ETV Bharat / state

திமுகவின் அத்தியாயம் முடிந்துவிட்டது -ராமதாஸ்

பெரம்பலூர் : திமுகவோடு கூட்டு சேர்வது மாலை போட்டு கழுத்தை அறுப்பதற்கு சமம் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Mar 28, 2019, 9:45 PM IST

டாக்டர்.ராமதாஸ்

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் பரப்புரை மேற்கொண்டார்.

பரப்புரையின்போது ராமதாஸ் திமுகவை மிக கடுமையாக விமர்சித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ராமதாஸ் பேசியதாவது, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக இருக்கும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் ஒரு கல்விக் கொள்ளையர் என்றும், இந்த தேர்தலில் திமுகவின் அத்தியாயம் முடிவுக்கு வந்துவிடும் எனவும் விமர்சித்தார்.

மேலும், திமுகவோடு கூட்டு சேர்வது மாலை போட்டு கழுத்தை அறுப்பதற்கு சமம். இந்த தேர்தலில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் டெபாசிட் இழக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை ஆகும் என ராமதாஸ் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் பரப்புரை மேற்கொண்டார்.

பரப்புரையின்போது ராமதாஸ் திமுகவை மிக கடுமையாக விமர்சித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ராமதாஸ் பேசியதாவது, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக இருக்கும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் ஒரு கல்விக் கொள்ளையர் என்றும், இந்த தேர்தலில் திமுகவின் அத்தியாயம் முடிவுக்கு வந்துவிடும் எனவும் விமர்சித்தார்.

மேலும், திமுகவோடு கூட்டு சேர்வது மாலை போட்டு கழுத்தை அறுப்பதற்கு சமம். இந்த தேர்தலில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் டெபாசிட் இழக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை ஆகும் என ராமதாஸ் தெரிவித்தார்.

Intro:இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் அத்தியாயம் முடிவுக்கு வருவதாக பெரம்பலூரில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேச்சு


Body:தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகின்றார் இதனிடையே பெரம்பலூர் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள வானொலி திடலில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டார் இந்தப் பிரச்சாரத்தில் ராமதாஸ் பேசியதாவது பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக இருக்கும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் ஒரு கல்விக் கொள்ளையர் என்றும் இந்த தேர்தலில் திமுக அவருடைய அத்தியாயம் முடிவுக்கு வருவதாகவும் தெரிவித்தார் மேலும் திமுகவோடு கூட்டு சேர்வது மாலை போட்டு கழுத்தை அறுப்பதற்கு சமம் என தெரிவித்தார் மேலும் என்னுடைய ஆசை என்னவென்றால் இந்த தேர்தலில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் டெபாசிட் இழக்க வேண்டும் என்பதே ஆகும்


Conclusion:இந்தப் பிரச்சார கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் தமிழ்ச்செல்வன் பாட்டாளி மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் வைத்தி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி உள்ளிட்ட கூட்டணி கட்சி பொறுப் பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.