ETV Bharat / state

வைரஸ் காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு எதிரொலி சுகாதாரத்துறை முகாம் - வைரஸ் காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு

நாமக்கல்: வைரஸ் காய்ச்சலால் ஆறு வயது சிறுமி உயிரிழந்ததையடுத்து சுகாதாரத் துறையினர் ஜேடர்பாளையம் பகுதி முழுவதும் சிறப்பு முகாமிட்டு வருகின்றனர்....

six year old baby death
author img

By

Published : Nov 5, 2019, 12:36 PM IST

நாமக்கல் மாவட்டம் பெரியமணலி அடுத்த ஜேடர்பாளையம் சௌடேஸ்வரி அம்மன் தெருவைச் சேர்ந்த யுவராஜ்(38) -மீனா (26) தம்பதி. விசைத்தறி தொழில் செய்து வரும் இவர்களுக்கு நித்தியஸ்ரீ (6) என்ற மகள் இருந்தார். கடந்த வாரம் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நித்தியஸ்ரீ நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சையில் முன்னேற்றமில்லாததால், சிறுமியை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த சிறுமி நித்தியஸ்ரீ
உயிரிழந்த சிறுமி நித்தியஸ்ரீ

அதனையடுத்து அப்பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு அங்கு வேறு யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என பரிசோதித்து பாதிப்பு உள்ளவர்களுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.

கொசுக்கள் பரவாமல் இருக்க கொசுமருந்து
கொசுக்கள் பரவாமல் இருக்க கொசுமருந்து

மேலும், உள்ளாட்சித்துறை சார்பில் சாக்கடையை சுத்தம் செய்து கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டம் பெரியமணலி அடுத்த ஜேடர்பாளையம் சௌடேஸ்வரி அம்மன் தெருவைச் சேர்ந்த யுவராஜ்(38) -மீனா (26) தம்பதி. விசைத்தறி தொழில் செய்து வரும் இவர்களுக்கு நித்தியஸ்ரீ (6) என்ற மகள் இருந்தார். கடந்த வாரம் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நித்தியஸ்ரீ நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சையில் முன்னேற்றமில்லாததால், சிறுமியை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த சிறுமி நித்தியஸ்ரீ
உயிரிழந்த சிறுமி நித்தியஸ்ரீ

அதனையடுத்து அப்பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு அங்கு வேறு யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என பரிசோதித்து பாதிப்பு உள்ளவர்களுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.

கொசுக்கள் பரவாமல் இருக்க கொசுமருந்து
கொசுக்கள் பரவாமல் இருக்க கொசுமருந்து

மேலும், உள்ளாட்சித்துறை சார்பில் சாக்கடையை சுத்தம் செய்து கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

Intro:நாமக்கல் அருகே வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்குள்ளான 6 வயது சிறுமி உயிரிழப்பு, சுகாதார துறையினர் அப்பகுதியில் சிறப்பு முகாம்Body:நாமக்கல் அருகே வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்குள்ளான 6 வயது சிறுமி உயிரிழப்பு, சுகாதார துறையினர் அப்பகுதியில் சிறப்பு முகாம்

நாமக்கல் மாவட்டம் பெரியமணலி அடுத்த ஜேடர்பாளையம் சௌடேஸ்வரி அம்மன் தெருவை சேர்ந்த யுவராஜ்(38). மீனா (26) தம்பதியினர். விசைத்தறி தொழிலில் மற்றும் நூல் வியாபாரம் செய்து வரும் இவர்களுக்கு நித்தியஸ்ரீ (6) வயது மகள் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த வாரம் காய்ச்சல் பாதிப்பால் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக தெரிகிறது. அவருக்கு காய்ச்சல் குறையாத நிலையில் நித்தியஸ்ரீயை அவரது பெற்றோர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சிறுமி உயிரிழந்ததை அடுத்து அப்பகுதியில் சுகாதார துறையினர் முகாமிட்டு அங்கு வேறு யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என கண்டறிந்து அவர்களுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கினர். மேலும் உள்ளாட்சி துறை சார்பில் சாக்கடையை சுத்தம் செய்து கொசு மருந்து தெளிக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.