ETV Bharat / state

ரசாயனம் தடவிய பச்சை பட்டாணிகள் விற்பனை - பொதுமக்கள் அதிர்ச்சி

author img

By

Published : Jan 20, 2023, 7:59 PM IST

நாமக்கல்லில் காய்கறி கடைகளில்‌ ஆய்வு செய்த அதிகாரிகள், ரசாயனம் கலந்த பச்சை பட்டாணிகளை பறிமுதல் செய்து அழித்தனர்.

Etv Bharat
Etv Bharat

நாமக்கல்: திருச்செங்கோடு தினசரி மார்க்கெட்டில் பச்சை பட்டாணிக்கு பதிலாக காய்ந்த பட்டாணியை தண்ணீரில் ஊற வைத்து பச்சையாக தெரிவதற்காக பச்சை வண்ணம் சேர்த்து விற்பதாக நகராட்சி அதிகாரிகளிடம் புகார் வந்தது. புகாரை அடுத்து நகராட்சி ஆணையாளர் கணேசன் உத்தரவின் பேரில் இன்று (ஜன.20) துப்புரவு ஆய்வாளர் குமரவேல் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் தினசரி மார்க்கெட்டில் காய்கறி கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சில காய்கறி கடைகளில் காய்ந்த பட்டாணிகளை மூட்டை மூட்டையாக வாங்கி வைத்து பாத்திரங்களில் பச்சை நிறம் கொண்ட ரசாயன பவுடர்களை தண்ணீரில் கலந்து, அதில் பட்டாணிகளை ஊறவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் இது போன்ற நிறம் கலந்த பட்டாணிகளை விற்பனை செய்வது குற்றமென தெரிவித்த அதிகாரிகள், இனிமேல் இதுபோல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். பச்சை பட்டாணி கிலோ ரூ 50 முதல் 80 வரை தோலுடன் விற்கப்படுவதால் குறைவான விலைக்கு பச்சை வண்ணம் பூசப்பட்ட இந்த பட்டாணி விற்பனை செய்யப்படுகிறது.

அதனை பொட்டலமாக பத்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது.‌ இனிமேல் இவ்வாறு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் காய்கறி கடைக்காரர்களை எச்சரித்தனர்.‌ பறிமுதல் செய்யப்பட்ட வண்ணம் பூசப்பட்ட பட்டாணிகள் அழிக்கப்பட்டன.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு சாக்லேட்டுக்குள் கஞ்சா.. பீடா கடையில் நூதனம்..

நாமக்கல்: திருச்செங்கோடு தினசரி மார்க்கெட்டில் பச்சை பட்டாணிக்கு பதிலாக காய்ந்த பட்டாணியை தண்ணீரில் ஊற வைத்து பச்சையாக தெரிவதற்காக பச்சை வண்ணம் சேர்த்து விற்பதாக நகராட்சி அதிகாரிகளிடம் புகார் வந்தது. புகாரை அடுத்து நகராட்சி ஆணையாளர் கணேசன் உத்தரவின் பேரில் இன்று (ஜன.20) துப்புரவு ஆய்வாளர் குமரவேல் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் தினசரி மார்க்கெட்டில் காய்கறி கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சில காய்கறி கடைகளில் காய்ந்த பட்டாணிகளை மூட்டை மூட்டையாக வாங்கி வைத்து பாத்திரங்களில் பச்சை நிறம் கொண்ட ரசாயன பவுடர்களை தண்ணீரில் கலந்து, அதில் பட்டாணிகளை ஊறவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் இது போன்ற நிறம் கலந்த பட்டாணிகளை விற்பனை செய்வது குற்றமென தெரிவித்த அதிகாரிகள், இனிமேல் இதுபோல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். பச்சை பட்டாணி கிலோ ரூ 50 முதல் 80 வரை தோலுடன் விற்கப்படுவதால் குறைவான விலைக்கு பச்சை வண்ணம் பூசப்பட்ட இந்த பட்டாணி விற்பனை செய்யப்படுகிறது.

அதனை பொட்டலமாக பத்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது.‌ இனிமேல் இவ்வாறு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் காய்கறி கடைக்காரர்களை எச்சரித்தனர்.‌ பறிமுதல் செய்யப்பட்ட வண்ணம் பூசப்பட்ட பட்டாணிகள் அழிக்கப்பட்டன.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு சாக்லேட்டுக்குள் கஞ்சா.. பீடா கடையில் நூதனம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.