வன உயிரின வார விழா அக்டோபர் இரண்டாம் தேதி தொடங்கி இன்று (அக.8) வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் பெரம்பலூரில் இதன் நிறைவு விழாவை முன்னிட்டு வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் சாந்தா கலந்துகொண்டு நீதிமன்றத்திலிருந்து விளையாட்டு மைதானம்வரை உள்ள சாலையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். குறிப்பாக வேம்பு, புங்கன் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
மேலும் விழாவில் வன அலுவலர் இளங்கோவன், வட்டாட்சியர் பாரதி வளவன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கேமரா மூலமாக இந்திய அரசு நடத்திய வனவிலங்கு கணக்கெடுப்புக்கு கின்னஸ் அங்கீகாரம்