புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள சுங்கச்சாவடி அருகில் தேநீர்க் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. ஊரடங்கு காரணமாக அந்தக் கடை பூட்டியே இருந்தது.
இந்நிலையில், நேற்று அந்த தேநீர்க் கடையில் மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டு கூரைக் கொட்டகை முற்றிலும் எரிந்து நாசமானது. இதனிடையே, கடைக்குள் படுத்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட அடையாளம் தெரியாத பெண் (55) ஒருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர், கந்தர்வக்கோட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : நெருக்கடியான நேரத்தில் விலையேற்ற நடவடிக்கை கொடூரமானது - சிதம்பரம்