ETV Bharat / state

சூடான் தீ விபத்து - ராமகிருஷ்ணனின் உண்மை நிலை என்ன? மாவட்ட ஆட்சியரிடம் உறவினர்கள் மனு... - petition to hand over son body to family

கர்த்தூம்: சூடான் தீ விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படும் ராமகிருஷ்ணனின் உண்மை நிலையைக் கண்டறிய உறவினர்கள்  நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

sudan-fire
sudan-fire
author img

By

Published : Dec 7, 2019, 8:01 PM IST

சூடான் நாட்டின் தலைநகரான கர்த்தூமில் செராமிக் ஆலையில் இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வந்தனர். இந்த ஆலையில் சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 18 இந்தியர்கள் உட்பட 23 பேர் உயிரிழந்தனர். 130 பேர் படுகாயம் அடைந்ததாக சூடான் அரசு தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் சிக்கியவர்களில் 18 பேர் இந்தியர்கள், அதில் மூன்று பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு இந்திய தூதரக அலுவலர்கள் சென்று விபத்தில் சிக்கிய இந்தியர்கள் குறித்து விசாரித்து விவரங்கனை சேகரித்துவருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு கருகி இருப்பதால் அடையாளம் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

ராமகிருஷ்ணனின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க கோரிக்கை

இந்நிலையில், உயிரிழந்த மூவரில் ஒருவர் நாகை மாவட்டம், ஆலங்குடிச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்று கூறப்பட்டது. அதன் பின் அவர் இறக்கவில்லை தீ விபத்தின்போது அந்த தொழிற்சாலையில் இருந்து ராமகிருஷ்ணன் வெளியேறும் வீடியோ ஒன்று அவரின் உறவினர் வாட்ஸ்அப் எண்ணுக்கு வந்துள்ளது. இது குறித்து இந்திய தூதரகத்தில் விசாரித்தபோது தீ விபத்தின்போது காணாமல் போனவர்கள் பட்டியலில் ராமகிருஷ்ணன் பெயர் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விபத்து நடைபெற்று ஐந்து நாட்களுக்கு மேலாகியும், இந்திய தூதரகத்திலும் சரியான விபரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இது குறித்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ராமகிருஷ்ணனின் உண்மை நிலை என்ன என்பதை இந்திய தூதரகம் மூலம் அறிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்துள்ளனர்.

சூடான் நாட்டின் தலைநகரான கர்த்தூமில் செராமிக் ஆலையில் இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வந்தனர். இந்த ஆலையில் சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 18 இந்தியர்கள் உட்பட 23 பேர் உயிரிழந்தனர். 130 பேர் படுகாயம் அடைந்ததாக சூடான் அரசு தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் சிக்கியவர்களில் 18 பேர் இந்தியர்கள், அதில் மூன்று பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு இந்திய தூதரக அலுவலர்கள் சென்று விபத்தில் சிக்கிய இந்தியர்கள் குறித்து விசாரித்து விவரங்கனை சேகரித்துவருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு கருகி இருப்பதால் அடையாளம் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

ராமகிருஷ்ணனின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க கோரிக்கை

இந்நிலையில், உயிரிழந்த மூவரில் ஒருவர் நாகை மாவட்டம், ஆலங்குடிச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்று கூறப்பட்டது. அதன் பின் அவர் இறக்கவில்லை தீ விபத்தின்போது அந்த தொழிற்சாலையில் இருந்து ராமகிருஷ்ணன் வெளியேறும் வீடியோ ஒன்று அவரின் உறவினர் வாட்ஸ்அப் எண்ணுக்கு வந்துள்ளது. இது குறித்து இந்திய தூதரகத்தில் விசாரித்தபோது தீ விபத்தின்போது காணாமல் போனவர்கள் பட்டியலில் ராமகிருஷ்ணன் பெயர் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விபத்து நடைபெற்று ஐந்து நாட்களுக்கு மேலாகியும், இந்திய தூதரகத்திலும் சரியான விபரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இது குறித்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ராமகிருஷ்ணனின் உண்மை நிலை என்ன என்பதை இந்திய தூதரகம் மூலம் அறிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்துள்ளனர்.

Intro:சூடான் தனியார் செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த, நாகை, திட்டச்சேரி வாலிபர் ராமகிருஷ்ணன் உடலை மீட்டு தரக்கோரி உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு. ஐந்து நாட்களுக்கு மேலாகியும் மத்திய மாநில அரசுகள் எந்த அறிவிப்பும் வெளியிடாததால் உறவினர்கள் சோகம்.
Body:சூடான் தனியார் செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த, நாகை, திட்டச்சேரி வாலிபர் ராமகிருஷ்ணன் உடலை மீட்டு தரக்கோரி உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு. ஐந்து நாட்களுக்கு மேலாகியும் மத்திய மாநில அரசுகள் எந்த அறிவிப்பும் வெளியிடாததால் உறவினர்கள் சோகம்.


சூடான் தலைநகர் கர்த்தூமில் உள்ள தனியார்செராமிக் தொழிற்சாலையில் பல்வேறு நாடுகள்சேர்ந்தவர்கள் பணியாற்றி
வருகின்றனர். இத்தொழிற்சாலையில் கடந்த 3ஆம் தேதி காஸ்டேங்கர் ஒன்று வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 18 இந்தியர்கள் பலியாகி உள்ளதாகவும், பலரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகியது.

இந்த விபத்தில் நாகை மாவட்டம், திட்டச்சேரி அருகே உள்ளஆலங்குடிச்சேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமமூர்த்தி, முத்துலட்சுமி தம்பதியினரின் மகன் ராமகிருஷ்ணன்(25) என்பவரும் பலியானார். இதைக் கேட்ட அவரது உறவினர்கள் மட்டுமல்லாது அவரது கிராமமும் சோகத்தில் மூழ்கியது. இந்நிலையில் இந்திய தூதரகத்தில் விசாரித்த போது தீ விபத்தின் போது காணாமல் போனவர்கள் பட்டியலில் ராமகிருஷ்ணன் பெயர் உள்ளதாகவும் கூறப்படுகிறது.ஆனால், அவருடன் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு ஊழியர் ராமகிருஷ்ணன் தீ விபத்து ஏற்படும்போது தொழிற்சாலைக்குள் இருந்ததாகவும், நுழைவாயிலில் அருகே தீ விபத்து ஏற்பட்டதால் அவர் வெளியே தப்பி வர வாய்ப்பே இல்லை என்றும், அடையாளம் தெரியாத அளவிற்கு கருகிய நிலையில் உள்ள உடல் ராமகிருஷ்ணன் உடையதுதான் என்று அவரோடு பணியாற்றிய ஊழியர்கள் வாட்ஸப் மூலம் ஆடியோ ஒன்றையும் அனுப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராமகிருஷ்ணனின் பெற்றோரும் உறவினர்களும் கவலையடைந்துள்ளனர்
. இந்நிலையில் விபத்து நடைபெற்று ஐந்து நாட்களுக்கு மேலாகியும், இந்திய தூதரகத்திலும் சரியான விபரங்கள் எதுவும் தெரிவிக்கப்படாததால் கவலை அடைந்துள்ள அவரது உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நாகை மாவட்ட நிர்வாகம் இந்திய தூதரகத்தின் உதவியுடன் விரைவில் ராமகிருஷ்ண உடலை மீட்டுத்தரக்கோரியும், மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்துள்ளனர்.

பேட்டி -

01.ராமலிங்கம், இறந்தவரின் தந்தை

02. பிரகாஷ் ( உறவினர்)
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.