ETV Bharat / state

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு! - பணம் திருட்டு

நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஏழு சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற திருடர்களை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளை..!
author img

By

Published : Jul 21, 2019, 7:43 AM IST

நாமக்கல்லை அடுத்துள்ள புலவர்ப்பாளையத்தில் உலகநாதன் - ரூபாதேவி தம்பதியர் வசித்துவருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தனர். பின்னர் நேற்று காலையில் திரும்பிவந்து பார்க்கும்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு!

உள்ளே சென்று பார்க்கும்போது வீட்டின் அலமாரியிலிருந்த ஏழு சவரன் தங்கநகைகள், ஒரு கிலோ வெள்ளிப்பொருட்கள், 5,000 ரூபாய் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

உடனடியாக இச்சம்பவம் குறித்து பரமத்தி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் வீட்டில் ஆய்வு செய்தனர். இத்திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்லை அடுத்துள்ள புலவர்ப்பாளையத்தில் உலகநாதன் - ரூபாதேவி தம்பதியர் வசித்துவருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தனர். பின்னர் நேற்று காலையில் திரும்பிவந்து பார்க்கும்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு!

உள்ளே சென்று பார்க்கும்போது வீட்டின் அலமாரியிலிருந்த ஏழு சவரன் தங்கநகைகள், ஒரு கிலோ வெள்ளிப்பொருட்கள், 5,000 ரூபாய் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

உடனடியாக இச்சம்பவம் குறித்து பரமத்தி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் வீட்டில் ஆய்வு செய்தனர். இத்திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:நாமக்கல் பரமத்திவேலூர் அருகே 7 சவரன் தங்க நகை கொள்ளை



Body:நாமக்கல்லை அடுத்துள்ள புலவர்ப்பாளையத்தில் உலகநாதன் மற்றும் ரூபாதேவி தம்பதியர். இவர்கள் நேற்று இரவு  குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தனர். பின்னர் இன்று காலையில் திரும்பிவந்து பார்க்கும்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சிடைந்துள்ளார். உள்ளே சென்று பார்க்கும்போது வீட்டின் பீரோவில் இருந்த 7 சவரன் தங்கநகைகள், 1 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் 5000 ரூபாய் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வீட்டில் ஆய்வு செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.