ETV Bharat / state

கட்டடத் தொழிலாளி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை!

நாமக்கல்: கட்டடத் தொழிலாளி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, அவரது மனைவி, மகளிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டட தொழிலாளி பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை! Burning Death நாமக்கல் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை! சேந்தமங்கலம் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை! sendhamangalam Burning Death Namakkal Burning Death
sendhamangalam Burning Death
author img

By

Published : Mar 12, 2020, 6:00 PM IST

நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கு அங்கம்மாள் என்ற மனைவியும், சாந்தி என்ற மகளும் உள்ளனர். கந்தசாமி ஒரு கட்டடத் தொழிலாளி. கந்தசாமி நேற்று வழக்கம் போல் பணிக்குச் சென்று விட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். இதைத் தொடர்ந்து, நேற்றிரவு அவரது மனைவி அங்கம்மாள் தந்தை வீட்டுக்கு, மகளுடன் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கந்தசாமி தனது வீட்டின் வெளிப்புறப் பகுதியில், தனியாக கயிற்றுக் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை திடீரென கந்தசாமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், அங்கு சென்ற பார்த்த போது கந்தசாமியும், அவரது கட்டிலும் நெருப்பில் எரிந்து கொண்டிருந்தது.

அங்கிருந்தவர்கள், உடனடியாக தீயை அணைத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த தீக்காயமடைந்த கந்தசாமி தன் மீது தனது மனைவியும், மகளும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக வாக்குமூலம் அளித்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

தீ பிடித்த தொழிலாளியின் வீடு

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சேந்தமங்கலம் காவல் துறையினர் கந்தசாமியின் மனைவி அங்கம்மாள், அவரது மகள் சாந்தியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:இந்து முன்னணி பிரமுகரின் இருசக்கர வாகனம் எரிப்பு

நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கு அங்கம்மாள் என்ற மனைவியும், சாந்தி என்ற மகளும் உள்ளனர். கந்தசாமி ஒரு கட்டடத் தொழிலாளி. கந்தசாமி நேற்று வழக்கம் போல் பணிக்குச் சென்று விட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். இதைத் தொடர்ந்து, நேற்றிரவு அவரது மனைவி அங்கம்மாள் தந்தை வீட்டுக்கு, மகளுடன் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கந்தசாமி தனது வீட்டின் வெளிப்புறப் பகுதியில், தனியாக கயிற்றுக் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை திடீரென கந்தசாமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், அங்கு சென்ற பார்த்த போது கந்தசாமியும், அவரது கட்டிலும் நெருப்பில் எரிந்து கொண்டிருந்தது.

அங்கிருந்தவர்கள், உடனடியாக தீயை அணைத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த தீக்காயமடைந்த கந்தசாமி தன் மீது தனது மனைவியும், மகளும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக வாக்குமூலம் அளித்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

தீ பிடித்த தொழிலாளியின் வீடு

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சேந்தமங்கலம் காவல் துறையினர் கந்தசாமியின் மனைவி அங்கம்மாள், அவரது மகள் சாந்தியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:இந்து முன்னணி பிரமுகரின் இருசக்கர வாகனம் எரிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.