத்துக்கு சீல் வைத்தார்.

இதையும் படிங்க: காட்டுத்தீயில் பெண் குழந்தைகள் இருவர் உள்பட 4 பேர் உயிரிழப்பு!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.