ETV Bharat / state

மாநில அளவிலான கைப்பந்து போட்டியை விளையாடி தொடங்கி வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மாநில அளவிலான கைப்பந்தாட்டப் போட்டியை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் விளையாடி தொடங்கிவைத்தார். தொடர்ந்து, சுற்று சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் வழங்கினார்.

author img

By

Published : Jun 6, 2022, 1:29 PM IST

மாநில அளவிலான கைப்பந்து போட்டியை விளையாடி தொடங்கி வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்
மாநில அளவிலான கைப்பந்து போட்டியை விளையாடி தொடங்கி வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்

மயிலாடுதுறை: சீர்காழியில் மாநில அளவிலான கைப்பந்தாட்ட போட்டி தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 25 அணிகள் பங்கேற்றன. போட்டியை சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, விளையாட்டு, இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யனாதன் தொடங்கிவைத்தார்.

போட்டி தொடங்குவதற்கு முன் பங்கேற்ற அணிகளின் வீரர்கள் அமைச்சருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. பின்னர் கைப்பந்தினை எடுத்து விளையாடி அமைச்சர் போட்டியை தொடங்கிவைத்தார். இதில் எம்எல்ஏக்கள் பன்னீர்செல்வம், நிவேதா.முருகன் பங்கேற்றனர்.

மாநில அளவிலான கைப்பந்து போட்டியை விளையாடி தொடங்கி வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்

தொடர்ந்து உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி பொதுமக்களுக்கு மரக்கன்றுகளையும், தனியார் பள்ளியின் 50ஆம் ஆண்டுவிழாவையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

இதையும் படிங்க: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் அமைச்சர் சேகர்பாபு வழிபாடு

மயிலாடுதுறை: சீர்காழியில் மாநில அளவிலான கைப்பந்தாட்ட போட்டி தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 25 அணிகள் பங்கேற்றன. போட்டியை சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, விளையாட்டு, இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யனாதன் தொடங்கிவைத்தார்.

போட்டி தொடங்குவதற்கு முன் பங்கேற்ற அணிகளின் வீரர்கள் அமைச்சருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. பின்னர் கைப்பந்தினை எடுத்து விளையாடி அமைச்சர் போட்டியை தொடங்கிவைத்தார். இதில் எம்எல்ஏக்கள் பன்னீர்செல்வம், நிவேதா.முருகன் பங்கேற்றனர்.

மாநில அளவிலான கைப்பந்து போட்டியை விளையாடி தொடங்கி வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்

தொடர்ந்து உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி பொதுமக்களுக்கு மரக்கன்றுகளையும், தனியார் பள்ளியின் 50ஆம் ஆண்டுவிழாவையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

இதையும் படிங்க: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் அமைச்சர் சேகர்பாபு வழிபாடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.