ETV Bharat / state

வேங்கைவயல் விவகாரம்; சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய அனுமதி கோரி சிபிசிஐடி மனு!

author img

By

Published : Jul 13, 2023, 11:05 PM IST

வேங்கைவயல் வழக்கில் 4 சிறார்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய அனுமதி கேட்டு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் மனு அளித்திருந்த நிலையில், மனுவை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Etv Bharat
Etv Bharat

புதுக்கோட்டை: முத்துக்காடு ஊராட்சிக்குட்பட்ட வேங்கைவயலில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நடைபெற்று 200 நாள்கள் ஆகக்கூடிய நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் (CB CID Investigation Vengaivayal Case) தொடர்ந்து விசாரணை நடத்தி வரக்கூடிய சூழ்நிலையிலும் இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை.

இந்நிலையில் தான், குற்றவாளிகளை கண்டறிய சிபிசிஐடி அதிகாரிகள் டிஎன்ஏ பரிசோதனை (DNA test in Vengaivayal case) மேற்கொள்ள முடிவெடுத்து நீதிமன்றத்தை நாடிய நிலையில் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் முதற்கட்டமாக 11 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரிகள் எடுக்க அனுமதி கொடுத்தது. இதனைத்தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி 11 பேரை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வருமாறு சிபிசிஐடி அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர்.

இதில், மூன்று பேர் மட்டும் ஆஜரான நிலையில் வேங்கைவயலைச் சேர்ந்த பட்டியலின மக்கள் எட்டு பேர் ஆஜராகவில்லை. பின்னர் அந்த எட்டு பேரும் ரத்த மாதிரிகள் கொடுக்காமல் இருந்த நிலையில் பின்னர் சிபிசிஐடி அதிகாரிகள் மேலும் 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றத்தில் அனுமதி பெற்று அந்த 10 பேருக்கும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரியும், அதேபோல் இருவருக்கு குரல் மாதிரி பரிசோதனையும் செய்து சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, டிஎன்ஏ பரிசோதனைக்கு ரத்த மாதிரி கொடுக்க மறுப்பு தெரிவித்த வேங்கைவயலைச் சேர்ந்த எட்டு பேரில் ஒருவரான முத்துகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையை நாடி பாதிக்கப்பட்ட மக்களையே, அதிகாரிகள் பரிசோதனைக்குட்படுத்த முயல்வதாக வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் அடிப்படையில் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள மறுப்பு தெரிவித்த எட்டு பேரும் வழக்கு விசாரணை நடைபெறும் புதுக்கோட்டை வன்கொடுமை நீதிமன்றத்தையே நாடி தீர்வு காணலாம் என உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட எட்டு பேரும் கடந்த 30 ஆம் தேதி புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆஜரானவர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதற்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு நகலை சம்பந்தப்பட்ட எட்டு நபர்களிடமும் நீதிபதி ஜெயந்தி வழங்கி அதனைப் படித்துப் பார்த்து அதில், ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் ஜூலை 1 ஆம் தேதி மீண்டும் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களது விளக்கத்தை தெரிவிக்கலாம் என்று கூறி அந்த எட்டு பேரையும் அனுப்பி வைத்தார்.

அதன்பின், கடந்த 1 ஆம் தேதி சம்பந்தப்பட்ட எட்டு பேரும் மீண்டும் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். மேலும், இவர்களுடன் இந்த வழக்கை விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டியும் ஆஜரானார். இந்த நிலையில் டிஎஸ்பி பால்பாண்டியிடம் நீதிபதி, இந்த வழக்கில் டிஎன்ஏ பரிசோதனை எதனால் செய்யப்படுகிறது என விளக்கம் கேட்ட நிலையில் டிஎஸ்பி பால்பாண்டியன், இந்த வழக்கை பொறுத்தவரை அறிவியல் பூர்வமாக அணுக வேண்டிய நிலை உள்ளதால் அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட எட்டு பேருக்கு மட்டும் டிஎன்ஏ பரிசோதனை எடுக்க அனுமதி கேட்கவில்லை என்றும் அந்தப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட ஏட்டு பேரிடம் தனித்தனியாக எதற்காக டிஎன்ஏ பரிசோதனை எடுக்க மறுப்பு தெரிவிக்கிறீர்கள் என்று நீதிபதி ஜெயந்தி கேள்வி எழுப்பிய நிலையில், அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களையே விசாரணைக்குட்படுத்தி டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதாகவும் அதனால், டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவிப்பதாக எட்டு பேரும் தனித்தனியாக ஒரே பதிலை தெரிவித்தனர்.

இதனை ஏற்ற நீதிபதி இந்த வழக்கில் ஜூலை 4 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்ததாக கூறி ஒத்திவைத்தார். அதன் அடிப்படையில் வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேரும் கடந்த ஜூலை 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர். இதேபோல் சிபிசிஐடி அதிகாரிகள் தரப்பில் ஆய்வாளர் புவனேஸ்வரி ஆஜரானார். இதன்பின் இந்த வழக்கு குறித்து எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில் டிஎன்ஏ மாதிரி பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேரும் டிஎன்ஏ பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இதற்காக மறுநாள் (ஜூலை 5) எட்டு பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று ரத்த மாதிரி கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

சிறார்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை: இதனையடுத்து, கடந்த 5 ஆம் தேதி வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டிஎன்ஏ பரிசோதனைக்கான ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. வேங்கைவயல் வழக்கு சம்பந்தமாக இதுவரை அந்த பகுதியைச் சேர்ந்த 21 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனைக்கான ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி அதிகாரிகள் நான்கு சிறார்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய அனுமதி கேட்டு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.

இதனையடுத்து இறையூர் வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த நான்கு சிறுவர்களின் பெற்றோர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் 16 வயதுடைய சிறுவன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டிஎன்ஏ பரிசோதனைக்கு ஆட்சேபனை தெரிவித்து நீதிபதியிடம் கூறினார். மேலும் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சிபிசிஐடி அதிகாரிகள் சம்மன் வழங்கியது எப்படி எனவும் கேள்வி எழுப்பினர்.

வரும் 14 ஆம் தேதி விசாரணை: இறையூரைச் சேர்ந்த மூன்று சிறுவர்களின் பெற்றோரும் ஆஜராகி இருந்தனர். மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ஆட்சேபனை தெரிவித்ததை தொடர்ந்து, இந்த வழக்கை வரும் 14 ஆம் தேதிக்கு புதுக்கோட்டை வன்கொடுமை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி ஒத்திவைத்தார். வருகின்ற 14 ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் சம்பந்தப்பட்ட நான்கு சிறுவர்களையும் பெற்றோர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வர நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: முன்னாள் டிஜிபி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடக்கம்:மர்ம நபர்கள் அட்டூழியம்!

புதுக்கோட்டை: முத்துக்காடு ஊராட்சிக்குட்பட்ட வேங்கைவயலில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நடைபெற்று 200 நாள்கள் ஆகக்கூடிய நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் (CB CID Investigation Vengaivayal Case) தொடர்ந்து விசாரணை நடத்தி வரக்கூடிய சூழ்நிலையிலும் இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை.

இந்நிலையில் தான், குற்றவாளிகளை கண்டறிய சிபிசிஐடி அதிகாரிகள் டிஎன்ஏ பரிசோதனை (DNA test in Vengaivayal case) மேற்கொள்ள முடிவெடுத்து நீதிமன்றத்தை நாடிய நிலையில் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் முதற்கட்டமாக 11 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரிகள் எடுக்க அனுமதி கொடுத்தது. இதனைத்தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி 11 பேரை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வருமாறு சிபிசிஐடி அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர்.

இதில், மூன்று பேர் மட்டும் ஆஜரான நிலையில் வேங்கைவயலைச் சேர்ந்த பட்டியலின மக்கள் எட்டு பேர் ஆஜராகவில்லை. பின்னர் அந்த எட்டு பேரும் ரத்த மாதிரிகள் கொடுக்காமல் இருந்த நிலையில் பின்னர் சிபிசிஐடி அதிகாரிகள் மேலும் 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றத்தில் அனுமதி பெற்று அந்த 10 பேருக்கும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரியும், அதேபோல் இருவருக்கு குரல் மாதிரி பரிசோதனையும் செய்து சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, டிஎன்ஏ பரிசோதனைக்கு ரத்த மாதிரி கொடுக்க மறுப்பு தெரிவித்த வேங்கைவயலைச் சேர்ந்த எட்டு பேரில் ஒருவரான முத்துகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையை நாடி பாதிக்கப்பட்ட மக்களையே, அதிகாரிகள் பரிசோதனைக்குட்படுத்த முயல்வதாக வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் அடிப்படையில் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள மறுப்பு தெரிவித்த எட்டு பேரும் வழக்கு விசாரணை நடைபெறும் புதுக்கோட்டை வன்கொடுமை நீதிமன்றத்தையே நாடி தீர்வு காணலாம் என உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட எட்டு பேரும் கடந்த 30 ஆம் தேதி புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆஜரானவர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதற்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு நகலை சம்பந்தப்பட்ட எட்டு நபர்களிடமும் நீதிபதி ஜெயந்தி வழங்கி அதனைப் படித்துப் பார்த்து அதில், ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் ஜூலை 1 ஆம் தேதி மீண்டும் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களது விளக்கத்தை தெரிவிக்கலாம் என்று கூறி அந்த எட்டு பேரையும் அனுப்பி வைத்தார்.

அதன்பின், கடந்த 1 ஆம் தேதி சம்பந்தப்பட்ட எட்டு பேரும் மீண்டும் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். மேலும், இவர்களுடன் இந்த வழக்கை விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டியும் ஆஜரானார். இந்த நிலையில் டிஎஸ்பி பால்பாண்டியிடம் நீதிபதி, இந்த வழக்கில் டிஎன்ஏ பரிசோதனை எதனால் செய்யப்படுகிறது என விளக்கம் கேட்ட நிலையில் டிஎஸ்பி பால்பாண்டியன், இந்த வழக்கை பொறுத்தவரை அறிவியல் பூர்வமாக அணுக வேண்டிய நிலை உள்ளதால் அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட எட்டு பேருக்கு மட்டும் டிஎன்ஏ பரிசோதனை எடுக்க அனுமதி கேட்கவில்லை என்றும் அந்தப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட ஏட்டு பேரிடம் தனித்தனியாக எதற்காக டிஎன்ஏ பரிசோதனை எடுக்க மறுப்பு தெரிவிக்கிறீர்கள் என்று நீதிபதி ஜெயந்தி கேள்வி எழுப்பிய நிலையில், அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களையே விசாரணைக்குட்படுத்தி டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதாகவும் அதனால், டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவிப்பதாக எட்டு பேரும் தனித்தனியாக ஒரே பதிலை தெரிவித்தனர்.

இதனை ஏற்ற நீதிபதி இந்த வழக்கில் ஜூலை 4 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்ததாக கூறி ஒத்திவைத்தார். அதன் அடிப்படையில் வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேரும் கடந்த ஜூலை 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர். இதேபோல் சிபிசிஐடி அதிகாரிகள் தரப்பில் ஆய்வாளர் புவனேஸ்வரி ஆஜரானார். இதன்பின் இந்த வழக்கு குறித்து எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில் டிஎன்ஏ மாதிரி பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேரும் டிஎன்ஏ பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இதற்காக மறுநாள் (ஜூலை 5) எட்டு பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று ரத்த மாதிரி கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

சிறார்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை: இதனையடுத்து, கடந்த 5 ஆம் தேதி வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டிஎன்ஏ பரிசோதனைக்கான ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. வேங்கைவயல் வழக்கு சம்பந்தமாக இதுவரை அந்த பகுதியைச் சேர்ந்த 21 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனைக்கான ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி அதிகாரிகள் நான்கு சிறார்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய அனுமதி கேட்டு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.

இதனையடுத்து இறையூர் வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த நான்கு சிறுவர்களின் பெற்றோர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் 16 வயதுடைய சிறுவன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டிஎன்ஏ பரிசோதனைக்கு ஆட்சேபனை தெரிவித்து நீதிபதியிடம் கூறினார். மேலும் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சிபிசிஐடி அதிகாரிகள் சம்மன் வழங்கியது எப்படி எனவும் கேள்வி எழுப்பினர்.

வரும் 14 ஆம் தேதி விசாரணை: இறையூரைச் சேர்ந்த மூன்று சிறுவர்களின் பெற்றோரும் ஆஜராகி இருந்தனர். மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ஆட்சேபனை தெரிவித்ததை தொடர்ந்து, இந்த வழக்கை வரும் 14 ஆம் தேதிக்கு புதுக்கோட்டை வன்கொடுமை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி ஒத்திவைத்தார். வருகின்ற 14 ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் சம்பந்தப்பட்ட நான்கு சிறுவர்களையும் பெற்றோர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வர நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: முன்னாள் டிஜிபி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடக்கம்:மர்ம நபர்கள் அட்டூழியம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.