ETV Bharat / state

ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ்ஸுக்கு அஞ்சலி செலுத்திய கிராம மக்கள் - oman king Sultan Kabur bin Zayed died

நாகை: எரவாஞ்சேரி கிராம மக்கள் சமீபத்தில் உயிரிழந்த ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சயித்தின் உருவப்படத்தை வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

நாகை
நாகை
author img

By

Published : Jan 18, 2020, 8:31 AM IST

நாகை மாவட்டம் எரவாஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் ராஜேந்திரன் , கடந்த 36 ஆண்டுகளாக ஓமன் நாட்டில் தொழில் தொடங்கி தன் குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். அவர் மட்டுமன்றி எரவாஞ்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர் ராஜேந்திரன் பணிபுரியும் தொழில் நிறுவனத்தில் வேலைசெய்து பொருளாதாரத்தில் மேம்பாடு அடைந்து எரவாஞ்சேரி கிரமத்தில் வீடு கட்டியுள்ளனர். குறிப்பாக, ராஜேந்திரன் ஒமன் மன்னன் மீது வைத்துள்ள பற்றின் காரணமாக தனது வீட்டையும் வாசல் முகப்பையும் ஓமன் மன்னரின் வீட்டைப் போன்றே வடிவமைத்துக் கட்டியுள்ளார்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக ராஜேந்திரன் எரவாஞ்சேரிக்கு வந்துள்ள நேரத்தில், கடந்த 10ஆம் தேதி ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சயித் உடல் நலக்குறைவால் காலமானார்.

ஓமன் மன்னர் சுல்தான் காபூல் பின் சயித்துக்கு அஞ்சலி

இதையடுத்து, ராஜேந்திரன் வீட்டு வாசல் முன்பு திரண்ட ராஜேந்திரன் கிராம மக்கள் ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சயித் உருவப்படத்தை வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், "ஓமன் நாட்டில் வசிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டைச் சேர்ந்தவர்களையும் சாதி, மத பாகுபாடின்றி ஓமன் மன்னர் சரிசமமாக நடத்தினார். அங்கு ஆண்களுக்கு நிகராக பெண்களையும் முன்னேற்றப் பாதையில் மன்னர் அழைத்துச் சென்றார். ஓமன் மன்னரின் மறைவு ஓமன் நாட்டு மக்களுக்கும் அங்கு வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கும் பேரிழப்பு" என்றனர்.

இதையும் படிங்க: பெரியார் குறித்த பேச்சுக்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும்: திருமாவளவன்

நாகை மாவட்டம் எரவாஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் ராஜேந்திரன் , கடந்த 36 ஆண்டுகளாக ஓமன் நாட்டில் தொழில் தொடங்கி தன் குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். அவர் மட்டுமன்றி எரவாஞ்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர் ராஜேந்திரன் பணிபுரியும் தொழில் நிறுவனத்தில் வேலைசெய்து பொருளாதாரத்தில் மேம்பாடு அடைந்து எரவாஞ்சேரி கிரமத்தில் வீடு கட்டியுள்ளனர். குறிப்பாக, ராஜேந்திரன் ஒமன் மன்னன் மீது வைத்துள்ள பற்றின் காரணமாக தனது வீட்டையும் வாசல் முகப்பையும் ஓமன் மன்னரின் வீட்டைப் போன்றே வடிவமைத்துக் கட்டியுள்ளார்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக ராஜேந்திரன் எரவாஞ்சேரிக்கு வந்துள்ள நேரத்தில், கடந்த 10ஆம் தேதி ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சயித் உடல் நலக்குறைவால் காலமானார்.

ஓமன் மன்னர் சுல்தான் காபூல் பின் சயித்துக்கு அஞ்சலி

இதையடுத்து, ராஜேந்திரன் வீட்டு வாசல் முன்பு திரண்ட ராஜேந்திரன் கிராம மக்கள் ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சயித் உருவப்படத்தை வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், "ஓமன் நாட்டில் வசிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டைச் சேர்ந்தவர்களையும் சாதி, மத பாகுபாடின்றி ஓமன் மன்னர் சரிசமமாக நடத்தினார். அங்கு ஆண்களுக்கு நிகராக பெண்களையும் முன்னேற்றப் பாதையில் மன்னர் அழைத்துச் சென்றார். ஓமன் மன்னரின் மறைவு ஓமன் நாட்டு மக்களுக்கும் அங்கு வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கும் பேரிழப்பு" என்றனர்.

இதையும் படிங்க: பெரியார் குறித்த பேச்சுக்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும்: திருமாவளவன்

Intro:ஓமன் மன்னர் சுல்தான் காபூல் பின் சயித் மறைவிற்கு மயிலாடுதுறை அருகே எரவாஞ்சேரி கிராமமக்கள் பேனர் வைத்து அஞ்சலி செலுத்தினர்:-Body:மறைந்த ஓமன் மஸ்கட் மன்னர் சுல்தான் காபூல் பின் சயித்திற்கு நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா எரவாஞ்சேரி கிராமத்தில் பிளக்ஸ் பேனர் வைத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். எரவாஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவர் ஓமன் நாடு சென்று அங்கு தொழில் தொடங்கி 36 ஆண்டுகளாக தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவருடைய தொழில் நிறுவனத்தில் எரவாஞ்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர் வேலை செய்து பொருளாதாரத்தில் மேம்பாடு அடைந்து எரவாஞ்சேரி கிரமத்தில் வீடு கட்டியுள்ளனர். தற்போது ஏராளமானோர் வேலை ஓமன் நாட்டில் வேலை செய்து வருகின்றனர். ஓமன் நாட்டு மன்னரின் வீட்டை போன்று தன் சொந்த வீட்டின்; வாசல் முகப்பை அமைத்துள்ள ராஜேந்திரன் பொங்கல் பண்டிகைக்காக எரவாஞ்சேரிக்கு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி ஓமன் நாட்டு மன்னர் சுல்தான் காபூல் பின் சயித் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். ஒமன் மன்னருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ராஜேந்திரன் குடும்பத்தினர் மற்றும் கிராமமக்கள் ராஜேந்திரன் வீட்டு வாசல் முன்பு ஓமன் மன்னர் சுல்தான் காபூல் பின் சயித் உருவ படத்தை வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். ஓமன் நாட்டில் வேலை செய்தவர்கள் மற்றும் கிராமமக்கள் மன்னர் மறைவிற்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.
ஓமன் நாட்டில் வசிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டை சேர்ந்தவர்களையும் ஜாதிமத பாகுபாடின்றி ஓமன் மன்னர் சரிசமமாக நடத்தியதாகவும், ஆண்களுக்கு நிகராக பெண்களை முன்னேற்ற பாதையில் அழைத்து சென்றதாகவும், ஓமன் மன்னர் மனித நேயத்துடன் ஆட்சி நடத்தியதாகவும், கூறும் ராஜேந்திரன் மன்னரின் கொள்கைகள் ஓமன் நாட்டையும் தமிழர்களையும் முன்னேற்றியதாக கூறினார். ஓமன் மன்னரின் மறைவு ஓமன் நாட்டு மக்களுக்கும் அங்கு வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கும் பேரிழப்பு என்கின்றனர் எரவாஞ்சேரி கிராமமக்கள்.

பேட்டி: ராஜேந்திரன் ஒமன் நாட்டில் வசிப்பவர்Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.