ETV Bharat / state

கொல்லிமலை நீர்மின் திட்டம் - மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

author img

By

Published : Oct 3, 2020, 12:44 PM IST

நாமக்கல்: கொல்லிமலையில் ரூ.338.79 கோடி மதிப்பீட்டிலான 20 மெகா வாட் நீர்மின் திட்ட சுரங்கப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

power
power

கொல்லிமலை வாழ் பழங்குடி மக்களின் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அய்யாறு நீரை கொண்டு 338 கோடி ரூபாய் மதிப்பில் 20 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டம், கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வளப்பூர் நாடு கிராம பகுதிகளில் உள்ள அய்யாறு ஆற்று கிளை ஓடைகளின் குறுக்கே அச்சங்காடுபட்டி, கோவிலூர், தெளியங்கூடு, இருங்குளிப்பட்டி மற்றும் காடம்பள்ளம் ஆகிய 5 இடங்களில், கலிங்குகள் அமைத்து மழைக் காலங்களில் கிடைக்கும் நீரை பயன்படுத்தி, 20 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மழைநீரை இருங்குளிப்பட்டியில் அமைக்கப்பட்டு வரும் கலிங்கிலிருந்து 1953 மீட்டர் தூரம் சுரங்கம் அமைத்து, செல்லிப்பட்டிக்கு கொண்டு சென்று அங்கிருந்து குழாய் மூலம் கொல்லிமலையின் தெற்குப்பகுதியில் உள்ள அடிவாரத்தில் நீர்மின் நிலையம் அமைத்து 20 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படவுள்ளது. மின் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்ட நீரை மீண்டும் அய்யாறு ஆற்றிலேயே விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொல்லிமலை நீர்மின் திட்டம் - ஆட்சியர் நேரில் ஆய்வு

இந்நிலையில், கொல்லிமலை நீர்மின் திட்டத்தின் கீழ் தெளியங்கூடு பகுதியில் நீர் சேகரிப்பிற்காக கட்டப்பட்டு வரும் கலிங்குகள், சுரங்கப் பாதைகளை மாவட்ட ஆட்சியர் மெகராஜ் மற்றும் அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின்னர் பேசிய அவர், ” இப்பணிகள் 2023 இல் முடிக்கப்பட்டு மின் உற்பத்தி துவங்கும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டிற்கு 71.23 மில்லியன் யூனிட் மின்சாரம் கிடைக்கும். இந்த மின்சாரம் கொல்லிமலையை சுற்றியுள்ள கிராமங்களுக்கு பயன்படுத்தப்படும். கலிங்குகளில் தேக்கப்படும் தண்ணீரால் கொல்லிமலை பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, சுற்றுலாவும் மேம்படும் ” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ’தான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெற வேண்டும்' நடராஜன் தங்கராசு குறித்த சிறப்பு தொகுப்பு!

கொல்லிமலை வாழ் பழங்குடி மக்களின் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அய்யாறு நீரை கொண்டு 338 கோடி ரூபாய் மதிப்பில் 20 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டம், கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வளப்பூர் நாடு கிராம பகுதிகளில் உள்ள அய்யாறு ஆற்று கிளை ஓடைகளின் குறுக்கே அச்சங்காடுபட்டி, கோவிலூர், தெளியங்கூடு, இருங்குளிப்பட்டி மற்றும் காடம்பள்ளம் ஆகிய 5 இடங்களில், கலிங்குகள் அமைத்து மழைக் காலங்களில் கிடைக்கும் நீரை பயன்படுத்தி, 20 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மழைநீரை இருங்குளிப்பட்டியில் அமைக்கப்பட்டு வரும் கலிங்கிலிருந்து 1953 மீட்டர் தூரம் சுரங்கம் அமைத்து, செல்லிப்பட்டிக்கு கொண்டு சென்று அங்கிருந்து குழாய் மூலம் கொல்லிமலையின் தெற்குப்பகுதியில் உள்ள அடிவாரத்தில் நீர்மின் நிலையம் அமைத்து 20 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படவுள்ளது. மின் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்ட நீரை மீண்டும் அய்யாறு ஆற்றிலேயே விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொல்லிமலை நீர்மின் திட்டம் - ஆட்சியர் நேரில் ஆய்வு

இந்நிலையில், கொல்லிமலை நீர்மின் திட்டத்தின் கீழ் தெளியங்கூடு பகுதியில் நீர் சேகரிப்பிற்காக கட்டப்பட்டு வரும் கலிங்குகள், சுரங்கப் பாதைகளை மாவட்ட ஆட்சியர் மெகராஜ் மற்றும் அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின்னர் பேசிய அவர், ” இப்பணிகள் 2023 இல் முடிக்கப்பட்டு மின் உற்பத்தி துவங்கும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டிற்கு 71.23 மில்லியன் யூனிட் மின்சாரம் கிடைக்கும். இந்த மின்சாரம் கொல்லிமலையை சுற்றியுள்ள கிராமங்களுக்கு பயன்படுத்தப்படும். கலிங்குகளில் தேக்கப்படும் தண்ணீரால் கொல்லிமலை பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, சுற்றுலாவும் மேம்படும் ” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ’தான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெற வேண்டும்' நடராஜன் தங்கராசு குறித்த சிறப்பு தொகுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.